அந்த பயல் டேனிக்கு அடிச்சுது லக்கு – Part 1 77

“டேய் ஆதி. என்னடா சொல்லற நீ! அந்த பானுவை வச்சிக்கிட்டு இருக்கியா?! இதெல்லாம் அடுக்குமாடா! ஐய்யோ கடவுளே! அதுக்குத்தான் இந்த வெளியூர் எல்லாம் வேணாமின்னு தலைக்கு மேல அடிச்சுக்கிட்டேன்..” என்று சுந்தரி அரற்ற ஆரம்பித்தாள்.
“அம்மா! இது அமெரிக்காம்மா. இதெல்லாம் இங்கே சகஜம். ஆனா நான் தான் சொன்னேன் இல்ல. நான் அவளை கலியாணம் பண்ணிக்கலைன்னு! அப்புறமும் ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க..! அவளுக்கு வேற ஒரு பாய் பிரண்டு இருக்கான்” என்று ஒரு வழியாக சுந்தரியை சாமாதானம் படுத்திவிட்டு ஆதி வெளியேறினான்.

சுந்தரி தன் முகம் கைகளை கழுவி விட்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள். அங்கே பானு ஏற்கன்வே தான் சமைத்த எல்லாவற்றையும் எடுத்து வைத்து இருந்தாள். சுந்தரியையும், ஆதியையும் பார்த்தவுடன், “ஆதி! நான் கிளம்பரேன். எனக்கு நேரமாயிடுச்சு..” என்று பானு சொல்லவும், வெளியில் ஹார்ன் ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. ஆதியின் முகத்தில் கேள்விக்குறி எழ, “வெளியில டேனி வந்து இருக்கான். நீ ஏற்போர்ட்டுக்கு போயிருந்ததப்போ அவனிடம் இருந்து இதோட நாலு போன் கால் வந்துடிச்சு..” என்றாள் பானு. ஆதியின் முகத்தில் இருந்த கேள்விக்குறி இன்னும் மறையாமல் இருக்க, “ஐய்யோ சொல்ல மறந்துட்டேனே! டேனி தான் என்னோட பாய் பிரண்டு! என்னை டின்னருக்கு கூட்டிட்டு போக வந்து இருக்கான்” என்றாள் பானு. சுந்தரி தன் முகத்தை சுளித்தாள். ஆதி மேலே அவளை இருக்க வற்புறுத்தாமல், “பானு..! நாளைக்கு நீ பிரியா இருந்தேன்னா அம்மாவை கூட்டிக்கிட்டு போய் கொஞ்சம் விண்டர் டிரஸ் (winter dress) வாங்கிட்டு வாயேன்.. அவங்களுக்கு குளிர் தாங்காது. பீளீஸ்..” என்றான் ஆதி.
“ஹோ நோ பிராமிளம். ஷ”யர்..” என்ற பானு, “ஆண்டி நான் இப்ப கிளம்பறேன். நாளைக்கு சாயங்காலும் உங்களை வந்து கூட்டிட்டு போறேன்..” என்று கூறிவிட்டு பறந்தாள். அவள் சென்றதும், சுந்திரி முகத்தை கடுகடுப்பாய் வைத்துக்கொண்டு, “இந்த ஊருக்கு வந்தா அவ அவளுக்கு புத்திக்கெட்டு பொயிடும் போல இருக்கு! இவங்க அப்பா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா? இந்த மாதிரி கண்ட கண்டவனோட அலையறாளுங்க..” என்று சுந்தரி திட்டி தீர்த்தாள்.
சாப்பிட்டு முடித்த பின்பு, ஆதி டைனிங் டேபிளை ஏறக்கட்ட ஆரம்பித்தான். “அம்மா நீங்க போய் தூங்குங்க.. நான் எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு வரேன்..” என்று ஆதி சொல்ல, சுந்தரி கிளம்பினாள்.
மறு நாள் மத்தியாணம் வரை சுந்தரி தூங்கினாள். சுமார் மூன்று மணி வாக்கில் சுந்தரி எழுந்து ஹாலுக்கு வந்தாள். அங்கே ஆதி டீவி பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான். வெளியில் பளிச் என்ற வெளிச்சத்தைப் பார்த்த சுந்தரி, “ஆதி! மணி என்ன ஆகுது” என்றாள். “மணி மத்தியாணம் மூணு ஆவுதும்மா..” என்றான் ஆதி. சுந்தரி அதிர்ச்சி அடைந்தாள். “என்னடா சொல்லறே! இவ்வளவு நேரமா நான் தூங்கிட்டேன்..?” என்று நம்ப முடியாதவளாக கேட்டாள்.
“ஆமாம் அம்மா. இது அமெரிக்கா இல்ல? இங்க நம்ம ஊர் நேரத்தை விட 12 மணி நேரம் பின்னாடி. அதுவும் நீங்க பிளைட்டில வேற வந்தீங்களா.. அதான் டயர்டா இருந்திருக்கும்..” என்றான் ஆதி சிரித்துக்கொண்டே. “சரி சரி.. நீங்க குளிச்சிட்டு ரெடியாயிட்டு வாங்க.. சாப்பிட்டுட்டு டாக்டெர் கிட்ட போகலாம்..” என்று ஆதி சொல்ல, சுந்தரி மீண்டு உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் வெளியில் வந்தாள். “டேய் ஆதி! என்னடா இது! இங்க உள்ளே என்ன என்னமோ இருக்குது. எனக்கு ஒன்னுமே புரியலை!” என்றாள்.
எழுந்து சென்ற ஆதி, தன் அம்மாவுக்கு குளியல் அறையில் இருந்த பல்வேறு உபகரணங்களை காட்டினான். “அம்மா! இது ஷவர். இத தெறந்தா வெந்நீர் வரும். இத தெறந்தா தண்ணீர்..! இது பாத் டப்! அதான் இது வந்து குளிக்கறதுக்கின்னு இருக்கிற, ஒரு சின்ன குட்டைன்னு வச்சுக்கோங்களேன். இதுல.. இங்க பாருங்க.. இந்த மாதிரி தண்ணிய நிரப்பிட்டு உள்ளே படுத்துக்கிட்டு குளிக்கலாம்..” என்று ஒவ்வொன்றாய் விளக்கினான். சுந்தரியின் கண்கள், ஆச்சரியத்தில் விரிந்தன. “இது என்னடா? குளியல் அறை போனா?” என்றாள் சுந்தரி. “ஐய்யோ அம்மா! பத் டப்பில போன் எங்கேயாவது இருக்குமா? இதுல தண்ணீ வரும். சும்மா மொண்டு மொண்டு ஊத்தாமா, இந்த பைப்பை திறந்து விட்டுட்டு, இந்த போன் மாதிரி இருக்கே, இதை கையில எடுத்துக்கிட்டு, வசதியா, நம்மோட உடம்புல எங்க வேணுமின்னாலும் தண்ணீய அடிச்சிக்கலாம்..” என்று சிரித்துக்கொண்டே விளக்கினான்.

