ஸ்ருதி Part 5 63

“வேண்டாம்மா தாயே ,நான் வழக்கம் போல் தலையணையே கட்டி பிடித்து கொள்கிறேன். தன் கையே தனக்கு உதவி. ஏ அனிதா சீக்கிரம் வாடி உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் ” .என்று ஷெட்டி பரிதாபமாக கூற ஸ்ருதிக்கு சிரிப்பு வந்தது.

சுசிலா ஸ்ருதியிடம்”Amma nimmanaa saibru nimma esru ache anitha endru karithaare ,manainelle Shruthi endru karithaare yakkamma(அம்மா உங்களை முதலாளி வெளியே அனிதா என்று அழைக்கிறார்.வீட்டின் உள்ளே ஸ்ருதி என்று அழைக்கிறார் ஏன்?

அப்பொழுது தான் ,தானும் ஷெட்டியும் என்ன தவறு செய்கிறோம் என்று புரிந்தது. ஐயோ இந்த பெயர் குழப்பம் மட்டும் வெளியே தெரிந்தால் அவ்வளவு தான் வெற்றி பெற்றது செல்லாது.பட்ட கஷ்டம் எல்லாம் வேறு வீணாகி விடும்.மருத்துவனையில் வேறு என் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.அன்று இருந்த பதட்டமான சூழ்நிலையில் இருவருமே அதை கவனிக்கவில்லை.முதலில் அதை சரி செய்ய சொல்ல வேண்டும்.கோச்சிங் சென்டரில் இந்த கிராமம் சம்பந்தப்பட்ட யாராவது இருந்தால் விலகி வேறு கோச்சிங் சென்டர் சேர வேண்டும் என்று மனதில் நினைத்தாள்.

அது வேறு ஒன்றும் இல்லை சுசிலா அம்மா ,கவர்ன்மென்ட் proof இல் இருப்பது அனிதா என்ற என்னுடைய பெயர்.ஆனால் அவருக்கு பிடித்த பெயர் ஸ்ருதி.அதனால் வீட்டின் உள்ளே ஸ்ருதி என்று அழைக்கிறார்.என்று கூறி ஒருவாறு சமாளித்தாள்.

ஷெட்டி ஸ்ருதியிடம் ,ஸ்ருதி இங்கே பாரு நாம் குலுமணாலி செல்ல ரெண்டு வழி இருக்கு ,ஒன்று விமானத்தில் சண்டிகர் சென்று பின்பு அங்கே இருந்து காரில் 8 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம்.இன்னொன்று விமானத்தில் டெல்லி போய் ,பின்பு அங்கே இருந்து 13 மணி நேரம் காரில் பயணம்.எதை choose பண்ணலாம் ?

சண்டிகர் வழியே போய் விடலாங்க,அது தான் நேரம் குறைவாக எடுக்கிறது.

சரியான சாய்ஸ் ஸ்ருதி ,travel agent ம் அதை தான் சொன்னார்.அது மட்டும் இல்லாமல் சண்டிகர் to மணாலி ரூட் இயற்கை அழகோடு சூப்பராக இருக்கும் என்று சொன்னார்.

ஒரு நிமிஷங்க ,

ம் என்ன சொல்லு ஸ்ருதி,

நாம் மருத்துவமனையில் பதட்டத்தில் ஸ்ருதி என்று பெயர் கொடுத்து விட்டோம்.ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றது அனிதா என்ற பெயரில் .அந்த தவறு வெளியே தெரிந்து விட்டால் அனைத்துமே வீணாகி விடும்.

நீ கவலைபடாதே ஸ்ருதி ,மருத்துவமனை ரெகார்ட்ஸ் எல்லாம் அனிதா என்ற பெயர் ஏற்கனவே மாற்றம் செய்தாகி விட்டது.இந்த ஊராட்சி மன்ற சம்பந்தப்பட்ட கோப்புகளில் மட்டும் அனிதா என்ற sign மட்டும் சரியாக போட்டு விடு.மற்றபடி எதுவும் பிரச்சினை கிடையாது.
அப்புறம் உன்னோட முதல் signature இது தான்,புலிவளம் கிராமத்திற்கு ரோடு போட்டு கொடுப்பேன் என்று சொன்னே இல்ல.அதற்கான டெண்டர் விடுவதற்கான கோப்பு தான் இது.இதில் முதல் sign போடு.
ஸ்ருதி அதை பார்த்து சந்தோசமாக தன் முதல் கையெழுத்தை கவுன்சிலர் ஆக கையெழுத்திட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் ,சண்டிகர் விமான நிலையத்தில் இருவரும் வர டிராவல்ஸ் கார் தயாராக இருந்தது.
ஒருபக்கம் நதி ,மறுபக்கம் மலை நடுவில் ரோடு என்று இயற்கை அழகு காட்சிகளை ரசித்து கொண்டே 10 மணி நேரம் பயணம் செய்து குலுமணாலி இருவரும் இரவு வந்தனர்.

