அப்ப எங்கயோ இருந்து கார்ல வந்த விக்கி எல்லாரையும் இப்படி ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வேடிக்கை பாக்குரின்களே நீங்களா மனுசங்க்லான்னு ஹிந்தில திட்டிட்டு அந்த குழந்தையே அவனே தூக்கி அவனோட கார்ல வச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனான் .
அப்பவே அவன எனக்கு பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .ஏண்டி நல்லா பாத்தியா அது உன் ஆள் தானா என்று அஞ்சலி கேட்க அன்னைக்கு அந்த இடத்துல இருந்த யாருக்கும் அவன் முகம் மறக்காது என்றாள் சுவாதி .
நான் கூட உன் ஆளு வில்லன்னு நினைச்சேன் பரவல உன் ஆளு ஹீரோ தாண்டி என்றாள் அஞ்சலி .என் ஆளு என்னைக்குமே ஹீரோ தான் அக்கா என்று சிரித்து கொண்டே சுவாதி சொன்னாள் .
ம்ம் இந்த விசயத்த ஆச்சும் சஸ்பென்ஸ் வைக்காம முடிச்சியே என்றாள் அஞ்சலி .சுவாதி அதை கேட்டு சிரித்தாள் ,
அடுத்த நாள் சுவாதி தனியாக இருந்தாள் . மணி 9 ஆச்சு இன்னும் விக்கிய காணோம் ஒரு வேல இன்னும் டெல்லில வொர்க் முடியாம இருக்கலாம் அதுனலா அவனால அங்க இருந்து வர முடியாம போயி இருக்கலாம் என்று நினைத்து கொண்டாள் .
சரி எதுக்கும் இன்னொரு தடவ போன் போட்டு பாப்போம் என்று நினைத்து கொண்டு விக்கிக்கு போன் அடித்தாள் .விக்கியின் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது .என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டாள் .
விக்கி அதே நேரத்தில் சுவாதிக்கு போன் பண்ண எடுத்த போது செல் பேட்டரி சார்ஜ் இல்லமால் டெட் ஆகி இருந்தது .சே என்று ஸ்டேரிங்கை அடித்து விட்டு வேகமாக வண்டியை ஓட்டினான் .
சரி 9.30 வரைக்கும் பாப்போம் வராட்டி அஞ்சலி அக்காவிற்கு போன் அடிப்போம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது .யாரு என்றாள் .நான் தான் என்றான் .விக்கியின் குரல் சுவாதி ஒரு நிம்மதியோடு கதவை திறக்க விக்கி வெளியே ஒரு வேகத்தோடும் பதற்தொடும் வந்து இருந்தான் .
சுவாதியை பார்த்தும் அவனுக்கு ஒரு நிம்மதியும் .விக்கியை பார்த்ததில் சுவாதிக்கும் ஒரு நிம்மதி ஏற்பட்டது இருவரும் ஹாய் என்று சொல்லி கொண்டனர் .
பின் அமைதியாக உள்ளே போனார்கள் .விக்கி நினைத்தான் ஒரு நாள் முன்பு அதாவது அன்று ப்ரொபோஸ் செய்ய நினைத்த நாள் அன்று அவள் இதே போல் கதவை திறந்த உடனே அவளை கட்டி பிடித்து அவள் உதட்டில் லிப் கிஸ் அடித்து விட்டு அதன் பின் தன் காதலை அவளிடிம் கொண்டு வந்து இருந்த பிளவர்ஸ் கொடுத்து சொல்லி விட்டு அவளை அப்படியே கட்டி அணைத்து கொண்டு
Next part soon please
Bro next part pudunga daily oru part podunga story super iruku