மேல் மார்புகளில் திராட்சைப் பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரி – 2 47

அவங்கப்பன் பண்ணக் கொடுமையைக் கேட்டு எனக்கே அவ்ளோ கஷ்டமா இருந்துதுன்னா, அவளுக்கு எப்படி இருந்திருக்கும்?! அதனாலத்தான் அப்படி மாறிட்டாளே ஒழிய, அவ நல்லவதான்! என்னா ஒண்ணு, அதை அவளுக்கே புரிய வைக்குறதுலதான் இவ்ளோ பிரச்சினையும்!

உனக்கு மட்டுமென்ன! அஞ்சலியும் மனசு மாறிட்டா! இப்ப, உன் மேல லவ்வெல்லாம் இல்லை வெறியே வந்துடுச்சு அவளுக்கு! இனி உன்னப் பத்தி தப்பாச் சொன்னா, அவங்கம்மாவையே அடிச்சாலும் அடிச்சிடுவா! அந்தளவு, உன் மேல பாசமா இருக்கா!

நீயெல்லாம், அவனுக்கு தகுதியே இல்லைன்னு சொன்னப்ப, ரொம்ப ஆடிட்டா! உன் கூட குடும்பம் நடத்தனும்னு அவனுக்கு என்ன தலையெழுத்து?! அனேகமா, வேற ஒருத்தியை கரெக்ட் பண்ணிடுவான்னு நினைக்கிறேன்னு சொன்னப்ப, ரொம்ப பயந்துட்டா! கடைசில என்கிட்டயே, அவரு என்னை ஏத்துக்குவாரான்னு கேட்டப்ப, எனக்கே பாவமா போயிடுச்சி!

போ! போயி, உன் பொண்டாட்டியை கொஞ்சுற வழியைப் பாரு! நான் என் நிவேதாவைக் கொஞ்சுறேன்!

நான் ஒண்ணு சொல்லட்டா சிவா, நிவேதாவைக் கூட்டிட்டு, எங்கியாவது ஹனி மூன் மாதிரி போயிட்டு வா! மனசு விட்டுப் பேசு அவகிட்ட! நிவேதா மாதிரிப் பொண்ணுங்கல்லாம், அன்பை காட்ட ஆரம்பிச்சா, உன் வாழ்க்கை சொர்க்கம்தான்! ஒரு ஆம்பிளைக்கு அன்பு வேணுங்கிறப்ப காதலும், தைரியம் வேணுங்கிறப்ப தன்னோட மடியும் தருவாங்க! ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டர் அவ! இனிமேனாச்சும் அவளுக்கு, காதல், காமம் எல்லாத்தையும் அவளுக்கு புரிய வை! ஓகே யா?

ம்ம்.. ஓகேடா!

முடிஞ்சா இன்னிக்கே ஹனிமூன் கெளம்பு! நீ போயிட்டு வர்றதுக்குள்ள, நான் இந்த அபார்ட்மெண்ட் வீட்டைக் காலி பண்ணிடுவேன்! இனி, நீயும், நானும் மறுபடி எதிரிகள்தான்! அப்பப்ப நம்மைப் பத்திய அப்டேட் மட்டும் பாத்துக்கலாம்.

ஆரத் தழுவி பிரிந்தவர்களின் மனதில், சிறந்த நட்பை இழக்கும் வருத்தம் இருந்தாலும், நிதர்சனத்தைப் புரிந்தவர்கள், கனத்த மனதுடன் விடை பெற்றனர்!

3 நாட்கள் கழித்து!

கூர்கில் உள்ள ஒரு ரிசார்ட்டில்!

சிவாவின் மார்பில் சாய்ந்து, அவனுள் புதைந்து இருந்தவள், மகிழ்ச்சியாய் சொன்னாள்!

சொல்லு நிவி!

நிமிர்ந்து சிவாவை முறைத்த நிவேதா, சொல்லுடி னு சொல்லு!

[Image: Pon-Manickavel8.jpeg]

உனக்கு டி சொன்னா புடிக்காதில்ல!

அதெல்லாம் திமிர் புடிச்ச நிவேதாவுக்குதான்!

அப்ப இங்க இருக்குறது யாரு?

இது சிவாவுக்கு புடிச்ச நிவேதா! இவளுக்கு, சிவா என்ன சொன்னாலும் கேப்பா!

என்ன சொன்னாலும் கேப்பியா?

ம்ம்.. கேப்பேன்!

அப்ப, ஒழுங்க உங்கம்மாவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடு! பாவம் நிவி அவிங்க! கணவனால டார்ச்சர் அனுபவிச்சவிங்க, நீயும் புரிஞ்சுக்கலைன்னா எப்படி? வாழ்க்கை முழுக்க தனியா இருக்கனுமா?! நீ சும்மா அவங்களை வெறுக்குற மாதிரில்லாம் நடிக்காத! எனக்குத் தெரியும், உன்னோட தைரியத்துக்கு மட்டுமில்லை, இந்தளவு நல்லா படிச்சு, சம்பாதிக்கிறீன்னா, உங்கம்மாதான் காரணம்ன்னு! இனிமே, நாம மட்டுமில்லை! அவங்களும் சந்தோஷமா இருக்கட்டும்!

தவிர, இந்த மூணு நாளா, சமைக்கிறேங்கிற பேர்ல நீ செஞ்சதை சாப்ட்டு எனக்கு வெறுத்துடுச்சு! பேசாம, கிச்சனை உங்கம்மா கண்ட்ரோல்ல விட்டுட்டு! நீ வேணா, நம்ம பெட்ரூமை உன் கண்ட்ரோல்ல எடுத்துக்கோ! அங்க, நீ என்னை வெச்சு எந்த விதமான எக்ஸ்பெரிமெண்ட் வேணா பண்ணு, எனக்கு எந்த அப்ஜெக்‌ஷனும் இல்லை, என்னச் சொல்ற?

சிவாவையே காதலாய் பார்த்தாள் நிவேதா! அவன் கிண்டலாய் சொன்னாலும், அது எல்லாமே உண்மை என்பதும், தன்னை மட்டுமல்ல, தன் அம்மாவையும் முழுக்கப் புரிந்து, அவர்களுக்காகவும் யோசிக்கும் சிவாவின் மேல் வெறீயாய் காதல் கொண்டவள், அதே வெறியாய் அவன் இதழ்களில் முத்தமிட ஆரம்பித்தாள்! அந்த முத்தமும், அதைத் தொடர்ந்து காமமும், இனி, அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லிச் சென்றது!

அதே சமயம், திருச்சியில், விஜய் வீட்டில்!

என்னங்க! நான் ரொம்ப குண்டா இருக்கேனா?

தெரியலியே?!

என்னங்க இப்படிச் சொல்றீங்க?!
ஆமா, இப்படி முழுக்க மூடிட்டு, குண்டா இருக்கேனான்னு கேட்டா, எப்படிச் சொல்றது! வேணும்ன்னா, எல்லா டிரஸ்ஸையும் அவுத்துட்டு கேளு! சொல்றேன்!

ச்சீ… உங்களை!