ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 6 25

சாந்தினி கருப்பாக இருந்தாள். ஆனால் வட்ட முகத்தில் மூக்கும் முழியுமாக.. அட்சரம் பிசகாத லட்சணத்துடன் இருந்தாள். பாக்யாவைப் போல அளவான உயரம்தான். ஆனால்.. பாக்யாவை விட செம அழகு. செம ஸ்ட்ரக்சர். !! இப்போது அவள் ரெட் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். !!

சாந்தினி திருமணம் ஆனவள். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தது. அவள் கணவன் கொடுத்து வைத்தவன் என்று பாக்யாவுக்கே தோன்றியது.
‘என் ராசுவுக்கு இப்படி ஒரு பெண் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ‘ என்று அவள் மனசு ஆசைப் பட்டது.

பேசி அறிமுகமானதும் பாக்யாவை அருகில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துப் போனாள் சாந்தினி. இரண்டு அறைகளைக் கொண்ட ஓட்டு வீடு. அது அவள் அம்மா வீடு. வீட்டில் இப்போது யாரும் இல்லை. டிவி.. பேன் எல்லாம் போட்டு விட்டு காபி வைத்துக் கொடுத்தாள் சாந்தினி.. !!

காபி குடிக்கும்போது கேட்டாள் பாக்யா.
” உங்க வீட்டுக்காரரு..?”

வறட்சியாகப் புன்னகைத்தாள் சாந்தினி.
”ஊர்ல..”

” கொழந்தை இருக்கா. ?”

கருப்பாக இருந்தாலும் தடித்து அழகாய்.. கவர்ச்சியாய் இருக்கும் தனது உதடுகளைப் பிதுக்கினாள் சாந்தினி.
”பச்..”

மேலே என்ன பேசுவதென தெரியாமல் அமைதியானாள் பாக்யா. இவ்வளவு அழகாக இருக்கும் இவளுக்கு குழந்தை இல்லையா.. என்கிற கவலை வந்தபோதே.. தனக்கும் அப்படி ஒன்று நிகழவில்லை என்கிற வருத்தம் எழுந்தது..!! அவளைப் போலவே சிறிது அமைதி காத்த சாந்தினி.. மார்பகம் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்..!!

” நானும் பரத்தோட அண்ணாவும் ஒண்ணாத்தான் படிச்சோம்.. ” என்றாள்.

” ஓ.. ” என்றாள். அவளது மாமியார் வீட்டுடன் அவ்வளவு நெருக்கம் வைததுக் கொள்வதில்லை என்பதால்.. அவளுக்கு அது புதிய செய்தியாக இருந்தது.

” அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல.. ?”

” ஊஹூம்.. பாத்திட்டிருக்காங்க..”

” அங்க சரியா போக்குவரத்து இல்லையா..?”

” இருக்கு… ஆனா.. அதிகமா இல்ல. அவன் டெய்லி போவான்..!”

” யாரு பரத்தா. ?”

” ம்ம்.. ”

” அவன் இவன்னுதான் சொல்வியா.. ?”

சிரித்தாள் பாக்யா.
” பழகிருச்சு..”

” ரெண்டு பேருக்கும் ஒரே வயசா..?”

” ம்ம். ”

” சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டிங்க இல்ல.. ? நானும்தான்.. டென்த் முடிஞ்சதும் கல்யாணமாகிருச்சு..”

” லவ் மேரேஜா.. ?”

” இல்ல. சொந்தம். எங்க வீட்ல பாத்து பண்ணி வச்சதுதான். ”

சிறிது நேரம் சாந்தினியின் கனவன் ஊர்.. அவனது குடும்ப விவரம் எல்லாம் எதார்த்தமாகச் சொன்னாள். பின்.. ”இப்ப நான் வந்து மூனு மாசம் ஆச்சு. ! இனி இங்கதான் எனக்கு நிரந்தரம்..” என்றாள்.

” ஏன்.. ?” லேசான வியப்புடன் கேட்டாள் பாக்யா.

”பிரச்சினை..! சண்டை போட்டுட்டு வந்துட்டேன். எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆகுது. ஆனா குழந்தை இல்ல. அதான் பிரச்சினை. என் மாமியார்க்காரிதான் இத்தனைக்கும் காரணம்.”

” ஓ.. அதுக்கப்பறம் அவரு வரலையா.. உங்களை பாக்கறதுக்கு..?”

” ம்ம்.. வந்தான் ” என உள் அமுங்கின குரலில் சொன்னாள் ”கூப்பிட இல்ல..”

” அப்பறம் ?”

”அவனுக்கு அங்க வேற ஒருத்தி கூட லிங்க் இருக்கு. அவனுக்கு சொந்தக்காரிதான். அவளுக்கும் கல்யாணமாகி புருஷன் இல்ல. ஒரு கொழந்தை இருக்கு. அது இவன் ஜாடைலதான் இருக்கும். இப்ப அவளையே கல்யாணம் பண்ணிட்டு வாழப் போறேனு சொல்ல வந்தான்.”

பாக்யாவுக்கு திகைப்பாக இருந்தது. ஆர்வமாகி கேட்டாள்.
”நீங்க என்ன சொன்னிங்க.. ?”

” என்னத்தை சொல்றது ? நமக்குத்தான் அதுக்கு வக்கில்லையே..? சரி என்னமோ பண்ணித் தொலைனு சொல்லிட்டேன்..!!”

” அப்ப நீங்க..?”

” அவ்வளவுதான். இதுக்கு மேல எனக்கு அவன்கூட வாழவும் புடிக்கல..”

” எப்படி.. இப்படி மனசு வந்துச்சு? ”

” யாருக்கு.. ?”