ஓ ! சாரி காயு சுட்ருச்சா ?
காமி காமின்னு என் விரல்களை ஊத…
இல்லை பரவாயில்லை ஒன்னுமில்லை நான் தான் கவனிக்கலை …
அப்போது மெல்ல மழை பெய்ய ஆரம்பிக்க …
சரி வா உள்ள உக்காருவோம் …
ம் …
இருவரும் உள்ளே சென்று உக்கார …
காயு …
ம் ..
இப்ப அதுவே வந்துடுச்சி …
என்ன ?
மழை நீ நான் ராஜா சார் என்று இசையை பரவவிட …
மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே …
நானும் அதில் மயங்கி கிறங்க …
காயு அதை இப்படி சொல்லக்கூடாது …
எப்படி சொல்லணும் ?
கொஞ்சம் பின்னாடி சீட்டுக்கு வா சொல்றேன் …
ஏன் ?
வா சொல்றேன்னு காரை திறந்துகொண்டு வந்து என் பக்க கதவை திறக்க நானும் வேறு வழி இல்லாமல் இறங்க … அவசரமாக பின் சீட்டில் உக்கார வைத்தார் …
பிறகு அவரும் வந்து அமர … மழை படபடவென தூர ஆரம்பித்தது …
என்னருகில் அவரும் நெருங்க …. காயு நல்லா மாட்டிக்கிட்ட …. என் உள்மனம் எச்சரிக்க…
சலீம் என் கைகளை இழுத்து அப்படியே என்னை திருப்பி அவர் நெஞ்சில் என்னை சாய்த்து …
மெல்ல என் காதருகில் வந்து மழை நீ நான் ராஜா சார் என்றார் …
ம்ம் … ஆனா இது தப்பு …. நான் உங்க காதலியும் இல்லை மனைவியும் இல்லை …
ம் காதலியும் மனைவியும் மட்டும் நிரந்தரமா ?
காதலியை கசமுசா பண்ணிட்டு ஏமாத்துறான் ….
சில நேரத்தில் காதலி வேற காரணத்துக்காக காதலனை கழட்டி விடுறா …
கல்யாணம் பண்ணா உனக்கு நடந்த மாதிரி புருஷன் கழட்டி விடுறேன் …
இல்லையா எனக்கு நடந்த மாதிரி கடவுளே பரிச்சிடுறான் …
ம் … நீங்க சொல்றது …
ம் … இதுல எதுவும் நிரந்தரம் இல்லை … நீயும் நானும் தான் இப்ப இந்த நிமிஷம் …
அதுக்குன்னு …
உனக்கு நான் ஆறுதலா இருக்கேன் எனக்கு நீ ஆறுதலா இரு …
ஆனா இது தப்பு சார் … என்னை விடுங்க ….
தப்பான காரியம் தான் … ஆனா நம்மள கேக்க யார் இருக்கா சொல்லு …
கடவுள் கேப்பாரு …
ஹா ஹா … அவரை தான் நானும் தேடுறேன் என்னோட மனைவியை என் பொண்ணோட அம்மாவை ஏன் பறிச்சிகிட்ட ? இப்படி அழகான பொண்ணுக்கு ஏன் இவ்ளோ பெரிய சோகத்தை குடுத்தன்னு கேப்பேன் ….
சார் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு என் புருஷன் என்னை தேடி வருவார்னு …
சட்டென்று என்னை விட்டு விலகியவர் அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாமல் நகர்ந்துகொண்டார் …
சாரி சாரி சாரி காயத்திரி நான் என்னையும் உன்னையும் கம்பேர் பண்ணிட்டேன் … உன் புருஷன் வருவார் … ஐம் சாரி என்று கார் கதவை திறந்துகொண்டு முன் சீட்டில் அமர்ந்தவர் உடனே காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிவிட்டார் ….
நானும் என் விதியை நொந்தபடி ஒன்னும் பேசாமல் அமைதியாக உக்கார்ந்திருந்தேன் ….
ஒரு மணி நேரம் இருக்கும் என் மகனின் பள்ளி வாசலில் நின்றது …
காயு இங்கதான?
தாங்க்ஸ் சார் என்று இறங்கிக்கொண்டேன் …
காயு …
சார் …
ஐம் சாரி … ரியலி சாரி …
பரவாயில்லை சார் …
பிளீஸ் இந்த சார கட் பண்ணிக்கங்களேன் …
ம் வரேன் பாய் …
பாய் ….
அவர் கார் மின்னலாக சீறி மறைய … நான் அதையே பார்த்துக்கொண்டு நின்றேன் …
ஆளு கொஞ்சம் மோசம் தான் ஆனா என் புருஷன் வருவார்னு சொன்னதும் டக்குன்னு மாறிட்டார் …
அனிதாகிட்ட இவரை பத்தி பேசியாகணும் … ஒரு முடிவோடு என் மகனின் பள்ளியை நோக்கி நடந்தேன் …
அந்நேரம் அனிதா போன் பண்ண …
ஆமாம் நாங்க ஒரு கிளையாண்ட பார்க்க வந்தோம் … முடிஞ்சிடிச்சி இப்ப ஸ்கூலுக்கு போறேன் …
##############
சரி வா …
நானும் மணீஷையும் ராஜூவையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர அனிதாவும் வர நால்வரும் வீடு வந்தோம் …
ஃபிரஷ் ஆகி அனிதாவிடம் விஷயத்தை ஆரம்பித்தேன் …
ஏய் சலீம் சார் பத்தி என்னை நினைக்கிற …
வாடி வா என்ன நடந்துச்சு ?
இல்லைடி நீ அவர்கிட்ட பிஏ வா இருந்த தான ?
அதுக்கு ?
அதான் எதுனா அத்துமீறி பண்ணாரா ?
என்னாச்சுடி எதுனா தப்பா நடந்துக்கிட்டாரா ?