சுந்தரி முகத்தில் அசட்டு வழிய, “சரி.. நீ போ. நான் சீக்கிரம் குளிச்சுட்டு வந்துடறேன்..” என்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் சுந்தரி குளித்து விட்டு, ஒரு புதிய புடைவை அணிந்துக்கொண்டு தேவதை மாதிரி வந்து நின்றாள். ஆதி அசந்துபோய் பார்த்தான். “வாவ் அம்மா.. யார் சொன்னது உங்களுக்கு வயசாயிடிச்சுன்னு.. நீங்க மட்டும் சரின்னு சொன்னீங்க.. உங்களை கலியாணம் பண்ணிக்க நீ நான்னு போட்டிப்போட்டுக்கிட்டு ஆளுங்க வந்து நிப்பாங்க..” என்று ஆதி கிண்டலடிக்க, “ச்சீ போடா..” என்று சுந்தரி வெட்கப்பட்டாள். அவள் சாப்பிட்டு முடித்தவுடன், அவளைக் கூட்டிக்கொண்டு ஆதி, டாக்டரிடம் சென்றான்.
டாக்டரின் அறைக்குள் சென்றதும், ஆதி தன் அம்மாவின் முதுகு வலி மற்றும், உடல் நிலையைப் பற்றி விளக்கினான். “ஓகே மிஸ்டர் ஆதி! நீங்க கொஞ்சம் வெளியில இருங்க. நான் செக்கப் பண்ணிட்டு உங்களை கூப்பிடறேன்..” என்று டாக்டர் கூற ஆதி வெளியில் போக எத்தணித்தான். உடனே சுந்தரி, “டேய் ஆதி! வேணாம் வேணாம் நீ இங்கேயே இரு.. எனக்கு பயமா இருக்கு..” என்று சுந்தரி கெஞ்சினாள். ஆதி டாக்டெரைப் பார்க்க, அவர் புரிந்துக்கொண்டதிற்கு அடையாலமாக தன் தலையை ஆட்டி விட்டு சுந்தரியை பக்கத்து கட்டிலில் ஏறி குப்புற படுக்க சொன்னார்.