ஏற்கனவே ஷெட்டி ,ஸ்னோ பாரடைஸ் என்ற ரிசார்ட்டில் மகாராஜா என்ற ஆடம்பர ரூம் புக் பண்ணி இருந்தான்.வந்தவுடன் இரவு உணவு complementry offer இல் தயாராக இருந்தது .அதற்கு அப்புறம் ரூமிற்குள் செல்ல,

“Wow it’s really amazing room ” ஸ்ருதி சந்தோசத்தில் குதுகாலிக்க ,

“வெளியே சரியான குளிர் ,ஆனால் ஹீட்டர் இருப்பதால் உள்ளே அவ்வளவாக குளிர் ஒன்னும் தெரியல ,இங்கே பாருங்களேன்,இங்கே ஊரே ஃப்ரிட்ஜ்க்குள் இருக்கிற மாதிரி தான் இருக்கு extra fridge வேற கொடுத்து இருக்காங்க ,ஸ்ருதி சொல்லி சிரிக்க,

“ஃப்ரிட்ஜ் கண்டிப்பாக நமக்கு தேவைப்படாது ஸ்ருதி “நீ எங்கே படுத்து கொள்கிறாய் மேலேயா ,இல்ல கீழே உள்ள பெட்டிலா ?

நான் கீழேயே படுத்து கொள்கிறேன் ,இங்கு இருந்து தான் பார்ப்பதற்கு நல்ல views எல்லாம் பார்க்க முடிகிறது.அப்புறம் சுடு தண்ணி வேண்டுமானால் இந்த கப் ஃபோர்ட் இல் ஹீட்டர் உள்ளது.அதில் சூடு பண்ணி வைத்து இருக்கிறேன் . எடுத்துங்க

ஓகே ஸ்ருதி ,நாளை நாம் நிறைய ஊர் சுற்றி பார்க்க வேண்டி இருக்கும். good night

ஓகே good night.

காலை breakfast முடித்து விட்டு ,gulaba என்ற இடத்திற்கு ஷெட்டி கூட்டி சென்றான்.

அங்கு ஸ்ருதி ஆசைப்பட்ட படி snow riding ,sliding போன்ற விளையாட்டுகள் விளையாடினாள்.
அடுத்து solang valley என்ற இடத்திற்கு சென்று rope car மூலம் இன்னும் உயரமான இடத்திற்கு சென்றனர்.அப்படி போகும் போது பள்ளத்தாக்கு அழகுகள் கண்ணை கவர்ந்தன.

அங்கே பார்த்தீங்களா எவ்வளவு அழகு ?

அழகாக தான் இருக்கு ,ஆனா உன் மேனியின் வனப்பை விட ரொம்ப கம்மி தான்.

ஏய் செல்ல பொறுக்கி ,சும்மா சாம்பிராணி போடாதே ?

ஐயோ நான் பொய் சொல்லல ஸ்ருதி உண்மையை தான் சொல்றேன்.
உயரமான இடத்தில் சென்ற பிறகு குளிர் இன்னும் அதிகமாக இருந்தது.ஆனால் இருவரும் உயர்ரக கம்பளி ஆடை அணிந்து இருந்ததால் குளிர் அவ்வளவாக பாதிக்கவில்லை.
பனிகட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்து கொண்டனர்.இரண்டு மணி நேரம் அங்கு செலவழித்த பிறகு ,மீண்டும் கீழே இறங்கினர்.

இங்கே பாரு ஸ்ருதி,நாம் போகும் போது கீழே பனியே இல்லை. இப்போ எவ்வளவு பனி பெய்து இருக்கு .

கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஒன்றரை அடி உயரம் தேங்கி இருந்த பனியில் உள்ளே சென்றது.அப்படி எடுத்து வைக்கும் போது ஸ்ருதி ஷூ எதிலோ பட்டு சிறுதுளை விழுந்தது.
அதன் வழியே பனியின் குளிர்ச்சி உடலில் பரவ ,ஸ்ருதி உடல் நடுங்க தொடங்கியது.