யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – END 307

பாட்டியின் இந்த கேள்விக்கு அம்மாவிடம் பதிலில்லை. . எப்படி இருக்கும் அதான் ” தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் ” என்ற பழமொழியை நிருபித்துவிட்டாளே …

பாட்டி அம்மாவின் அமைதியை பார்த்து ” இங்க பாருடி… அன்னைக்கு பொரவு இன்னைக்கு வரைக்கும் என்னையும் சரி… வேத்து பொம்பலைகளையும் சரி… யார் மேலயும்*பாலாவோட நக நுனிகூட பட்டது கெடயாது… இதுக்கு மேலயும் உன்மனசு மாறலனா …. உன் இஷ்டம். …. இன்னைக்கே நாங்க உன் கண்ல படாம எங்கியோ போய்டுறோம் ” என கூறி கண்கலங்கினாள்

எனக்கே பாட்டியை பார்க்க பாவமாக இருந்தது. .. ஆனால் அம்மாவோ அப்பா, பாட்டி மீது தவறு இல்லை என்று தெரிந்தும் பிடிவாதமாக தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.. அக்காவோ தன் உயிரை காப்பாற்றியது அப்பா என தெரிந்ததும்.. அவளுக்கு அவர் மீது இருந்த எண்ணம் மாறியிருந்தது போல… நன்றி கலந்த பார்வையை அப்பா மீது செலுத்தினாள்.. இப்போது அறை முழுவதும் அமைதி நிறைந்தது…

அம்மாவின் பதிலுக்காக நாங்கள் அனைவரும் காத்திருந்தோம்… ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ..
அம்மாவோ கண்களை துடைத்து கொண்டு ” நா… முடிவு எடுத்தா எடுத்தது தான்… இப்ப மட்டும்ல எந்தன ஜென்மத்துலயும் உங்கள மன்னிக்க மாட்டேன் ” கூறி விட்டாள்..

அம்மா இப்படி கூறியதால் நானும் மற்ற குடும்பம் போல அம்மா அப்பாவுடன் வாழலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தேன் … அது இப்போது சல்லிசல்லியாக உடைந்தது. . அக்கா அம்மாவின் முடிவை எதிர்த்து ஏதோ கூற முயன்றாள்
” மா….. பொருமயா.. யோசிச்…..” என கூறி முடிக்கும் முன்பே அம்மா அக்காவிடம்
” என்ன… ” என கத்தியபடியே எழுந்து சமையலறையை* விட்டு வெளியேற அமர்ந்திருந்த அப்பாவை கடந்து நடந்தாள்..

அப்போது அங்கு யாரும் எதிர்பார்க்காதது ஒன்று நடந்தது. .. அம்மா அப்பாவை கடக்கும் போது அப்பா அம்மாவின் காலை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு ” ஒரு மனைவியா இந்த புருஷன மன்னிக்க வேனாம். .. ஒரு அக்கா..வா இந்த தம்பிய மன்னிச்சிடு…கா… ” என கூறி அழுதார்

அவ்வளவுதான்….. அப்பாவின் இந்த வார்த்தையை கேட்ட அம்மாவோ அவர் மீது இருந்த அத்தனை கோவத்தையும் மறந்து ” பாலா…. ” என கத்தியபடியே அப்பாவை இழுத்து முகம் முழுவதும் முத்தங்களை அள்ளி தெளித்தாள்..
அவ்வபோது அவளது உதடுகள் ” பாலா… பாலா… ” என முனுமுனுத்து கொண்டிருந்தது…

” சாரி…டா… பாலா…. சாரி….டா… என்னோட திமிரு உன்ன மன்னிக்க கூடாதுனு சொல்லிடுச்சி… ஆனா… உன் வாயில இருந்து வந்த “”அக்கானு”” வார்த்த அந்த திமிற இருந்த எடம் தெரியாம ஆக்கிடுச்சு… ” என கூறி மீண்டும் முத்தங்களை தொடர்ந்தாள்..

இப்போது இங்கு நடந்ததை என்னால் மட்டுமல்ல அக்கா மற்றும் பாட்டியால் கூட நம்பமுடியவில்லை. . ஏதோ மாயாஜாலம் நடந்தது போல வியந்து அவர்களையே பார்த்து கொண்டிருந்தோம்…ஒருவரை இனி எந்த ஜென்மத்துலயும் மன்னிக்க மாட்டேன் என கூறியவள் அடுத்த நிமிடமே ஒரு வார்த்தையால் அவரை கொஞ்சிகொண்டிருப்பது.. எங்களுக்கு ஆச்சிரிமாக இருந்தது…

அப்பாவும் அம்மாவும் தங்களது முத்தங்களை பரிமாற்றிகொண்டு அனைப்பிலிருந்து விடுபட்டனர்.. இதற்க்காக காத்திருந்த அக்காவோ அப்பாவின் கையை பிடித்து கொண்டு “சாரி…ப்பா… என்ன மன்னிசிடுங்க நான் உங்கள வெருத்தாலும் என் உயிர காப்பாத்தியிருக்கீங்க. … ” என கூறினாள்…

7 Comments

  1. Cont..mannichidunga raam kulanthaikalukaha ithai pannugiren story

  2. Super brooo climax suprrrr but neenga story mudichathu tha ethuka mudilaa,last la antha pain semaaa broo,next enna story topic nu comment pannunga bro im waiting

  3. The end part have not fullfilled the expectation.

  4. சூப்பர் கதை நான் எத்தனையோ கதைகள் எண்ணிகைய சொல்லமுடியாது
    ஆயிரம் பத்தாயிரம் இருபதயிரம் படித்து
    இருப்பேன் இது மாதிரி அற்புதமான கதைய படிக்கவில்லை இரண்டாம் பாகம் வந்தாலும் முழுவதும் படிபபேன்

  5. Next today’s local

  6. Sir yeathuku seikarama mudichitiga romba kastama iruku ungala cantact pannalamana kuda detial illa daily oru part padichitu eppa endna yeapadi pls part 2 kuduga naa uga story vanthucha illa yanu thaan daily paapan mudicha inniku oru part kuduga pls requesr from true fan…

Comments are closed.