நேருக்கு நேர் – Part 1 137

அடிப்படையில், ஓரளவு நல்லவள்தான்! மிகுந்த புத்திசாலியும் கூட! ஆனால், குணமில்லாத அறிவு, யாருக்கும் பயனற்றது. அதுதான் இவள் விஷயத்திலும் நடக்கிறது. இவள் இப்படி நடந்து கொள்ள முக்கியக் காரணம், இவளுடைய தந்தை!

நிவேதாவின் அப்பா ஒரு சைக்கோ! தன் சைக்கோ தந்தை, தன் அம்மாவை நடத்திய விதத்தில், ஆண்களைப் பற்றிய தவறான எண்ணம் அவள் நெஞ்சில் பதிந்திருந்தது.

அதனாலேயே, ஆண்களின் மேல் மரியாதை அதிகம் வைக்காமல், திமிராகவே நடந்து கொள்ள ஆரம்பித்தவள், பின் அதையே தனது கேரக்டராக மாற்றிக் கொண்டாள்! வேண்டுமென்றே, திமிர் பிடித்தவளாகக் காட்டிக் கொண்டதினாலோ என்னமோ, கட்டியக் கணவன் உடபட, யாரிடமும் அன்பையும், நட்பையும் காட்டாமலேயே இருந்தாள்!

ஏட்டிக்குப் போட்டியாக, வேண்டுமென்றே பேசுவதை, பெண்ணியம் பேசுவதாக நினைத்துக் கொண்டவள்! தனக்கான சந்தோஷம் எது என்பதையே முழுதாக உணராததால், தன் கணவனின் சந்தோஷம் எது என்பதையும், பெரிதாகக் கண்டு கொள்ளாதவள்!

சிவா, 30 வயது ஆண் மகன்! BE மெக்கானிக்கல் முடித்தவன், ஒரு MNC ல் பெரிய பொறுப்பில் இருப்பவன், படிப்பு, விளையாட்டு, என பல துறைகளில் திறமைசாலி, அந்த பன்திறமையாலேயே, சிறிய வயதிலேயே பெரிய பொறுப்புக்கு வர முடிந்தவன், 10 வது படிக்கும் போதே, தாய் தந்தையரை விபத்தில் இழந்தவன், தன் இழப்புகளைத் தாண்டி, சொந்தங்களின் துணையுடன், தன்னை நல்லபடியாக வளர்த்துக் கொண்ட நல்லவன்!

தன் தாய் தந்தை இறந்த பின், சிவா தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வளர்ந்தான். ஓரளவு வசதியானவர்கள், தந்தை மத்திய அரசு வேலை என்பதால், விபத்திற்க்கு கிடைத்த இழப்பீடு மற்றும் செட்டில்மெண்ட் பணம் எல்லாம் அவனிடம் இருந்தாலும், அவனுடைய தாத்தா, பாட்டியே அவனுடைய படிப்பைப் பார்த்துக் கொண்டனர். அவர்களும், அவனுடைய கல்லூரிக் காலத்தில் இறந்து விட்டனர்.

இதர சொந்தங்கள் இருந்தாலும், ஏனோ, ஒரு முழுமையான அன்பு, அவனுக்கு பிறந்ததில் இருந்தே கிடைக்கவில்லை! நிவேதாவின் சோகமான பின்புலத்தைப் பற்றி தெரிந்ததால், அவள் மேல் கூடுதல் அன்பு செலுத்துபவன்! அவள் மாறி, இயல்பான பெண்ணாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று துடிப்பவன்!

யாருக்கும் அடங்காத நிவேதாவை, இப்போது படுக்கையில் கிழித்துக் கொண்டிருப்பவன்தான் விஜய்!

விஜய், 30 வயது, BE கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவன், ஒரு IT MNC ல், டெலிவரி ஹெட். சிவாவைப் போன்றே பல் துறை வித்தகன், அவனைப் போன்றே, தன் திறமையால் முன்னுக்கு வந்தவன்!

தஞ்சை அருகே இருக்கும் ஒரு விவசாயக் குடும்பத்தில், படித்து பட்டம் வாங்கிய முதல் பட்டதாரி, கிராமத்து, விவசாய உடம்பு. வேறொருவரின் வார்த்தையில் சொல்வதென்றால் சரியானக் காட்டான்! அப்பா, இன்னமும் விவசாயத்தில் இருக்க, ஒரே அக்காவை பக்கத்து ஊரில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்!

இவன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்புதான், குடும்பத்தின் பொருளாதார நிலைமை மாறியிருக்கிறது. ஊரில், ஓட்டு வீடு, மாளிகையாக மாறியிருக்கிறது. சிறிய விவசாய நிலம், இப்போது பெரிய காடாக மாறியிருக்கிறது!

சொல்லப்போனால், இவனுடைய இந்தத் திறமையையும், குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்த விதத்தையும் பார்த்து வியந்ததால்தான், பொருளாதார வித்தியாசம் இருந்தாலும், அதே ஊரைச் சேர்ந்த, திருச்சியில் செட்டிலாகியிருந்த, அஞ்சலியின் பெற்றோர், தன் மகளை, அவனுக்கு கட்டி வைத்தனர்.

திருச்சியில் நான்கு, பெரிய சூப்பர் மார்கெட் கடைகளை நடத்தும் பெரிய பணக்காரரின் மகள் அஞ்சலி. வயது 27, அழகி, அவள், படித்ததும், வளர்ந்ததும் முழுக்க திருச்சியில்தான். படிப்பு சுமார் என்பதால் BSc யோடு முடித்து விட்டாள்! இப்போது, சென்னையில், விஜய்யைக் கல்யாணம் செய்த பின், நிவேதாவின் சொந்த வீடு இருக்கும் அதே அபார்ட்மெண்ட்டில், வாடகை வீட்டில் வசிக்கிறாள்!

இந்தக் கதை, இப்படி நடப்பதற்க்கு முக்கியக் காரணம், சிவா, விஜய் இடையே இருக்கும் பகைதான்!

சிவா, விஜய், இருவரும் ஒரே சமயத்தில், ஒரே கல்லூரியில், BE சேர்ந்தார்கள். இரண்டு பேருமே, படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் அனைத்திலும் கெட்டிக்காரர்கள் என்பதால், அவர்களிடையே போட்டி தொடங்கியது. திறமையில், யாரும், யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதால், முதல் இரு வருடங்களில் சாதாரணமாக இருந்த போட்டி, 3வது, 4வது வருடங்களில் பகையாக மாறி, சுற்றியிருப்பவர்களின் உசுப்பேற்றலால், சமயங்களில் கடும் சண்டை அளவிற்குச் சென்றிருக்கிறது.