என் கணவனின் மென்மையான வருடல் 72

ஒரு முறை நானும் மாதவியும் எங்கள் ஊருக்கு சென்றிருந்தோம். அன்று எங்கள் ஊரில் ஒருவர் இறந்துவிட்டார் வயதானவர். ஊரில் யாராவது இறந்துவிட்டால் பெரும்பாலும் அனைத்து சொந்தக்காரர்களும் வந்துவிடுவார்கள். அப்படித்தான் திருப்பூரிலிருந்து எனது உறவுக்கார சித்தப்பா ஒருத்தர் வந்து இருந்தார். என்னிடம் நலம் விசாரித்துவிட்டு அவரது பையன் வேலையில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், உன்னுடைய பேச்சை கேட்பான். நீ அவன கம்பெனிக்கு கூட்டு போயிருப்பா என்றும் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் நானும் பார்க்கிறேன் சித்தப்பா இப்போதைக்கு வேலை காலி இல்லை என்று சொல்லிவிட்டு அவரை சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

சாயங்காலம் வீட்டில் நாங்கள் எல்லாரும் இருக்கும் சமயம் அந்த சித்தப்பா வீட்டுக்கு வந்துவிட்டார். எங்கள் வீட்டுக்கு மாடியில் ஒரு ரூம் மட்டும் போட்டு எடுத்து இருந்தோம். அங்கு எனக்கு கல்யாணம் ஆனவுடன் நானும் மாதவி தங்குவதற்காக எடுத்தது. என் உறவுக்கார சித்தப்பாவும் அவரது மகன் மேலே வந்துவிட்டார்கள். ரூமில் நானும் மாதவி மட்டும் இருந்தோம் மாதவி நைட்டி போட்டு இருந்தாள். நான் கைலி மட்டும் கட்டிக் கொண்டு மேலே பனியன் போட்டுக்கொண்டு ரிலாக்ஸ்டாக இருந்தோம்.

எனது சித்தப்பா அவரது மகன பேரு ரகுநாதன் என்று சொல்லி அறிமுகப் படுத்தி வைத்தார். அவன் பார்ப்பதற்கு என்னை விட சற்று உயரமாகவும் ஆல் தடியாகவும் கருப்பாகவும் இருந்தான் அவன் ஊரில் உள்ளவர்களுடன் சேர்ந்து நன்றாக தண்ணி அடித்து சுற்றுபவன் என்று எனக்கு அரசல்புரசலாக தெரியும். எனது உறவுக்கார சித்தப்பா திரும்பவும் கோரிக்கை வைத்தார். எப்படியாவது இவன உன்னோட கம்பெனிக்கு கூப்பிட்டு போயிருப்பா நீ என்ன சொன்னாலும் கேட்பான் என்று அவனுக்கு சர்டிபிகேட் வேறு கொடுத்தார்.

நானும் சித்தப்பாவும் பிளாஷ்டிக் சேரில் உட்கார்ந்து தான். ரகு நின்றிருந்தான் மாதவி அறைக்குள் இருந்தால். நான் ரகுவிடம் என்ன படிச்சிருக்க இதுக்கு முன்னாடி எங்கேயாவது வேலை பார்த்தியா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் மாதவி நின்றுகொண்டிருந்தாள். ரகுவும் நின்று கொண்டுதான் இருந்தான். நான் கேட்டதற்கு மிகவும் பவ்யமாக பதில் சொன்னான். எனக்கு அவன் பேசுவது நடிப்புத் தனமாக தெரிந்தது. நான் சித்தப்பாவை சமாதானப்படுத்தி சரி நாளைக்கு நானே கம்பெனில கேட்டு சொல்லறேன். அவர்கள் இருவரும் சென்றுவிட்டார்கள்.

நான் மாதவியிடம் இவர் எனது உறவுக்கார சித்தப்பா இரண்டு மூன்று முறை என்னை சந்தித்து அவர் பையனை வேலைக்கு கூட்டிட்டுப் போகச் சொல்றார் என்ன செய்றதுன்னு தெரியல என்று சொன்னேன் அதற்கு மாதவி பார்த்தா நல்ல பையனா தான் தெரியுது நீங்க வேணா கம்பெனியில கேட்டு பாருங்க என்று சொன்னால் சரி என்று அன்று இரவு தூங்கி விட்டோம்.

