மனைவியின் ஏக்கம் Part 3 54

பல நாள் மழிக்கப்படாத கன்னம், பம்பை பறட்டையான தலைமுடி, கண்கள் கீழ் கரு வளையங்கள் மற்றும் சோர்வான முகம். எவ்வளவு அழகிய வடிவமைந்த முகம் இந்த சில நாட்களில் இப்படி வாடி விட்டதே என்று மனம் குமுறியது.

“என்ன ஆச்சி உங்களுக்கு, உடம்பு முடியில என்று சொன்னார்களே , ஏன் என்னிடம் எதுவும் சொல்லல,” என்று பட படவென்று பேசிக்கொண்டே இருந்தேன்.

அவர் மெலிதான ஒரு புன்னகையோடு,” முதலில் உள்ளே வா என்றார்.”

அவர் சோபாவில் உட்கார நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

“ஏன் மா அழுகிற, எனக்கு ஒன்னும் இல்லை,” என்று சொல்லியபடி என் கண்ணீரை அவர் கையால் துடைத்தார்.

நான் அவர் கையை என் கன்னத்தோடு பற்றிக்கொண்டு,” எவளோ மோசமாக நீங்கள் அவதிப்பட்டு இருக்கீங்க என்று உங்களை பார்த்தாலே தெரியுது. ஏன் என் கிட்ட இதை மறைச்சிங்க.”

“நீ மனக்கஷ்ட படுவ என்று தான் சொல்லல, சரியான பிறகு சொல்லலாம் என்று விட்டுவிட்டேன்.”

“இப்போ மட்டும் என்னவாம், உங்க கூட மூணு நாளாக பேசாமல் கரணம் தெரியாமல் துடிச்சுப் போய்ட்டேன். என் மேல் பாசம் இல்லாமல் போய்விட்டதா அல்லது பேசி அலுத்து போச்சா, என்னென்னமோ நினைக்க தோன்றியது.”

“சாரி மா செல்லம், நான் உன்னிடம் பேச வேண்டும் என்று இருந்தேன் அனால் மூன்று நாளாக காய்ச்சல் வாட்டி எடுத்துருச்சி.”

இவர் எப்படி தவிச்சிருக்காரு, நான் என்னவென்றால் இவரை மனதில் திட்டிக்கொண்டு இருந்திருக்கேன். மகேஷை என் மார்போடு அனைத்து கொண்டேன்.

“இனி நான் இருக்கிறேன், இரண்டு நாள் லீவு போட்டுட்டு உங்களை கவனிச்சிக்குறேன்,” என்றேன்.

அவர் என் அணைப்பில் இருந்து விடுவித்து கொண்டு சொன்னார்,” ஹேய் இப்போ தான் ரிகவர் பண்ணுறேன், உனக்கு ஜுரம் ஒட்டிக்க போகுது. நீ லீவு எடுக்க வேண்டாம் இனி நான் இரண்டு நாளில் ஓகே ஆகிடுவேன்.”

“ஒட்டிகிட்டா என்ன, அதுவெல்லாம் பிரச்னை இல்லை.”

“மண்டு, நீ நோயில் அவதிபட தான் நான் என் நோய்நிலை மறைத்தேனா? நீ அவதிப்படுவதை பார்த்தல் நான் வருந்த மாட்டேன்னா?”

அவர் சொல்வதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது அனால் அவர் இன்னும் என்னை கொஞ்சவேண்டும் என்று,” என்னை மண்டு என்று சொல்கிறீர்கள்.”

“ஆமாம் ஸ்வதா, நீ என் அழகு, ஸ்வீட் டார்லிங் மண்டு.”

அவர் வேற எதுவும் சொல்லும் முன் அவர் இரு கன்னத்தை என் இரு உள்ளங்கையில் தாங்கியபடி அவர் நெத்தியில் முத்தமிட்டேன். இதுவே முதல் முறையாக அவரை முத்தமிடுவது. என் உதடுகள் அவர் உதடுகளை தேடி சென்றது. இருவர் உதடுகளும் மிக நெருக்கமாக இருந்தது. நான் சுவாசிப்பதை நிறுத்தி என் கண்களை மூடினேன். என் உதடுகள் அவர் உதடுகளை உரசம் போது திடீரென்று அழைப்புமணி சத்தம் எங்களை திடுக்கிட்ட செய்தது. எங்கள் முத்தம் பூரத்தி அடையாமல் பிரிந்தோம். அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. எனக்கும் அதே நிலை தான் அனால் காட்டிக் கொள்ளவில்லை.

“எவண்டா இந்த நேரத்தில் சிவபூஜையில் கரடி மாதிரி,” முனுமுனுத்தபடி எழுந்தார்.

என் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தோன்றியது. சிரிக்காதே என்று சொல்வதுபோல் ஒரு முக பவத்தோடு கதவை திறக்க சென்றார். பாவம் அவர் அடுத்த முறை சான்ஸ் கிடைக்கும் போது ஒரு செம்ம கிஸ் அவருக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அவர் கதவை திறக்கம் போது ஒரு ஆண் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் நண்பராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

“உள்ளே வா டா மோகன்,” என்று அவரை அழைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *