ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 3 49

எனக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே புரியவில்லை. குழம்பிப் போனவளாய் அழுகையுடன் நின்றிருந்தேன். அப்புறம் அறைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன். செல்போனில் அவருக்கு கால் செய்து பார்க்கலாம். எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். முடிந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம்..!! மீண்டும் ஓட்டமும், நடையுமாக எங்கள் அறைக்கு திரும்பினேன். மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். நான் திறந்தவாறு விட்டுச் சென்ற கதவு இப்போது மூடியிருந்தது.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள், பின்பு தயங்கி தயங்கி கதவின் கைப்பிடியை பற்றினேன். அதை திருகி, கதவை உள்ளே தள்ளினேன். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. எதுவும் புலப்படவில்லை. ஆனால் ஓரிரு வினாடிகள்தான். திடீரென.. பளீரென.. அத்தனை விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன..!! பளிச்சென கண்கள் பறிக்கும் ஒளிவெள்ளம்..!! சுருக்கென எனக்கு கண்கள் கூச, நான் இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.

“ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டியர் பவித்ரா..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!!”

என்று கோரஸாக அறைக்குள் இருந்து பாடல் ஒலிக்க, நான் நம்பமுடியாமல் கண்களை திறந்து பார்த்தேன். அறையின் மையத்தில் இப்போது ஒரு டேபிள் முளைத்திருந்தது. அதன் மீது பால் நிறத்தில், பெரிய வட்ட வடிவ கேக். அதற்கு மேலே அவசர அவசரமாய் கட்டப்பட்ட ஜிகினா தோரணம்… பலூன்கள்..!! டேபிளை சுற்றி அவர்கள் நின்றிருந்தார்கள். ஸ்லோமோஷனலில் கைகள் தட்டிக்கொண்டு… உதடுகளை அசைத்து வாழ்த்து பாடிக்கொண்டு..!!

சற்றுமுன் நடந்த சண்டையின் சிறிய சுவடைக்கூட முகத்தில் காட்டாமல், முகமெல்லாம் பூரிப்பாக என் கணவர் அசோக்..!! அவருக்கு அருகிலேயே உற்சாகத்தின் இன்னொரு உருவமாய், வெண்பற்கள் காட்டி க்ளாப் செய்துகொண்டிருந்த லாவண்யா..!! வாட்ச்மேன் தாத்தா.. ரிஷப்ஷனில் இருக்கும் மேனேஜர்.. காலையில் காபி கொண்டு வந்த அந்த பொடியன்.. அறை சுத்தம் செய்ய வந்த அந்த அகல உருவ பெண்மணி.. என் கணவர் சைட் அடித்த அந்த வெயிட்ரஸ்..!! எல்லோரும்..!!!! கைகளை தட்டிக் கொண்டு.. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. இதோ.. வந்தேவிட்டது..!! இரண்டு கண்களிலும் நீர் திரண்டு ஓடி வந்து.. என் கன்னம் நனைத்து ஓடியது..!! அழுகையும், சந்தோஷமும், நிம்மதியுமாய் நான் உறைந்து போய் நின்றிருக்க, அந்த லாவண்யாதான் முதலில் என்னை நோக்கி ஓடிவந்தாள்.
“ஹேப்பி பர்த் டே பவித்ரா..!!”

என முகமெல்லாம் உண்மையான பூரிப்புடன் சொன்னவள், என்னை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் கன்னத்தில் ஈரமாக முத்தமிட்டாள். என் கணவர் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து புன்னகைக்க, நானும் கண்களில் கண்ணீர் மல்க புன்னகைத்தேன். என் கண்களில் இருந்து வழிந்த நீர், லாவண்யாவின் தோளில் பட்டு தெறிக்க, இப்போது நானும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். ‘ஓ…’ வென பெருங்குரலில் அழவேண்டும் போலிருந்த உணர்வை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே..!!!

இந்தக்கதை உருவாகக் காரணமாயிருந்த அச்சு தம்பிக்கு நாளை பிறந்த நாள்..!! அவருடைய பிறந்த நாள் பரிசாக இந்த பாகத்தை வழங்குகிறேன்..!!

