லிகிதா ஒரு இடத்தை கூர்ந்து பார்த்து விட்டு,”சந்தேகமே வேண்டாம்டி..அங்கே பார்.”என கைகாட்டினாள்.
சரியாக டாஸ்மாக் பின்புறம் இருந்து கஜாவின் வாகனம் சென்றது..
மேகலா லிகிதாவை திரும்பி பார்த்து,”அவன் உன்கிட்ட சொன்ன வேலையை செய்ஞ்சிட்டான்.அடுத்து அவன் உன்கிட்ட வந்து உன்னை தான்டி கேட்க போறான்…எப்படிடி சமாளிக்க போறே..”
“ம்…நீ சொல்றது சரி தான்..நான் சம்மதிக்கவில்லை என்றால் கூட என்னை வலுக்கட்டாயமாக அடைய கூட பார்ப்பான்.அதற்கான சந்தர்ப்பத்தை நான் தரப்போவது இல்லை..அப்படி எதுனா மாட்டிக்க நேர்ந்தாலும் என்னை நான் காப்பாற்றிக் கொள்ள தெரியும்..நீ கவலைபடாதே மேகலா..
ஆனால் கஜா அவளை தேடி வரவில்லை..ஒன்றிரண்டு நாட்கள் கடந்து சென்றது..
வழக்கம் போல் லிகிதா வேலை முடிந்து தன் ஸ்கூட்டியில் வரும் பொழுது ஒரு ரவுடியை சில பேர் ஆயுதங்களோடு துரத்தி கொண்டு வருவது தெரிந்தது..அது வேறு யாருமல்ல கஜா தான்.
எதிர்வந்த லிகிதா வண்டியை வழிமறித்து,”சீக்கிரம் வண்டியை திருப்பு” என்றான்….
வண்டியில் ஏறி அமர்ந்து,”போ போ சீக்கிரம் போ “என கத்த அவள் வண்டி வலப்புறம்,இடப்புறம் என திரும்பி சந்து பொந்துக்குள் நுழைந்து சீறி பறந்தது.கொஞ்ச தூரம் சென்ற பிறகு கஜா திரும்பி பார்த்தான்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் பின் தொடர்ந்து வரவில்லை என உறுதி செய்து கொண்டான்..
மயிரிழையில் உயிர் தப்பி வந்த பிறகும்,லிகிதாவின் பின்புற அழகு அவனை வசியம் செய்தது.பயம் காமமாக மாறியது.ஸ்கூட்டியின் பின்புற கைப்பிடியை பிடிச்சு இருந்த கைகளை எடுத்து லிகிதாவின் தோள்களின் மீது வைத்தான். பயத்தில் உள்ளங்கை வியர்த்து போய் இருந்தது..அவள் தோளில் கை வைத்தவுடன் வியர்வையின் பிசுபிசுப்பால் அவன் கைவிரல்கள் அவள் தோளின் மீது அழுத்தமாக பதிந்தன.அவன் விரல்களின் சூட்டை லிகிதா உணர்ந்தாள்.ஆனால் கண்டு கொள்ளவில்லை.
“யார் அவங்க?எதுக்கு உன்னை துரத்தறாங்க..”லிகிதா கேட்க,
“எல்லாம் உன்னால வந்த வினை..”என கஜா சொன்னான்.
“ஏன் நான் என்ன பண்ணேன்..?”
“எல்லாம் அந்த டாஸ்மாக் மூடியதால் வந்த வினை.டாஸ்மாக் வச்சு இருந்தவன் அரசியல்வாதி,நாங்க எல்லாம் அவன் அடியாள்..ஒருநாள் அடியாள்,முதலாளியை எதிர்த்தால் ஏற்படும் கதி தான் எனக்கும்..என்கிட்ட இருந்த பாதிபேரை அவன் விலைக்கு வாங்கிட்டான்.என் ஆளுங்களை வச்சே என்னை மட்டை போட அவன் பிளான் போடறான்.இப்போ கூட அவனுங்க கிட்ட இருந்து தப்பி தான் வந்து இருக்கேன்..”
“ஏன் சார்,இப்பவாது இந்த ரவுடி தொழிலை விட்டுவிட்டு உங்க பொண்டாட்டி,புள்ளையை நினைச்சு நல்ல வேலை ஏதாவது பார்க்கலாம் தானே..”
“என்னது..!பொண்டாட்டி புள்ளையா..?எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலயே..”
“என்ன சார் சொல்றீங்க..உங்கள் வாழ்க்கையில் காதல்,கல்யாணம் எதுவுமே இல்லையா?”லிகிதா ஆச்சரியமா கேட்க..
“கல்யாணம் இல்லை,ஆனா காதல் இருந்தது…”
அப்படியா..?எப்போ சார்? லிகிதா ஆர்வமுடன் கேட்க
“அதுவந்து நான் காலேஜ் முதல்முதலாக உள்ளே நுழையும் பொழுது ஒரு பொண்ணை பார்த்தேன்.பார்த்த உடனே காதல்,உடனே போய் லவ் சொல்லலாம் என்று லவ்லெட்டர் எல்லாம் எழுதி கொண்டு போய் கொடுக்க போய்ட்டேன். ”
“ம்ம்ம்ம்…இன்ட்ரஸ்டிங்..அப்புறம்..!மேலே சொல்லுங்க..”
