நிஷா அவன் காதைப் பிடித்துத் திருகினாள். அவங்ககிட்ட.. என்மேல பயம் இருக்குறமாதிரி நடிக்கிறது, என்கிட்டே… அவங்கமேல பயம் இருக்குறமாதிரி நடிக்கிறது….. சரியான ப்ராடுடா நீ
ஆஆ…. நான் ப்ராடு இல்ல.. பாவம்
அப்போ கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுவியா
சொல்றேன் சொல்றேன். நீங்க முதல்ல துப்பட்டாவை ஒழுங்கா போடுங்க
கீழே குனிந்து பார்த்த நிஷா, உன்ன…. என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவன் தலையில் நங்கென்று கொட்டினாள். இவன் ஆஆ என்று அலறுவதை பார்த்து சிரித்துக்கொண்டே எழுந்தாள். சீனு அவள் டாப்ஸின் நுனியைப் பிடித்துக்கொண்டான்.
ஏய்… விடு
நாளைக்கு புடவைன்னு சொல்லுங்க அப்போதான் விடுவேன்
ஏண்டா இவ்ளோ நேரம் லெக்கின்ஸ் லெக்கின்ஸுனு சொன்னே?
லெக்கின்ஸ் போட சொன்னாதான் கண்ண பிடுங்க வர்றீங்களே
நிஷா சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து டாப்ஸை உதறி விடுவித்துக்கொண்டு போனாள்.
நாளைக்கு சண்டே. லீவுன்னு நினைச்சிடாதீங்க காலைலயே வருவேன். என்னால படிக்காம இருக்க முடியாது என்று குரல் கொடுத்தான்
வந்து தொலை… என்றாள். சிரிப்பை மறைத்துக்கொண்டு.
மறுநாள் – அவன் ஆசையோடு வந்தான். இவள் புடவையில் இருந்தாள்.
Continue very nice
Hai
Edhartham kalandha vilayatu super continue this series