ஸ்ருதி Part 18 39

ஷெட்டி தலையை குத்தி கொண்டு யோசிக்க ஒன்றும் ஞாபகம் வரவில்லை.

அப்போ அவன் காலுக்கு கீழே நாகப்பாம்பு ஒன்று ஸுஸுஸுஸு என்று கொத்துவதற்கு தயாராக இருந்தது.

பாம்பு போட்ட சத்தத்தை கேட்டு ஷெட்டி”ஆ இப்போ எனக்கு ஞாபகம் வந்து விட்டது ஓம் ஹ்ரீம் ஸும் என்று கூவி சாமியார் மேல் அந்த மூலிகையை வீச இருவர் உடலில் இருந்த உயிர்கள் இடம் மாற தொடங்கியது.இருவர் உடலும் கீழே விழுந்தது.

சாமியார் உடல் கீழே விழும் போது பாம்பு சரியாக அவனை கொத்தியது.ஷெட்டி உடல் கீழே விழும் போது சாய்வாக இருந்ததால் அவன் உடல் அப்படியே பள்ளத்தை நோக்கி உருள தொடங்கியது.4500 அடி பள்ளம் விழுந்தால் எலும்பு கூட கிடைக்காது.சாமியாருக்கு நினைவு வந்து பாம்பு கொத்திய வலியில் கத்தினான்.

ஸ்ருதி,ஷெட்டி உடல் பள்ளத்தை நோக்கி உருள்வதை பார்த்தவுடன் வேகமாக அவனை நோக்கி ஓட,சாமியார் எனக்கு கிடைக்காத இவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது இந்திரஜித்தின் கத்தியை எடுத்து கொண்டு பின் தொடர்ந்தான்.

பள்ளத்தில் கீழே விழும் போது சரியாக ஷெட்டி கையை ஸ்ருதி பிடிக்கவும் , ஷெட்டிக்கு உணர்வு வரவும் சரியாக இருந்தது.

ஷெட்டி,ஸ்ருதியின் கைகளை பிடித்து பள்ளத்தில் தொங்கி கொண்டு இருந்தான். ஷெட்டியும் இன்னொரு கையை பக்கத்தில் உள்ள பாறையை ஊன்றி எழ முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

அப்போ சாமியார் ஸ்ருதியை வெட்ட வருவதை பார்த்து ஸ்ருதி கையை உதறி சாமியார் கால்களை பிடித்து கொள்ள,சாமியாரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பக்கத்தில் உள்ள மரத்தின் வேரை பிடித்து கொண்டு”அய்யயோ என்னை விட்டு விடு” கத்தினான்.கையில் இருந்த வாள் எங்கோ சென்று விழுந்தது.ஷெட்டி இப்போ சாமியார் காலை பிடித்து கொண்டு கத்தினான்.

ஸ்ருதி என்ன பார்த்துக்கிட்டு சும்மா நிக்கற,போ ,போய் உன் சேலையை எடுத்துக்கிட்டு வந்து போடு அப்ப தான் என்னால் மேல வர முடியும்.

சாமியார் அவனை பார்த்து “யோவ் என்னை விட்டு விடுய்யா”எனக்கு பள்ளத்தை பார்த்தாலே பயம்” என்று கெஞ்சினான்.

யோவ் சாமியாரே சும்மா கத்தாதே,உனக்கு தான் மந்திரம் எல்லாம் தெரியுமே,ஏதாவது மந்திரம் போட்டு மேலே கொண்டு போய்யா.

அய்யோ பயத்தில் மந்திரம் எல்லாம் தப்பு தப்பா வருதுய்யா,பாம்பு வேற கொத்தி இருக்கு. வாய் எல்லாம் குழறுது.இப்போ நான் இன்னும் 20 நிமிஷத்தில் மூலிகை தேடி கண்டுபிடித்து சாப்பிட வில்லை என்றால் பாம்பு கடியில் விஷம் தலைக்கேறி இறந்து விடுவேன் என்று கெஞ்சினான்.

ஷெட்டி அதற்கு “அதெல்லாம் எனக்கு தெரியாது.நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் உன் காலை பிடித்து கொள்வதை தவிர எனக்கு வழி இல்லை.அதனாலே நீ தான் என்னை காப்பாற்றனும்”என்று கூற

என்னது நான் உன்னை காப்பாற்றுனுமா,நீ தான்யா என்னை காப்பாற்றனும்.நீ இழுக்கிற இழுவையில் என் பாடி பாதி அந்தரத்தில் தொங்குதே.

யோவ் சும்மா கத்தாதே,நான் கூட தான் அந்தரத்தில் தொங்கறேன்.

அய்யோ என் உசுரை வைச்சு இப்படி ஊஞ்சல் ஆடுகிறானே தெய்வமே,என்னை விட்றுடா,விட்றுடா என்று சாமியார் கத்தினான்.

நீ ஏன்யா கீழே வர,பிடியை கிடியை விட்டு விடாதே..,கெட்டியாக மேலே பிடி என்று ஷெட்டி கத்தினான்.

நான் எங்கடா பிடிச்சு இருக்கேன்,நீ தான்டா என்னை பிடிச்சு இழுக்கிற,
நான் இன்னும் ரொம்ப நாள் உசிரோடு இருக்கனும்,என்னை இழுத்து போட்டு கொன்னுடாதடா என்று சாமியார் அலறினான்.

சாமியாருக்கு பாம்பின் விஷம் தலைக்கேற மயக்கமாக வந்தது.அவன் பிடித்து இருந்த வேரின் பிடியை விடவும்,ஸ்ருதி வந்து சேலையை தூக்கி போடவும் சரியாக இருந்தது.ஷெட்டி அவள் சேலையை பிடித்து தொங்க,சாமியார் உடல் அதல பாதாளத்தில் விழுந்து சிதறியது.

அடுத்து என்ன நடந்தது?

தொங்கி கொண்டு இருந்த ஷெட்டியை தன் ஒருத்தியால் இழுக்க முடியாது என்று தெரிந்த ஸ்ருதி ஏற்கனவே தன் சேலையின் மற்றொரு நுனியை மரத்தில் கட்டி இருந்தாள்.கொஞ்ச கொஞ்சமாய் மேலே இழுக்க இழுக்க ஷெட்டி முயன்று மேலே வந்தான்.