என் கணவனின் மென்மையான வருடல் 72

ரகுவிடம் கம்பெனியில் அவ்வப்போது பேசுவதுண்டு. ஒருநாள் மாலையில் நான் கம்பெனி முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்படும் பொழுது அங்கு இருந்த டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்தான் அவனுக்கு அன்று நைட் சிப்ட் என்றும் சொன்னான். எனக்கும் ஒரு டீ வாங்கி கொடுத்தான். அவனிடம் இந்திக்காரன் பசங்களிடம் ஜாக்கிரதையாக தங்கனும் வெளியில் தேவையில்லாமல் எங்கும் போகக் கூடாது என்றும் அறிவுரை சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஒரு இரண்டு வாரம் கழித்து அவன் ஊருக்கு போகவேண்டும் என்று சொன்னான் நான் ஓனரிடம் சொல்லி இரண்டு நாட்கள் லீவு வாங்கிக் கொடுத்தேன் சந்தோசமாக ஊர் போய்விட்டு திரும்பி வந்தான். வரும்பொழுது எனது அம்மா சில பலகாரங்கள் செய்து தந்து விட்டதாகவும் அதை கொண்டுவந்து கம்பெனியில் கொடுத்தான். எனக்கும் சந்தோசமாக இருந்தது அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று மாதவியிடம் அவன் கொண்டு வந்ததை சொன்னேன் மாதவியும் சந்தோஷப்பட்டாள் பரவாயில்லை ஊருக்கு போறதுக்கு நமக்கு ஒரு ஆள் இருக்கு என்று சொல்லி சிரித்துக் கொண்டோம்.

ஒரு வார சனிக்கிழமை அன்று காலையில் கம்பெனிக்கு கிளம்பி கொண்டிருந்தேன் அப்பொழுது மாதவி என்னிடம் ரகுவை நாளைக்கு வீட்டுக்கு அழைத்து வரச் சொன்னாள். அவன் நம்ம ஊர்க்கார பையன் அதனால நாளை மதியம் சாப்பாட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று சொன்னாள் நானும் சரி என்று சொல்லிவிட்டு மாதவி பெருந்தன்மையாக நடந்து கொள்கிறாள் என்று சந்தோசப்பட்டேன். அன்று கம்பெனியில் ரகுவை பார்த்தபொழுது நாளை உனது அண்ணி மதிய சாப்பாட்டிற்கு வரச்சொன்னாள் பாவம் நீ இங்கு கறி, நான் வெஜ் சாப்பிட முடியாமல் இருப்பாய் என்று அவனை அழைத்தேன். ரகுவும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் நான் வெளியில் சென்று ஆட்டுக்கறி வாங்கி வந்தேன் மாதவி சமைக்க ஆரம்பித்தாள். பதினோரு மணி போல் ரகு வீட்டுக்கு வந்தான் நான் அவனை பஸ் ஸ்டாப்பிற்கு சென்று அழைத்து வந்தேன். அன்று மாதவி நன்றாக சமைத்து அருமையாக பரிமாறினாள் அவள் அணிந்திருந்த சேலையும் ஜாக்கெட்டும் அவளை மிகவும் அழகாக காண்பித்தது. ரகு முதன் முதலில் மாதவியை எங்கள் வீட்டில் வைத்துப் பார்த்த பொழுது அவளது அழகு அவனை ஒரு கணம் மயக்கியது என்று சொல்லவேண்டும் ஒருகணம் திகைத்து நின்று விட்டான் மாதவியும் அதைக் கவனித்தாள். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அவனுக்கு நன்றாக உணவு பரிமாறி சாப்பிட சொல்லி வற்புறுத்தினாள் ரகு இது உன்னோட வீடு நான் உனக்கு அண்ணி தான் தயங்காமல் சாப்பிடு என்று சொல்லி அன்பாக பரிமாறினாள்.

ரகு சாப்பிட்டுவிட்டு டிவியில் கிரிக்கெட் போய்க்கொண்டிருந்தது. நானும் ரகுவும் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தோம் கவிதா வீட்டு பாத்திரங்களை எல்லாம் ஒழித்து போட்டு கழுவிக் கொண்டிருந்தாள். பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு எங்களுடன் வந்து அமர்ந்து கொண்டாள் சற்று நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். எங்களது பெட்ரூமில் இருந்து பார்த்தால் நன்றாக தெரியும் நான் பெட்டில் படுத்துவிட்டேன் அவர்கள் இருவரும் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள் நான் படுத்த நிலையில் இருந்து பார்த்தால் பெட்ரூமில் அவர்கள் உட்கார்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரியும். நேரத்தில் கண்ணயர்ந்து விட்டேன் அரை மணி நேரம் கழித்து கண் விழித்து பார்த்த பொழுது மாதவி கிச்சனில் இருந்தாள். ரகு டிவி பார்ப்பதை தவிர்த்து விட்டு அடிக்கடி பின்னால் திரும்பி கிச்சன் உள்ளே எட்டி பார்த்துக் கொண்டிருந்தான். மாதவி ஒரு பத்து நிமிடம் அங்கேயே தான் இருந்தால், இவன் திரும்பி திரும்பி பார்ப்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது ஏதோ வேண்டும் என்று கேட்க நினைக்கிறான் என்று நினைத்தேன்.

சற்று நேரத்தில் மாதவி திரும்பவும் வந்து அவனுக்கு அருகில் இருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டாள் எங்கள் வீட்டில் சோபா எதுவும் இல்லை அதனால் தள்ளி தள்ளி தான் உட்கார்ந்து இருந்தார்கள் ஆனால் அதிகமாகப் பேசிக் கொள்ளாமல் அவளைத் திரும்பிப் பார்த்து பார்த்து சைட் அடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் பெட்ரூமில் இருந்து ஹாலுக்கு வந்தேன் டிவி பார்க்க உட்கார்ந்தேன்.மாதவி டீ போட்டுக் கொண்டு வந்து எனக்கும் அவனுக்கும் கொடுத்தாள். ஒரு 5 மணி போல் அவன் கிளம்புவதாக சொன்னான் நானும் சரி என்று பைக்கில் கொண்டு போய் பஸ்ஸ்டாப்பில் விட்டுவிட்டு வந்தேன்.

புதன்கிழமை ஒருநாள் சாயங்காலம் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். நான் எங்கள் வீட்டுக்கும் போகும் பாதையில் திரும்பி எங்களது வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்தேன். எங்களது ஏரியா அவுட்டோரில் இருந்ததால் மண் சாலையாக தான் இருந்தது அப்பொழுது என்னை கடந்து பைக்கில் ஒருவன் செல்வதை பார்த்தேன் பார்த்தால் எனக்கு ரகு போல் தெரிந்தது. நான் பைக்கை நிறுத்தி திரும்பி பார்த்தேன் ஆனால் அதற்குள் அந்த பைக் வேகமாக சென்று விட்டது நான் வீட்டுக்கு வந்தவுடன் மாதவியிடம் இப்ப ரகு இந்த வந்தானா என்று கேட்டேன் அதற்கு இல்லையே யாரும் வரலையே என்று என்னிடம் சொன்னாள் நானும் சரி வேறு யாரோ என்று நினைத்து விட்டேன். ஏன் கேட்கிறீங்க என்று என்னிடம் கேட்டால் நான் சும்மா தான் என்று சொல்லி வைத்து விட்டேன்.

1 Comment

Comments are closed.