” ஏய் எங்க போகுது வண்டி ?” பாக்யா கேட்டாள்.
” போலாம் இருங்க.. கொஞ்சம் பேசணும் ” என்றான் சுபாஷ்.
” இவ்வளவு நேரம் பேசினது பத்தலையா ?”
” அங்க ப்ரீயா பேச முடியல..”
” அப்படி ப்ரியா பேசாரதா இருந்தாலும் போன்ல பேசிக்கலாமே.. ?”
” இல்ல.. இது நேர்லதான் பேசணும் ”
சாந்தி ஒன்றுமே பேசவில்லை. சிரிக்க மட்டும் செய்தாள். பாக்யாவுக்கு ஏதோ நடக்க போகிறது என்று தோன்றியது. சரி கிஸ்ஸடிப்பானா இருக்கும் என்று நினைத்தாள்.. !!
கொஞ்சம் மறைவாகப் போய் இருட்டில் பைக்கை நிறுத்தினான். கொஞ்சம் மரங்கள் இருக்கும் காடு அது. அடர்த்தியான இருட்டில் சில்வண்டுகளில் ரீங்காரம் சுற்றிச் சுற்றி ஒலித்துக் கொண்டிருந்தது.
” என்ன பேசணும் ??” என்று இறங்கிய பின்தான் அவனைக் கேட்டாள் சாந்தி.
” சொல்றேன். ஒண்ணும் பயமில்ல இல்ல. ?”
” பயமில்ல.. ! நீங்க சொல்லுங்க? ”
சாந்தி பக்கத்தில் நெருங்கி அவள் கையைப் பிடித்தான்.
” என்னை கல்யாணம் பண்ணிக்குவதான சாந்தி ?”
” ஒடனே முடியாது ”
” பரவால்ல. எவ்ளோ நாள் ஆனாலும் உனக்காக நான் காத்திருக்கேன் ”
பாக்யா குறுக்கிட்டுக் கேட்டாள்.
” இவள பத்தி எல்லாம் தெரியும் இல்ல. ?”
” தெரியும் ”
” இவ மொதவே கல்யாணமாகி டைவோர்ஸ் ஆனவ..”
” சொல்லிட்டாங்க..”
” பின்னால அதை வச்சு சண்டை போட மாட்டிங்களே.. ?”
” சண்டையா.. ? ச்சே.. சாந்தி எனக்கு தேவைதைங்க பாக்யா. ! அவங்கள போய்… ”
” ப்பா… புல்லரிக்குது ”
” நெஜமாங்க.. சாந்தியை நான் பூ மாதிரி பாத்துக்குவேன். இப்படி ஒரு தேவதை எனக்கு கெடைச்சா நான் உள்ளங்கைல வச்சு தாங்குவேங்க.. !”
” ஓவரா சீரியல் பாப்பிங்களோ ?”
” ஏங்க பாக்யா ?”
” பின்ன.. இப்படி டயலாக்கா அடிச்சு விடுறீங்க.. ?”
” ச்சே.. உண்மைங்க.. ”
‘ என்ன உண்மையோ.? எல்லாம் ரெண்டு மாசம் வெச்சு செய்யுறவரைதான் ‘ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பின்.. சாந்தி நெகிழ்ந்து போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் பதிலுக்கு அவளை முத்தமிட.. இருவருக்கும் அங்கேயே பற்றிக் கொண்டது. ஆண் சுகத்துக்கு ஏங்கும் சாந்தி அவனது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தாள். இருவரும் இருட்டைச் சாதகமாக்கி.. முத்தமிட்டுக் கொண்டிருக்க.. பாக்யா திகைததாள். ஆரம்பித்த முதல் நாளிலே இவ்வளவு தூரம் போகும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. காதல் எல்லாம் வேண்டாம் என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்த சாந்தி இப்படி இணங்கிப் போனது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.
” ஏய்.. என்னப்பா நடக்குது இங்க.. ?” என்றாள் பாக்யா.
சுபாஷ் மெதுவாக பிரிந்தான்.
” ஒண்ணும் இலலைங்க.”
” மொத நாளேவா.. ?? நான் ஒருத்தி இருக்கேன்ப்பா இங்க.. ”
” ஸாரிங்க.. ”
சாந்தி எதுவும் பேசவில்லை. உடையை சரி செய்தபடி நகர்ந்து வந்தாள்.
” நல்ல ஆளுகப்பா ” என்றாள் பாக்யா.
” ச்சீ.. போடி. ”
” அப்போ நான் போகவா ?”
” ஏன்டி.. ?”
” நீதான் போக சொல்லிட்டியே.. எனக்கென்ன வேலை இங்க.. ?”
” கொன்றுவேன். ! நாங்க என்ன அலையறமாக்கும்.. ?”
”பின்ன வேற என்ன நடக்குது இங்க.. ?”
” ஏய்.. பீல் பண்ணி சொன்னாங்க கேக்கலையா ?”
” கேட்டுச்சு.. !! இச்சு இச்சுனு எலிக்குச்சு கத்துற சத்தம்தான.. ??”
” ச்சீ போடி ” அடித்தாள்.
” சரி.. சரி.. போலாமா.. இல்ல வேற ஏதாவது.. ?” என்று சாந்தியின் முலையை கிள்ளினாள் பாக்யா.
” மூடிட்டு நட.. ! அவ்வளவுதான்.. !!”
சுபாஷ் பைக்கை கிளப்பினான். மீண்டும் மூவரும் அமர்ந்து அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்கள். முதலில் பாக்யாவை கொண்டு வந்து காலவாய் அருகில் இறக்கி விட்டார்கள். !!
” பாத்து போடி ” என்றாள் சாந்தி.
” நான் போய்க்கறேன். நீங்க எப்படி வீட்டுக்கா.. ?? இல்ல லவ் ப்ளேஸ்க்கா.. ??”
” அத நாளைக்கு சொல்றேன் ” என்று விட்டுப் போனாள் சாந்தி.
அனேகமாக இரண்டு பேரும்.. மீண்டும் இருட்டில் எங்காவது ஒதுங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என நினைத்தாள் பாக்யா ….. !!!
இருட்டில் மெதுவாக நடந்து வீட்டுக்குப் போனாள் பாக்யா. அவளது அம்மா வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. எந்த சத்தமும் இல்லை. அவள் வீட்டில் பரத் இருந்தான். கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். அவள் எதுவும் பேசவில்லை.
” எங்க போனே ?” என்று அவனே கேட்டான்.
” சினிமாக்கு ” என்றாள்.
” யாருகூட.. ?”
” என் புருஷன் கூட.. ”
” யாரு.. அந்த டிரைவருதான் உன் புருஷனா.. ?” என்று அவன் கேட்க.. திக்கென்றானது அவளுக்கு.
இவனுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தாள். யாரோ தியேட்டரில் பார்த்து சொல்லியிருக்கிறார்கள். சொன்னால் என்ன.. ? நானா அவனது ஜோடி. ? சாந்திதானே.. ?