விடிந்தது…. எல்லோரும் எழுந்து காரியங்களை கவனிக்க ஆரம்பித்தனர்…
சமையல் காரியங்களை கவனிக்க ஒரு குழு வந்திறங்கியது….
வீட்டுப்பெண்களுக்கு விடுமுறை விட்டாற்போல் ஆயிற்று….
வர்ஷினியும் பத்மினியும் எப்போதும் சேர்ந்தாற்போலவே சுற்றிக்கொண்டு இருந்தனர்…. இருவரின் கண்களும் எப்போதும் ரவியை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டு இருந்தன…..
பத்மினிக்கு ஆசை…… வர்ஷினிக்கு ஏக்கம்…..
“அக்கா!,,, அவரிடம் தனியா கொஞ்சம் பேச வேண்டும் வாங்கக்கா!… தோட்டத்துக்கு போயிடலாம்…” வர்ஷினி பத்மினியை அழைத்துக்கொண்டு ரவியையும் கூட்டிக்கொண்டு தோட்டத்துக்கு போனாள்…
மூவரும் மௌனமாகவே நடந்தனர்…கிணற்றடியை அடைந்தனர்…
“என்னை கல்யாணம் கட்டிக்கறேளா?….” வர்ஷினி ரவியை பார்த்து திடீரென கேட்டாள்….
பத்மினியும் ரவியும் திக்குமுக்காடி விட்டனர்….
“ஏய் என்னடி…. உனக்கு ஏதாவது பைத்தியமா?…” பத்மினி சிரிப்புடன் கேட்டாள்…
“ஆமாங்கக்கா!… ரவிஅத்தான்மேல பைத்தியம்….
“ வர்ஷினி திடீரென அழ ஆரம்பித்தாள்…
“ஏய் என்னடி ஆச்சு?….” பதறிய பத்மினி வர்ஷனியை தேற்றினாள்… மூவரும் கிணற்று மேட்டில் வட்டமாய் அமர்ந்தனர்..
“என்னை பிடிச்சிருக்கா?…. என்னை கல்யாணம் கட்டிக்கறேளா?….” வர்ஷினி மீண்டும் ரவியிடம் கேட்டாள்..
“என்ன திடீருன்னு?…” ரவி திணறினான்…
“திடீருன்னு இல்லைங்க!… இந்த ஒரு வருஷமாகவே கேட்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்….. சந்தர்ப்பம் இப்போதான் கிடைச்சது…..பாட்டி காலமாயிட்டாதாலே அம்மா ஏகத்துக்கு ரகளை பண்ணறா!… அண்ணாவாலே சமாளிக்க முடியலே.. அப்பா எப்பவும் போல அமைதியாய் இருக்கிறார்…. இந்த பிரச்சனையிலே என் காதல் பலியாயிடுமோன்னு நேக்கு திக்கு திக்குன்னு இருக்கு!… அதுதான் துணிஞ்சு கேட்டேன்…..ஏங்க!… நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?..”
பத்மினிக்கும் ரவிக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை….
“உங்க மனுஷா எல்லாம் ஒத்துக்குவாளா?….” பத்மினி கேட்டாள்..
“அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலையில்லை!… அவா ஒத்துட்டா ஊரறிய கல்யாணம்…. இல்லாட்டி ரிஜிஸ்டர் மேரேஜ்..” வர்ஷினி தீர்மானமாய் பேசினாள்…
ரவி என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான்…
பத்மினிதான் அவனுக்கு உதவ வந்தாள்….
“நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க அண்ணா!…. நான் இவ கிட்டே எல்லாத்தையும் சொல்லி கூட்டிட்டு வர்றேன்….”
“எல்லாத்தையுமா?.” ரவி ஆச்சர்யமாய் கேட்டான்….
“ஆமாங்க அண்ணா!… எல்லாவற்றையும்தான்…..” பத்மினி ரவியை பார்த்து அழுத்தமாய் கண்ணடித்தவாறே சிரித்தாள்..
ரவிக்கு சந்தோஷமாய் இருந்தது….
“சரி!… நீங்க ரெண்டுபேருமே இங்கே பேசிட்டு இருங்க!… நான் ஆத்துக்கே குளிக்கப்போறேன்….”
“எங்கே நம்ம ஆத்துக்கா?… அங்கே கூட்டமா இருக்குமே?…” வர்ஷினி கவலைப்பட…
“அட அசடே!… ப்ராமணாத்துபாஷையிலே அண்ணன் சொல்லலே!….சாதாரண பாஷையிலே ஆத்துக்கு போறேன்னு சொன்னா நதின்னு அர்த்தம்…. அதாவது இன்னும் கொஞ்சம் தள்ளி ஓடிக்கொண்டு இருக்கும் ஆறு….. அதாவது ரிவர்..”
“ச்சீ… போங்கக்கா!… முதல் தடவையிலேயே நேக்கு புரிஞ்சுடுத்து….” வர்ஷினி வெட்கமானாள்…
ரவி சிரித்தபடியே கிளம்பினான்…. இரு பெண்களும் அவன் போவதையே கண்கொட்டாமல் பார்த்தனர்….
“ஏண்டி!… பேசறப்பவே உனக்கும் ரவி அண்ணனுக்கும் இவ்வளவு குழப்பம் வருதே?… நாளைக்கு நீ அவரை கல்யாணம் கட்டிட்டு குடும்பம் நடத்தறப்போ இன்னும் என்ன என்ன குழப்பம் வருமோ?…”
“அதெல்லாம் ஒரு குழப்பமும் வராது…. அவர் பேசறச்சே… நான் பேசாம இருந்துட்டா சரியாயிடும்….. பேசறப்பத்தானே குழப்பம்… பேசாம இருக்கிறப்போ எல்லாம் குழப்பம் இருக்காது….”
“நீ எங்கடி பேசாம இருக்கப்போறே?… ..”
“ரெண்டு பேரும் பேசாம இருக்கிற நேரமும் இருக்குது….” வர்ஷினியின் கன்னங்களில் சிவப்பு ஏறியது….
“அடிப்பாவி… அதுக்குள்ளே நைட்டுக்கு போயிட்டியா?….” பத்மினி கிண்டலடித்தாள்..
“ஆமாக்கா!… எனக்கு படிக்கவே பிடிக்கலே!…. அவரை கல்யாணம் பண்ணிட்டு காலம்பூராவும் அவரையே சுத்தி சுத்தி வந்து குழந்தை குழந்தையா பெத்துக்கனும்போல இருக்கு!!….” வர்ஷினி வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்…
“ஏய்!… இந்த டயலாக்….. இந்த வெட்கம்… அப்படியே
“யாரடி நீ மோகினி” யில் வர சரண்யா மோகன் சொல்ற மாதிரியே இருக்குடி….” பத்மினி சிரித்தவாறே வர்ஷினியின் கன்னத்தை வருடினாள்…
“நீங்க சொல்றதும் சரிதான்….
“ வர்ஷினி சிரித்தாள்….
“சரி!… நீ சொல்ற மாதிரியேன்னு வச்சுக்குவோம்….. நீ எத்தனை குழந்தை பெத்துக்குவே?…” பத்மினி மடக்கினாள்..
16 to17 please