“அப்புறம் தான் தெரிஞ்சது..நான் கொடுக்கலாம் என்று நினைச்ச பொண்ணு ஒரு புரோபஷர்..”
“அய்யயோ அப்புறம்..?”
“அப்புறம் என்ன,லெட்டர் அவகிட்ட கொடுக்காம கிளாஸில் உள்ள ஒரு பொண்ணு கிட்ட கொடுத்துட்டேன்..”
“சரி, அதுவாவது வொர்க் அவுட் ஆச்சா.?”
“எப்படி வொர்க் அவுட் ஆகும்…?
ஆளை மாத்தினா போதுமா..?லெட்டரில் பேரை தான் மாற்றவில்லையே..அப்படியே எடுத்திட்டு போய் கொடுத்தேன்.புட்டுக்குச்சு…”என்று கஜா சொல்ல லிகிதா அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
“கேட்க indecent ஆக இருந்தாலும் ஆனா சிரிப்பா இருக்கு” என்று சொல்லி கொண்டே வண்டியை ஓட்டினாள்.
கஜா அவள் இடுப்பை பார்க்க,அவனுக்கு பெருமூச்சு வந்தது.தொட வேண்டும் என ஆசை பிறீட்டு வந்தது..
கஜாவின் கைகள்,தோளில் இருந்து அவள் கைகள் தொட்டு,இடுப்பை சென்று சிக்கென்று பிடித்தது
ஒரே நொடி தான்..லிகிதா உடம்பில் மின்னல் பாய சடக்கென்று ப்ரேக்கிட்டு வண்டியை நிறுத்தினாள்..
“என் இடுப்பில் இருந்து கையை எடுங்க சார்” ,அவள் கத்த..
கஜா அவள் பேச்சை சட்டை செய்யவே இல்லை,இடுப்பில் இருந்து இன்னும் கையை எடுக்கவில்லை..மாறாக இடுப்பின் ஓரம் இருந்த கை,ஊர்ந்து தொப்புளை சென்று அழுத்தி கட்டி அணைத்தான்..
லிகிதா உடனே வண்டியை விட்டு கீழே இறங்கி விட்டு,”இங்க பாருங்க ஒழுங்கா வண்டியை விட்டு கீழே இறங்கி போங்க..”என கத்தினாள்..
“எப்பவுமே மாத்திரை சாப்பிடும் பொழுது கசக்கமா இருக்க சர்க்கரை போட்டு கொள்வது வழக்கம் கண்ணு..அதுபோல தான் ஒரு சீரியஸான விசயத்தை சொல்வதற்கு முன்னாடி கொஞ்சம் உன்கிட்ட காமெடியா பேசினேன் அவ்வளவு தான்..அன்னிக்கு டாஸ்மாக் கலவரத்தில் ஒருத்தர் மேல வந்து நீ மோதின ஞாபகம் இருக்கா” என கேட்டான்…
“ஆமா ஞாபகம் இருக்கு..”
“அது நான்தான்..நீ மோதின அந்த ஒரு நொடியிலேயே உன்னோட மென்மை எனக்கு நீ வேண்டும் என்று தோணிடுச்சு..அன்னிக்கே உன்னோட நிர்வாண மேனியை பார்த்த பிறகு என்னோட வேட்கை இன்னும் அதிகமாய்டுச்சு. உன் அழகுக்காக எதை வேண்டுமானால் இழக்கலாம் என்று தோணுச்சு..அதனால் அந்த அரசியல்வாதியை கூட எதிர்த்து நிக்கவும் துணிந்தேன்,அது இப்போ என் உசிருக்கே உலை வைக்கும் அளவுக்கு வந்து நிக்குது…இருந்தாலும் எனக்கு என் உசிரை பற்றி கவலை இல்லை,ஆனா நீ எனக்கு வேணும்..
இதை ஓரளவு லிகிதா எதிர்பார்த்து இருந்தாள்,அதனால் அவள் அதிர்ச்சி அடையவில்லை..
கஜா மேலும்,”இங்க பாரு குட்டி எனக்கு காதல்,கத்தரிக்காய்,திருமணம் இதில் எதுவும் நம்பிக்கை இல்ல..நீ எனக்கு வேணும்,முழுசா வேணும்..”என மேல் இருந்து கீழாக அவளை கைகாட்டி “என் கூட வந்து படுத்து நான் திருப்தி அடைகிற வரை என்னை நீ குஷிபடுத்தனும்..அது எத்தனை நாள் ஆனாலும் சரி..”என்று அவன் சொல்லும் பொழுதே..
லிகிதா அக்குபஞ்சர் ஊசியை தயாராக வைத்து கொண்டாள்..
“சார் அதுவந்து…”
“இங்க பாரு குட்டி..உனக்கு ரெண்டு நாள் டயம் தரேன்..இந்த அட்ரஸில் நான் உனக்காக காத்து இருப்பேன்”,என ஒரு கார்டை அவள் கையில் திணித்தான்.
