அனுபமா 381

நான் அவளை விட்டு பல்லு தேய்க்க வெளியே போகையில் என் பின்னால் இருந்து குரல் கொடுத்தாள்.
‘என்னை யாரும் கூப்பிடுறதில்லை லட்சு’
‘ஹா.. அப்படின்னா அவர் என்னை கூப்பிட்டிருந்தார். இன்னையில இருந்து நீ நைட் நம்ம குடும்பவீட்டில் போய் தங்க சொன்னார்.’
‘அது என்ன இப்போ இது புதுசா இருக்கு. சித்தப்பா வெளிநாடு போய் ஒரு வருஷம் ஆச்சே. இதுவரை இல்லாத காவல் இப்ப எதுக்காம்.’
‘நேத்து நைட் வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் ஆள்நடமாட்டம் எல்லாம் கேட்டு அம்மு ரொம்பவே பயந்தாளாம். அவ பயந்தத பாட்டி சித்தப்பா கிட்ட சொல்லி சித்தப்பா அம்முவ கூப்பிட்டு உன்ன துணைக்கு கூப்பிட்டு படுக்க வைக்க சொன்னாராம்.’
இது கேட்டதும் எனக்கு ரொம்ப சங்கடம் ஆச்சு….

மற்ற உறவுகாரங்க முன்னாடி அவள் எனக்கு சித்தி ஆனாலும் என் மனதில் நான் குடிவைத்திருக்கும் என் தேவதைக்கு இப்படி ஒரு அவஸ்தை வந்தது, அதுவும் நான் இந்த ஊரில் இருக்கும் போதே. அது என்னால தாங்கவே முடியல.

கடவுளே! இவங்க எல்லாருமா சேர்ந்து என்னை அங்கு போய் தங்க சொல்லணுமே!. நான் கடவுளிடம் என் மனதில் வேண்டிகொண்டேன். ஒன்றும் இல்லைன்னாலும் அவளை பார்த்து கொண்டாவது இருக்கலாம். என்னோட இந்த நினைப்பு ரொம்பவே தப்பா தான் இருக்கலாம். அதெல்லாம் எனக்கு தெரியாது. அவளை எனக்கு என் உயிருக்கு மேலாக விரும்புறேன். அவளுக்காக நான் என்ன வேணுண்ணாலும் செய்ய தயாராக இருக்கேன். ஆனால் முக்கிய காரணம் இது ஒண்ணும் இல்லை. அவள் இந்த குடும்பத்தில் வந்து இவ்வளவு நாள் ஆகியும் என்கிட்ட இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன் என்னை நேருக்குநேர் பார்த்ததில்லை. ஆனால் நான் அவளை என் கனவு கன்னியா நினைச்சு அவளை கனவு கண்டு நடக்கிறேன்.

‘நான் உன் சித்தப்பா கிட்ட சொன்னேன், உன் கிட்ட பேசசொல்லி. நான் உங்க இடையில் வந்து திடீர்னு சம்மதிச்சா அது என் செல்ல மகனுக்கு பிடிக்கலைன்னா?’
அம்மா தொடர்ந்தாள்.

‘பிடிக்காம ஒண்ணும் இல்லை. நான் அங்க போய் தங்கி இருந்த என் செல்ல அம்மா லட்சுகுட்டிய யாரு பாத்துக்கறதாம்.’

நான் அம்மாவோட சாரி முத்தானையால முகத்தை துடைத்தபடி கேட்டேன்.

இங்கத்த மாதிரியா கண்ணா அவங்களோட வீடு. இங்க பயப்பட என்ன இருக்கு. சுற்றிலும் நிறைய வீடுகள். கூப்பிட்டா உடனே ஓடிவர சுற்றிலும் நிறைய ஆட்கள். ஆனால் அங்க. அது ஒரு காட்டு மூலை. சத்தம் போட்டா கூட கேட்க ஒரு ஆளும் வரமாட்டாங்க.’

‘அப்ப நான் கண்டிப்பாக போகணும்ன்னு தானா அம்மா நீங்க சொல்றீங்க.’

‘பின்ன போடவேண்டாமா. என்னை நினச்சு நீ வருத்தப்படாத. என்ன பாதுகாத்து கொள்ள எனக்கு தெரியும்.’
அம்மா ரொம்ப வீரவசனம் பேசினாள்.

‘ஐயே… உங்கள நினச்சு நான் கவலைப்படவில்ல. இங்க உள்ள பாத்திர பண்டங்களை யாராச்சும் தூக்கிட்டு போனா யாருக்கு நஷ்டம். அதான் யோசிக்கறேன்.’
நான் இத சொல்லியபடி அம்மாவோட கன்னத்தை கிள்ளினேன்.

‘போடா நாயே’ அம்மா என்னை கோவத்தில பிடித்து தள்ளி விட்டாள்.

நான் போய் டேபிளில் இருந்து தட்டை எடுத்து இட்லியில் சட்டினியை ஊற்றியபடி அம்மாவிடம் திரும்பி…
‘அப்புறம் என்னை தேவையானவங்க என்னை நேரிடையாக கூப்பிடட்டும். அல்லாம சிபாரிசு எல்லாம் இங்க எடுபடாது.’
ஒரு உள் அர்த்தத்தில் நான் அப்படி சொன்னேன்.

‘யாரு அம்முவா?’
அம்மா கொஞ்சம் ஆச்சரியத்தில் கேட்டாள்.

‘ஆமா.. அவங்க தான்.’

1 Comment

  1. Waste story

Comments are closed.