மறுநாள் காலையில் எங்களது ஓனருக்கு போன் பண்ணி கேட்டேன் சார் என்னுடைய தம்பி ஒரு பையன் வேலை கேட்கிறான் அழைச்சிட்டு வரவா என்று கேட்டதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார். அந்தத் தகவலை எனது உறவுக்கார சித்தப்பாவிற்கு சொல்லவும் மிகவும் சந்தோஷம் அடைந்தார். நீ எப்ப போறேன்னு சொல்லு உன் கூடவே அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். நான் வரும் புதன்கிழமை அனுப்பி வையுங்கள் அன்று நல்ல நாள் என்று சொல்லி அதோடு பஸ்ஸில் எப்படி வருவது என்று சொல்லி எனது செல் நம்பரையும் குறித்து கொள்ளச் சொன்னேன்.

அன்று மதிய வேளையில் நாங்கள் ஊருக்கு திரும்பிவிட்டோம் வேடசந்தூரில் எங்களது வீடு ஊருக்கு அவுட்டரில் இருக்கும். வாடகை வீடு உங்கள் வசதிக்கேற்ப எடுத்துக்கொண்டோம் சிறியதாக இருந்தாலும் கீழே வீட்டு ஓனர் இருப்பதால் பாதுகாப்பாக இருந்தது. அங்கிருந்து எனது கம்பெனிக்கு பைக்கில் 2 கிலோ மீட்டர். தினமும் கம்பெனிக்கு பைக்கில் சென்று வந்து விடுவேன்.

புதன்கிழமை காலை பதினொரு மணிக்கு நான் கம்பெனியில் இருந்த பொழுது எனக்கு போன் வந்தது. ரகுதான் பேசி வந்து விட்டதாகவும் எங்கு வரவேண்டும் என்று கேட்டான் வழி சொன்னேன் 11. 30 மணி வாக்கில் கம்பெனிக்கு வந்து விட்டான். கம்பெனி ஓனர் கிட்ட பேசி அவனை வேலைக்கு சேர்ந்து விட்டேன் அது மட்டுமில்லாமல் அவன் தங்குவதற்கும் இடம் தரச் சொன்னேன் அதற்கு ஓனர் இப்பொழுது இருக்கும் அறையில் நிறைய பேர் இருப்பதால் யாராவது காலியானால் தருவதாக சொல்லி விட்டார். வேறு வழியில்லாமல் அவனை என்னுடன் தங்குவதற்காக அழைத்துச் செல்ல வேண்டியதிருந்தது.

எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது மாதவி என்ன சொல்வாள் என்று தெரியவில்லை ஏனென்றால் வீட்டில் நானும் மாதவி மட்டும் தான் வேறு ஒருவர் தங்கினால் அவள் எப்படித்தான் எடுத்துக் கொள்வாரோ என்று எனக்கு தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. வேறு வழியில்லாமல் இந்திக்கார பசங்கள் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்கள் அவகளிடம் கெஞ்சி கூத்தாடி இவனுக்கும் ஒரு இடம் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அன்று மாலையில் மாதவியிடம் அவன் வந்து சேர்ந்ததையும் கம்பெனி அறையில் இடம் இல்லாததால், இந்திக்கார பசங்களிடம் பேசி இடம் வாங்கிக் கொடுத்ததையும் சொன்னேன். அதற்கு மாதவி பாவம் அவன் இந்தி தெரியாது எப்படி அவங்க கூட தங்குவான் என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் போகப்போக சரியாயிடும் கொஞ்ச நாள்ல தமிழ் பசங்க இருக்குற ரூம்ல கம்பெனிக்கு இடம் கொடுத்துறுவாங்க என்று சொல்லி அதோடு அந்த பேச்சை நிறுத்தி விட்டோம்.

1 Comment

Comments are closed.