ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 3 49

“ஹ்ஹா.. அதெப்படி ஒரே நேரத்துல ரெண்டும் இருக்க முடியும்..?”

“எனக்கே புரியலை பவி.. ஆனா.. அந்த மாதிரி ஒரு ஃபீலிங்தான் இப்போ எனக்குள்ள இருக்கு..!!”

“ம்ம்ம்ம்.. எனக்கு புரியுது..!! லவ் யூப்பா..”

“லவ் யூ பவி..!!”

அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் இதழ்கள் பதித்தார். நான் கொஞ்ச நேரம் அவருடைய அணைப்பில் கிடைத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு அமைதியாக கிடந்தேன். அப்புறம் திடீரென மவுனத்தை குலைத்தவாறு சொன்னேன்.

“இன்னைக்கு எனக்கு பர்த்டேன்றதே மறந்துடுச்சு தெரியுமா..?”

“ஹ்ஹா.. உனக்கு எப்படி அதுலாம் ஞாபகம் இருக்கும்..? உனக்குத்தான் வேற என்னென்னவோ நெனைப்பு மனசுக்குள்ள..!! ஆனா.. எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது..!!”

“ம்ம்ம்..”

“மொதல்ல நான் மட்டுந்தான் ஏதாவது பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. ஆனா.. லக்கிலி.. லாவண்யா வந்து மாட்டுனா..!! அவளோட ஹெல்ப்பால.. நல்லாவே ஜமாய்க்க முடிஞ்சது..!!”

“நீங்கதான் அலார்ம் வச்சுட்டு போனீங்களா..?”

“ஹ்ஹ்ஹா.. ஆமாம்.. ஆக்சுவலா நாங்க வேற மாதிரி ப்ளான் பண்ணிருந்தோம்..!! ஆனா.. நீதான்.. மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு.. இழுத்து போத்தி படுத்துட்டியே..? அப்புறந்தான்.. இந்த அலார்ம் ப்ளான்.. பரவால.. இதுவும் சக்சஸ்தான்..!!”

“ம்ம்.. அந்த லாவண்யா.. நல்ல பொண்ணுல..?”

“ம்ம்.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..!!”

அவர் பெருமையாக சொல்ல, இப்போது நான் அவருடைய கண்களை குறுகுறுவென பார்த்தபடி கேட்டேன்.

“இன்னும் இது மாதிரி எத்தனை நல்ல பொண்ணுகளை உங்களுக்கு தெரியும்..??”

“ஹ்ஹ்ஹா.. அதுலாம் நான் சொல்ல மாட்டேன்..”

“ஏன்..?”

“சூனியம் வச்சுக்கிறது சரி.. அதுக்காக கைக்காசையும் செலவழிக்க சொன்னா எப்படி..??”

“ஹ்ஹ்ஹ்ஹா… ம்ம்ம்ம்.. ஸாரிப்பா..!!”

“ஓ..!! இன்னொரு ஸாரியா..? இந்த ஸாரி எதுக்கு..?”

“நீங்க தொட்டப்போ.. கையை தட்டிவிட்டதுக்கு..!! எந்த பொண்டாட்டியும் பண்ணக்கூடாத காரியத்தை பண்ணிட்டேன்.. ஸாரிப்பா..!! உங்க கையை குடுங்க..” சொன்னவள் அவருடைய வலது கையை எடுத்து என் இடது மார்பில் வைத்துக் கொண்டேன். அழுத்தமாக..!!

“ம்ம்.. கையை வச்சாச்சு.. அப்புறம்..?” அவர் குறும்பாக கண்சிமிட்ட,

“அப்புறம் என்ன..? அப்புறம்லாம் ஒண்ணுல்ல.. அவ்ளோதான்..!!” நானும் குறும்பாக சொன்னேன்.

“அடிப்பாவி.. உன் பர்த்டே அதுவுமா.. இவ்ளோ பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து.. உன்னை சந்தோஷப் படுத்திருக்கேன்.. இவ்ளோதானா..?”

“வேற என்ன வேணும்..?”

“கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல எனக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது நிறைவேத்தி வைக்கலாம்ல..?”

“ம்ம்ம்ம்… நீங்க என் உடம்புல ஏதாவது கண்ட எடத்துல கிஸ் பண்ணனும்னு ஆசைப்படுவீங்க..? அதெல்லாம் என்னால முடியாது..!!”

“ஹ்ஹ்ஹ்ஹா… சரி.. அப்போ இன்னொரு ஆசையை நிறைவேத்தி வை..”

“என்ன..?”

“என்னை ஒருதடவை போடான்னு சொல்லு..”

“போங்கப்பா.. நான் மாட்டேன்..!!”

“ப்ச்.. என்ன நீ..? முத்தத்துக்கு முடியாதுன்னு சொல்ற.. போடா சொல்ல சொன்னா.. போங்கன்ற..?”

“ம்ம்.. போடான்லாம் சொல்ல மாட்டேன்.. வாடான்னு வேணா சொல்றேன்..” நான் கொஞ்சலாக சொல்ல அவர் புன்னகைத்தார்.

