இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

அய்யயோ அம்மா ஏதாச்சும் பேசி ஏழரையை இழுத்து விடுவாள் என்று பயந்து “ஆஹ்!! அது அம்மா வெளிய போயிருக்காங்க.. என்ன விஷயம் அத்தை சொல்லுங்க நான் அம்மா வந்ததும் சொல்லிடுறேன்”

புவனேஷ்வரி: அப்படியா குட்டி.. சரி ஜோசியர் உன் ஜாதகத்தையும் கேக்குறாரு.. அதான் உங்க அம்மா ட்ட கேட்டா முறையா இருக்கும் ன்னு நினச்சேன்..

கலை: ஜாதகம் தான அத்தை.. அது நானே அனுப்பி விடுறேன் உங்களுக்கு..

புவனேஷ்வரி: இது தான் நம்பர்.. (மறுபக்கம் கணவரிடம் திரும்பி ஏங்க அது பேர் என்ன ஆப்பா.. என்னது வாட்டப்பா.. ஓ வாட்ஸ்ஆப் ஆ) குட்டி மாமா நம்பர் சொல்றேன்.. நீ அதுல வாட்ஸ்ஆப் ல அனுப்பி விட்டுரு சரியா.. வச்சுரட்டுமா.. சரி குட்டி..

கலை ஜாதகத்தை எடுத்து அனுப்பி விட்டு மறுபடியும் மகிழ்ச்சியோடு சாய அவளது கைப்பேசி திரை மின்னியது.. எடுத்து பார்க்க சுபர்ணா என்று இருந்தது..

கலை வெறுப்புடன் எடுத்து காதில் வைத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.. மறுபுறமும் சில வினாடிகள் அமைதி.. சில வினாடிகள் கடந்த பின்னர் அமைதியையும் நிம்மதியையும் கலைக்குமாறு சுபர்ணாவின் குரல் ஒலித்தது..

சுபர்ணா: ஹலோ கலை..

அந்த குரலை கேட்டதும் கலைக்கு கோபம் இன்னும் அதிகம் வர, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..

சுபர்ணா: கலை இருக்கியா?? கலை..

கலை: ம்ம்ம்…

சுபர்ணா: கலை எனக்கு தெரியும் நீ என்மேல ரொம்ப கோபத்துல இருப்ப ன்னு.. ஆனா ஒன்னும் உன்னை வேணும்னே வேலைல இருந்து போக சொல்லல.. அது ராகுல் தான்.. நான் முடியாது ன்னு சொன்னாலும் எங்க அப்பா ட்ட பேசி அதை நடக்க வைப்பான்.. பயித்திய காரன்..

கலை: அவன் பயித்தியம் சைக்கோ எனக்கு நல்லா தெரியும்.. இதை சொல்ல தான் நீ போன் போட்டியா??

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.