நண்பனின் காதலி – 7 58

பண்ணுங்க என்றாள் சுவாதி .சரி சத்தியம் பண்றேன் என்றாள் .பின் சுவாதி அஞ்சலி கையை எடுத்து சுவாதி தன் தலையில் வைத்து நான் உங்க கிட்ட விக்கிய பிடிச்சு இருக்குன்னு சொன்னதையும் அவன விரும்பேன்னு சொன்னதையும் எக்காரணத்த கொண்டும் அவனுக்கோ இல்ல வேற யார் கிட்டயும் சொல்ல கூடாது இது என் மேலயும் என் பிள்ள மேலயும் சத்தியம் என்றாள் சுவாதி .
அடி பாவி என்னைய ஏண்டி இப்படி ஒரு சத்தியம் பண்ண வச்ச என்று அஞ்சலி அதிர்ச்சியோடு கேட்க நான் நேசிக்கிற விரும்புற விக்கி என்னைய விட்டு பிரிஞ்சு இருந்தாலும் உயிரோட சந்தொசமாவச்சும் இருக்கணும் அதுக்கு தான் என்றாள் .
அட போடி என்று அஞ்சலி சலித்து கொண்டாள் ,நிஜமாத்தான் அக்கா பாருங்க இந்த டேவிட் என்னைய விட்டு பிரிஞ்சான் நிம்மதியா ஒரு பொண்ணோட குடும்பம் நடத்திகிட்டு இருக்கான் .அந்த மாதிரி விக்கியும் நிம்மதியா இருக்கட்டும் என்றாள் சுவாதி ,
அட போடி உன்னையே எவன் பிரிஞ்சாலும் ஏன்டா பிரிஞ்சொம்னு தான் வருத்தப்டுவாங்கே ஏன்னா நீ அழகானவ நல்லவ உன் கேரெக்டர் நல்ல கேரெக்டர் என்று அஞ்சலி சொல்ல
யார் சொன்னது நான் நல்லவன்னு என் கேறேக்டரும் நல்ல கேரெக்டர் இல்ல என்றாள் சுவாதி .ஏண்டி நீ நல்லவதான் என்று அஞ்சலி சொன்னாள் .இல்ல நான் கெட்டவ என்றாள் சுவாதி .ஒ புரிஞ்சு போச்சு மறுபடியும் நீ அந்த கொலை மேட்டருக்கே வர யே அத விடுடி உன் பிரண்ட நீ கொல்லல அது ஒரு விபத்து அத மறந்துடு என்றாள் அஞ்சலி .
இல்லக்கா என் கேரெக்டர் சரி இல்லாத கேரெக்டர் ஏண்டி சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று அஞ்சலி கடுப்போடு கேட்க
ஓகே ஓகே நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன் என்று சொல்லி சிரித்து கொண்டே அவள் தோளில் சாய்ந்தாள் .அக்கா உங்க கிட்ட இன்னொன்னு சொல்லட்டுமா என்று சுவாதி கேட்க தயவு செஞ்சு சஸ்பென்ஸ் இல்லாம சொல்லு என்றாள் அஞ்சலி.
அக்கா எனக்கு விக்கிய முத முத பாத்தப்பயே பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .எப்ப நீ டேவிட் லவ் பண்ணும் போதே சைடுல அவன லுக் விட்டாயா அவன் மேல எதுவும் கிரஸ் அந்த மாதிரி பிடிச்சு போச்சா என்று அஞ்சலி கிண்டல் அடிக்க
இல்லக்கா நான் டேவிட்ட பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்து இருக்கேன் .இன்னும் சொல்ல போனா உங்கள எல்லாத்தையும் பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்தேன் . நான் மும்பை வந்ததும் விக்கிய எதார்தாமா பாத்தேன் அப்பவே எனக்கு அவன பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .
அப்படி எங்கடி பாத்தா அவன பப்லியா இல்ல பார்டிலையா என்றாள் அஞ்சலி ,இல்ல ரோட்டுல
நான் மும்பை வந்ததும் ரயில்வே ஸ்டேசன்க்கு வெளியே இருக்க ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு அடி பட்டு உயிருக்கு போராடிகிட்டு இருந்துச்சு எல்லாம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருக்கோம்னு சொல்லி வேடிக்கை பாத்து கிட்டு இருந்தாங்க

2 Comments

  1. Next part soon please

  2. Bro next part pudunga daily oru part podunga story super iruku

Comments are closed.