“ம்ம்.. சொல்லு..!!”

அவர் ஆர்வமாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நான் தயங்கி தயங்கி வெட்கமாக சொன்னேன்.

“டேய்.. அசோக்.. வாடா..!!”

“வாவ்..!!!!!!!!!!!!!!”

கத்திக்கொண்டே அசோக் என்னை கட்டியணைத்துக் கொண்டார். அவரை வாடா என்றழைத்த வாயை, அவருடைய உதடுகள் வந்து கவ்விக்கொண்டன. சர்ரென உறிஞ்சின..!! அப்புறம் ஒரு அரை மணி நேரத்துக்கு அங்கே எந்தவித பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை..!! எங்கள் செயல்கள் அதிகம் பேசின. ‘இச்.. இச்..’ என்ற முத்த சப்தமும், இன்பத்தில் விழைந்த முனகல் ஒலியும், இயக்கத்தின் அதிர்வு தாங்காத கட்டில் ஓசையுமே கேட்டுக் கொண்டிருந்தன. கொடைக்கானல் குளிர் எழுப்பிய காம வினாவிற்கு, எங்கள் இருவரது உடல்களும் உடைகள் உதறி.. விடைகள் தேடிக் கொண்டிருந்தன..!!

விடை கிடைத்தபோது, விண் விண்ணென எங்கள் உடல்களில் வலியெடுத்தது. அடித்துப்போட்ட மாதிரி களைப்பாய் இருந்தது. ஆடைகளை அள்ளிப் போர்த்தக் கூட தெம்பில்லாமல், ஒருவரை ஒருவர் ஆடையாக அணைத்துக் கொண்டோம். அவர் என் முதுகு தடவ, நான் அவருடைய மார்பு தேய்த்தேன். நான் எதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்ததும் அவர்தான் கேட்டார்.

“என்ன பவி… எதோ யோசனைல இருக்குற..?”

“ஒண்ணுல்லப்பா..”

“இல்ல.. எதோ இருக்கு.. சொல்லு பவி..”

“உங்களுக்கு நான் அன்பரசி பத்தி சொல்லிருக்கேனா..?”

“யார் அது..?”

“என் பிரண்ட்..!!’

“ம்ஹூம்.. சொன்னது இல்லை..”

“சின்ன வயசுல இருந்தே பழக்கம்.. ரொம்ப க்ளோஸ்.. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவ வீடு.. ஸ்கூல், காலேஜ்லாம் ஒன்னாத்தான் படிச்சோம்..!!”

“ம்ம்..”

“காலேஜ் படிக்கிறப்போ அவ ஒருத்தனை லவ் பண்ணினா.. மகேந்திரன் அவன் பேரு..”

“ம்ம்..”

“ஹ்ஹ.. அவங்க லவ்வுக்கு நான்லாம் நெறைய ஹெல்ப் பண்ணிருக்கேன்.. இவ கொடுக்குற லெட்டர் அவன்கிட்ட கொடுக்குறது.. அவன் கொடுக்குற லெட்டர் இவகிட்ட கொடுக்குறது.. இவ வீட்டுல அவங்க பேசிட்டு இருக்குறப்போ ஆள் வருதான்னு பாக்குறது..”

“ம்ம்.. இன்ரஸ்டிங்..!!”

“ரெண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கலை.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. சென்னைலதான் குடித்தனம் நடத்துனாங்க..”

“ஓஹோ..?”

“அப்புறம்.. அவங்களுக்கு கொழந்தை பொறந்தப்புறம்.. ஓரளவு அவங்க வீட்டுல கொஞ்சம் சமாதானம் ஆனாங்க..”

“ம்ம்..”

“அவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தா.. கலையரசின்னு பேரு.. ஒரு தடவை அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகி.. கால்ல ஃப்ராக்சர் ஆகி.. சென்னைலதான் ஒரு ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்தாங்க..”

“ஓ..”

“கால் சரியாக நாலு மாசம் ஆகும்.. ட்ரீட்மன்ட் எடுக்க வசதியா இருக்கும்னு.. என் பிரண்ட்.. அவ தங்கச்சியை அவ வீட்டுலயே வச்சு பாத்துக்கிட்டா..!! நாலு மாசமும் ஆச்சு.. அவளுக்கு காலும் சரியாச்சு.. காலுல தெம்பு வந்ததும்.. ஓடனும் போல அவளுக்கு ஆசை வந்துடுச்சு போல.. அதுல ஏதும் தப்பு இல்லை..!! ஆனா.. ஓடுனவ.. அக்கா புருஷனையும் இழுத்துட்டு ஓடிட்டா..!!”

“காட்..!!”

“இப்போ அன்பரசி கைல கொழந்தையோட.. வீடு வீடா ஊதுவத்தி பாக்கெட் போட்டு பொழப்பு நடத்திட்டு இருக்குறா..!!”

சொல்லிவிட்டு, நான் கண்களை இறுக மூடியபடி அவருடைய மார்பில் புதைந்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டார்.

1 Comment

  1. Nicely travelling..

Comments are closed.