கொடுத்துவச்சவன் – Part 11 88

“பத்மினி எல்லா விஷயத்தையும் சொன்னாளா?…..”

“சொன்னாங்க!….”

“அதுக்கு உன்னோட பதில் என்ன?….”

“எனக்கு இனிமேல் ஏதுங்க பதில்…. எல்லாமே உங்கள் விருப்பம்தான்….நீங்க நினைக்கிறதுதான் என்னோட பதில்…”

“நிஜமாகவா சொல்றே?….”

“ஆமாங்க… என் முழுமனசோடதான் சொல்றேன்…. “

“இருந்தாலும்…… பத்மினி….முழுசா சொன்னாளா….” ரவி தயங்கினான்…

“ஏங்க நான் ஒண்ணு சொல்றேன்…. கேக்கறீங்களா?…”

“சொல்லுடி….”

“உங்களுக்கு அந்தப்புரம்னு ஒண்ணு இருந்தா… அதிலே இருக்கிற பெண்களில் நானும் ஒருத்தியா இருந்துக்கறேன்… தாலியை வச்சு…. பட்டத்துராணியாக ஒருநாளும் முயற்சிக்கமாட்டேன்….”

ரவியும் பத்மினியும் வாயடைத்துப்போயினர்..

“என்ன நடந்தாலும் பின்வாங்க மாட்டியே?…. “

“ஜாதியை நினைச்சு பயப்படாதீங்க.. ஜாதி மனிதன் உண்டு பண்ணியது…. காதல் தானா வருவது… மனிதனுக்காக நான் என் காதலை துறக்கமாட்டேன்….. என்ன நடந்தாலும் நான் உங்க பக்கம்தான்…..”

“போதும் வரூ….இனிமேல் நான் பாத்துக்கறேன்…..போனை பத்மினிகிட்டே கொடு….”

“ஊகூம்..கொடுடின்னு சொன்னாத்தான் கொடுப்பேன்…. நீங்க என்னை வாடி போடின்னுதான் கூப்பிடனும்…அதுதான் நான் உங்க கிட்ட கெஞ்சி கேட்டுக்கறது…. “

“சரி கொடுடி….” ரவி சிரித்தான்….

“அக்கா!… அத்தான் உங்க கிட்டே பேசனுமாம்…” வெட்கத்துடன் செல்லை தந்தாள்…

“அடியே!.. ஓவரா வெட்கப்படாதே!…. பர்ஸ்ட் நைட்டிலே வெட்கப்படறதுக்கு கொஞ்சமாவது வெட்கத்து மிச்சம் வை…. காரணம் நானும் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள் இருப்பேன்… என் முன்னாடிதான் பர்ஸ்ட்நைட் நடக்க வேண்டும்…” வர்ஷினியை கிண்டலடித்தவாறே செல்லை வாங்கினாள்….

“என்னடி வர்ஷினியை பயங்கரமா கிண்டல் பண்ணறே?…”

“ஏன்? பண்ணக்கூடாதா?… “ பத்மினி சீற்றமாய் கேட்டாள்..

“அய்யோ அம்மாடி!… நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ…. நான் ஒன்றும் சொல்லவில்லை…. “

1 Comment

  1. please put new episodes I check every 1hour kadai supara irukku kamam mattume illamal kadalum iruppadu nalla irukku Ana page cammiya podarenga ippalam

Comments are closed.