வாசமான ஜாதிமல்லி – பாகம் 9 51

வெளி உலகம் என்ன சொல்லும் என்ற அச்சம் அவளுக்கு ரொம்ப இருக்கும். மாறாக ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அவனுடன் இருந்தாலும் போதும் என்று விரும்புவாள் என்று பிரபு நினைத்தான். இது அவன் திட்டத்தின் முதல் பாகம்.

ஆமாம், இந்த சூழ்நிலையில் அவன் வெளி தோற்றத்திற்காக மட்டுமே மீராவுடன் வாழ்வான் என்றும் அவன் மீராவை தனது மனைவியாக கருத மாட்டான் என்றும் சரவணன் கூறியிருந்தாது பிரபு அறிவான். சரவண தன் வாழ்க்கையை அவன் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்க போவதாக சொல்லிவிட்டான். அவன் வீட்டில் மீராவின் பங்கு, வீட்டை பராமரிப்பது மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தவிர வேறொன்றுமில்லை என்றும் சரவணன் சொல்லிவிட்டான். சரவணனைப் பொருத்தவரை மீரா பிரபுவின் வைப்பாட்டி, அவனுக்கு இனிமேல் அவள் ஒரு வேலைக்காரி தவிர வேறொன்றுமில்லை. இங்குதான் ஒரு மாற்றத்தை செய்ய முடியும் என்று பிரபு நினைத்தான்.

இப்போது நீண்ட காலமாக இருந்த கோபம் வெடித்து வெளிவரும் போது சரவணன் இவ்வாறு நினைக்கலாம், ஆனால் சரவணனுக்கு, மீராவுடன் இருக்கும் உணர்ச்சிபூர்வமான அன்பு அவ்வளவு எளிதில் போகாது என்று பிரபு நம்பினான். தனக்கு எதுவும் இல்லாதபோது தன்னுடன் தோலோடு தோல் நின்ற மனைவியை சரவணன் இப்படி சும்மா புறக்கணிப்பது கடினம். அதுவும் ஒவ்வொரு நாளும் சரவணன் மீராவை பார்த்துக்கொண்டு தான் இருக்க போகிறான். இருவரும் ஒரே வீட்டில் தானே இருப்பார்கள். அதை பயன்படுத்தி கொள்ள பிரபு விரும்பினான். பிரபுவுக்கும், மீராவுக்கும் இடையே இருப்பது வெறும் கட்டுப்படுத்த முடியாதது (இருவராலும் தான்) பாலியல் ஆசை. வெறும் உடல் ரீதியான ஆசை என்று சரவணனை நம்ப வைக்க பிரபு எண்ணினான். மனப்பூர்வமாக மீரா வின் உண்மையான அன்பு சரவணனுக்கு தான் என்று மெல்ல மெல்லப் பேசி வலியுறுத்த வேண்டும்.

மீராவின் வாழ்க்கையில் சரவணனின் இடத்தை பிடிக்க முடியாது. உண்மையில் இத்தனை வருடங்கள் சரவணனுக்கு மீரா மேல் உண்மையான அன்பு இருந்திருந்தால். அவள் சந்தோஷமாக இருக்கணும் என்று நினைத்திருந்தால், அவள் தன் சொந்த மகிழ்ச்சியைப் பெற செய்த தவறை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அவனையும், குழந்தைகளும் அவள் எப்போதும் எந்த விதத்திலும் கவனிக்காம இருந்ததில்லை என்று மீண்டும் வலியுறுத்தி அவளுக்கு கிடைக்கும் இந்த சில நேர மகிழ்ச்சியை தடுப்பதில் நியாயம் இல்லை என்று உணரவைக்க வேண்டும். சரவணன் மட்டுமே மீராவின் மற்ற எல்லா தேவைகளை வழங்கப் முடியும். அன்பு காட்டுவது, பாசம் பகிர்ந்துகொள்வது, உணர்ச்சிவசமான எல்லா தேவைகளும் சரவணனிடம் தான் மீராவுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டதன் மூலம் சரவணன் எதையும் இழக்கப் போவதில்லை என்று சரவணன் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பது தான் பிரபுவின் திட்டத்தின் இரண்டாம் பாகம்.

2 Comments

  1. Length ah update pannunga bro

  2. Good… story is moving towards the good ending…

Comments are closed.