எபிஸோட் – IV

என்னுடைய பிறந்தநாள் எப்போதுமே எனக்கு பெரிய விஷயமாக தோன்றியது இல்லை. எங்கள் வீட்டிலும் பெரிதான கொண்டாட்டங்கள் இராது. சிலநேரங்களில் மறந்து கூட போயிருக்கிறேன்.. இதோ இன்று மாதிரி..!! அம்மா மட்டும் ஞாபகம் வைத்திருப்பாள். காலையில் ஒரு ஸ்பெஷல் முத்தம் தருவாள். அன்று சமையலிலும் ஸ்பெஷலாக ஒரு இனிப்பு சேர்த்துக் கொள்வாள். மற்றபடி புத்தாடை, பரிசு, கேக் நறுக்குதல் என எதுவும் கிடையாது. அப்படித்தான் எனது இத்தனை வருட பிறந்த நாட்களும் சென்றன.

அதே மாதிரி என் கணவரும் என் பிறந்தநாளை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்வார் என்று எப்படி நான் எதிர்பார்த்திருக்க முடியும்? காட்டிவிட்டார் அல்லவா..? அவருக்காக நான் பிறந்த நாள், அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்று காட்டிவிட்டார் அல்லவா..? அதுவும் இத்தனை பேரை அழைத்து வந்து.. இனிப்பான அதிர்ச்சி கொடுத்து..!! அறிமுகம் இல்லாத அந்த நல்லவர்கள், அகத்திலிருந்து வாழ்த்து சொல்லி..!! நிச்சயமாய் இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாட்களில் ஒன்றாக மாறப் போகிறது..!!

அவர்கள் எல்லாம் செல்ல ஒரு அரை மணி நேரம் ஆனது. கேக் கட் செய்து.. அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு.. பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவரும் எனக்கு வாழ்த்து சொல்லி..!! அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும், நான் இந்தப்பக்கம் அசோக்கை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டேன். அவர் முகமெல்லாம் ஆவேசமாக முத்தமிட்டேன்.. என் கண்களில் வழியும் கண்ணீரோடு..!! அவர்தான் என்னை இறுக்கி அணைத்து என் ஆவேசத்தை கட்டுப்படுத்தினார். என் முதுகு தடவி ஆசுவாசப் படுத்தினார். முத்தமிட்டு சாந்தப் படுத்தினார். நான் இரண்டு கைகளையும் அவருடைய தோளில் மாலையாக போட்டுக் கொண்டு, ஏக்கமாக சொன்னேன்.

“என்னை பெட்டுக்கு தூக்கிட்டு போங்கப்பா..!!”

அவர் என்னை அலாக்காக அள்ளிக்கொண்டார். எங்களுடைய முகங்கள் ரெண்டும் காதலாக, ஆசையாக பார்த்துக் கொள்ள, உள்ளே தூக்கி சென்றார். மென்மையாக மெத்தையில் கிடத்தினார். எனது கன்னம் தடவி, என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தவர், குனிந்து என் உதடுகளில் மென்மையாக முத்தம் பதித்தார். பின்பு என் உதடுகளை தவிக்கவிட்டு, தன் உதடுகளை விலக்கிக் கொண்டார்.

“ஸாரிப்பா..!!” என்றேன் நான் சத்தமே வெளிவராத குரலில்.

“ஸாரியா..? எதுக்கு..?” அவர் சற்றே குறும்பான குரலில் கேட்டார்.

“எதுக்குன்லாம் சொல்ல மாட்டேன்.. ஸாரி.. அவ்ளோதான்..!!”

அவர் இப்போது அழகாக புன்னகைத்தார். என் கூந்தலை தடவியபடியே இதமான குரலில் சொன்னார்.

“நீ சொல்லாட்டாலும்.. எதுக்குன்னு எனக்கு தெரியும் பவி..!!”

“ம்ம்ம்… என் மேல கோவமா..?”

“ச்சேச்சே.. கோவம்லாம் இல்லைடா..”

“அப்புறம்..?”

“ம்ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தமும்.. கொஞ்சம் சந்தோஷமும்..!! ஃபிஃப்டி.. ஃபிஃப்டி..!!”

1 Comment

  1. Nicely travelling..

Comments are closed.