நண்பனின் காதலி – 7 58

ஆமாடா அப்படிதாண்டா என் வாழ்க்கை என்றான் விக்கி .கடைசில நீ என் ஆளு மேலே கை வச்சுட்ட நீ கில்லாடிடா என்று டேவிட் சிரித்து கொண்டே அவனிடிம் போதையில் தடுமாறினான் .ஐயோ மறுபடியும் திட்ட போறனோ என்று விக்கி பயந்தான் .பயப்படாத நான் உன்னையே திட்ட மாட்டேன் ஆனா நான் எப்படி ரெஜினாவ கழட்டி விட்டு அதாவது நீ கழட்டி விடுற மாதிரி இல்ல டைவர்ஸ் வாங்கிட்டு எப்படி சுவாதி கூட மறுபடியும் ஒன்னு சேருறது என்று டேவிட் கேட்க
ஐயோ என்னால சகிக்க முடியலையே என்று விக்கி நினைத்து கொண்டு ஒரு நிமிஷம் நான் பாத் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு பாத் ரூமில் போயி கோபமாக கத்தினான் .அதன் பின் போதையில் இருந்த டேவிட்டை அழைத்து கொண்டு அவன் வீட்டில் கொண்டு போயி விடுவதற்கு முன் மணிக்கு போன் போட்டு வர சொன்னான் .என்னடா ஏன் இந்நேரம் வர சொன்ன என்றான் .
டேய் இவன வீட்ல கொண்டு போயி விடனும் நான் கீழ இருக்கேன் .நீ மேல போயி இவன இவன் அப்பர்டேமேன்ட்ல விட்டுட்டு வா என்றான் ,ஏண்டா நீயே விடலாம்ல என்றான் மணி .எதுக்குப்பா வந்த முத நாளே என் புருஷன குடிக்க வச்சு கூப்பிட்டு வந்துட்டான்ன்னு இவன் பொண்டாட்டி என்னைய திட்டவா நீ போயி விட்டுட்டு வா நான் அப்புறம் உன்னையே வீட்ல விடுறேன் .அதன் பின் அவன் மணியையும் வீட்டில் விட்டு விட்டு கடுப்போடு வீட்டிற்கு போனான்

அடுத்த நாள் விக்கி ஆபிஸ் போனான் .வழக்கம் போல மணி வந்தான் .அப்புறம் என்ன நேத்து நீயும் டேவிட்டும் நல்லா என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .மயிற என்ஜாய் பண்ணோம் என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பரா என்ஜாய் பண்ணோம் என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்வி மணிய கேட்க விட கூடாது அவன் கேட்டா எப்ப பாத்தாலும் ஏன் டல்லா இருக்கேன்னு கேட்டு வாய புடுங்குறான் ,

நம்ம முந்திக்குவோம் என்று நினைத்து கொண்டு யே வள்ளிக்கும் உனக்கும் இருந்த சண்ட சால்வ் ஆகிடுச்சா என்றான் விக்கி ,எங்கடா எதுக்கு எடுத்தாலும் அப்பாவ பாக்கணும் அம்மாவ பாக்கணும் சொல்லி கிட்டு இருக்கா தமிழ் நாட்டுல பேயுர மழைக்கு தமிழ் நாட்டுக்குள்ளேயே போக முடியலையாம் இதுல அங்க இருந்து இங்க எப்படி அதுகள இங்க கூப்பிட்டு வரது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஒரு 3 நாள் லீவ் கேட்டு அங்க போயி என் அப்பா அம்மா அப்புறம் அவ அப்பா அம்மா எல்லாத்துக்கும் குழந்தைய காண்பிச்சுட்டு வரணும் என்றான் .
பின் ஒரு நான்கு நாட்கள் கழித்து மணி வீட்டிற்கு சென்றான் .போயி கதவை தட்டியதும் அங்கு மணி வந்து நின்றான் .என்னடா அதிசியாம ஞாயிற்று கிழமை அதுவும் காலைல வந்து இருக்க எங்கிட்டும் தமிழ் நாட்டுல பெய்யுற மழை மும்பைக்கு வர போகுதா என்று கிண்டல் அடித்தான் மணி .ஆமா வர போகுது நீ வள்ளி இருந்தா கொஞ்சம் வெளிய கூப்பிடு என்றான் .எதுக்குடா நீ உள்ள வாடா என்றான் மணி .நீ முதல கூப்பிடுடா என்றான் ,சரி வள்ளி இங்க வா என்றான் ,
என்னடா அதிசியாமா ஞாயிற்று கிழமை வந்து இருக்க மழை ஏதும் வர போகுதான்னு பாருங்க என்றாள் .அத தான் நானும் சொன்னேன் என்று சொல்லி மணி சிரித்தான் ,அதலாம் இருக்கட்டும் வள்ளி உனக்கு ஒரு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்கேன் அதனால கொஞ்சம் கண்ண மூடு என்றான் விக்கி ,அப்படி என்னடா எனக்கு தீடிருன்னு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்க என கேட்டாள் ,கேள்வி கேக்காம கண்ண மூடு என்றான் .

2 Comments

  1. Next part soon please

  2. Bro next part pudunga daily oru part podunga story super iruku

Comments are closed.