நண்பனின் காதலி – 7 58

நான் ஒரு கொலைகாரி என்று சுவாதி சொல்ல அஞ்சலி அதிர்ச்சி ஆனாள் .என்னடி சொல்ற யாரடி கொன்ன என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அஞ்சலி .அக்கா நான் ஒரு ராசி இல்லாதாவ சின்ன பிள்ளைல இருந்து நான் யார் மேலயாச்சும் பாசம் வச்சு நேசிச்சேனா அவங்க எல்லாம் என்னைய விட்டு பிரிஞ்சுருறாங்க

சின்ன வயுசல என் அப்பா அம்மா ரெண்டு பேரையும் பிடிக்கும் .அவங்க என்னைய விட்டு பிரிஞ்சுட்டாங்க அப்புறம் என் பாட்டி கூட போயி இருந்தேன் அவங்க என்னைய விட்டு மட்டும் இல்ல இந்த உலகத்த விட்டே போயிட்டாங்க
என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஒ இத தான் கொலை பண்ணேன்னு சொல்றியா உங்க பாட்டிக்கு வயசு ஆகிடுச்சு அதுனால போயி சேந்துட்டாங்க அது என்னமோ உன் ராசியல இறந்ததா சொல்ற நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா நான் நிஜமாவே ஒரு கொலை பண்ணி இருக்கேன் என்றாள் .யாரடி கொலை பண்ண உங்க பாட்டியாவ என்றாள் அஞ்சலி . இல்ல இன்னும் சொல்ல போனா நான் ஒரு கொலை இல்ல ரெண்டு கொலை பண்ணி இருக்கேன் ரெண்டு உயிரை கொன்னு இருக்கேன் என்று சொல்லி கொண்டு அழுதாள் ,கதறி கதறி அழுதாள் .அஞ்சலி அவளை சமாதான படுத்தி என் கண்ணுல அழுகாம விசயத்த சொல்லு
அப்ப தான் அதுல இருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கான்னு பாக்க முடியும் என்றாள் அஞ்சலி .அதுல இருந்து என்னைக்கும் தப்பிக்க முடியாது என்று மெல்ல சொன்னாள் .யே முதல நடந்தத சொல்லுமா யார்தான் கொல பண்ண என்று அஞ்சலி கேட்க
ஸ்டெல்லா என்றாள் சுவாதி .
அது யாருடி என்று அஞ்சலி கேட்டாள் .என் பிரண்டு என்றாள் சுவாதி .ஒ நாபகம் வந்துருச்சு எனக்கு முன்னாடி உன் பெஸ்ட் பிரண்ட் உன் காலேஜ் பிரண்ட் என்று அஞ்சலி சொல்ல இல்லக்கா அவன் என் ஸ்கூல் பிரண்டு என்றாள் சுவாதி .
சரி என்னதான் ஆச்சு என்றாள் அஞ்சலி .அவளும் நானும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ப்ளஸ் ஒன் படிக்கும் போது அவ சுரேஷ்ன்னு ஒரு பையன்ன லவ் பண்ணா ரெண்டு பெரும் நெருங்கி பழகுநதுல ஸ்டெல்லா கர்ப்ப்மாகிட்டா அத என் கிட்ட மட்டும் தான் சொன்னா முதல எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல சுரேஷ் கிட்ட கேட்டதுக்கு கருவ கலைச்சுடுவோம் இல்லாட்டி நம்ம அப்பா அம்மா நம்மள கொன்னுடுவாங்கன்னு சொன்னான் ,
எனக்கும் கருவ கலைக்கிறது தான் சரியா தோனுச்சு .நான் ஸ்டெல்லா கிட்ட அப்படியே பண்ணிடுவோம்னு சொல்ல அவ முடியாது ஒரு உயிர கொல்றது பாவம் நான் எங்கயாச்சும் போயி பிச்சை எடுத்தாச்சும் என் குழந்தைய வளத்துக்கிறேன் அப்படின்னு சொல்லி அழுது கிட்டே போயிட்டா அப்புறம் நான் மட்டும் அவ கிட்ட தனியா போயி இதலாம் வேணாம் நம்ம இன்னும் மேஜர் கூட ஆகல மைனர் தான்
நம்மளால நம்ம பேரண்ட்ஸ சமாளிச்சாலும் உனக்கு குழந்தைய பெத்துக்கிற அளவுக்கு சக்தி இருக்குமான்னு தெரியல அதுனால வேணாம்டி சொன்ன கேளுடி என்றேன் .
ஆனா அவ நீ என்ன சொன்னாலும் சரி நான் என் குழந்தைய கொல்ல மாட்டேன் ஏண்டி உனக்கு இந்த மாதிரி நிலைமை வந்து இருந்தா என்ன பண்ணுவன்னு கேட்டதுக்கு நான் சொன்னேன் நான்லாம் தயங்காம உடனே அபார்சன் பண்ணிடுவேன் அப்படின்னு சொன்னேன் .
சொல்ல எல்லாம் நல்லாத்தான் இருக்கும் அனுபவிச்சு பாத்தா தான் அந்த உணர்வு தெரியும் அப்படின்னு சொன்னா .

2 Comments

  1. Next part soon please

  2. Bro next part pudunga daily oru part podunga story super iruku

Comments are closed.