மறந்துட்டேன் அண்ணி – 1 543

அவளை விட்டு விலகிய நான், “போடி..இப்ப போய் என் அண்ணிக்கிட்டே என்னைப் பத்தி சொல்லு. செய்யாத தப்புக்கு நான் ஏன் கெட்ட பேர் வாங்கணும்.” என கூறி கோபத்துடன் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினேன். வீட்டைவிட்டு வெளியேறிய நான் மனம் போன போக்கில் சுற்றினேன். என் மனம் என்னை உறுத்தியது. என்ன இருந்தாலும் அவளிடம் இப்படி நடந்திருக்கக் கூடாது. ச்ச்சே…ச்ச்சே… என்ன மனுஷன் நான் என என் மேல் எனக்கே கோபமாக வந்தது. இதை அவள் அண்ணியிடம் சொன்னால் என்ன நடக்கும். என்னைப் பத்தி என்ன நினப்பார்கள். நான் இனிமேல் அவர்களைக் கட்டிப் பிடித்தால் கூட விகல்பமுடன் கட்டிப் பிடிக்கிறேன் என்று தானே நினப்பார்கள். அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன் என்று எண்ணியபடியே மனம் போன போக்கில் சுற்றிவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

வாசலிலேயே அண்ணி வருத்தமுடன் காத்திருந்தாள். “எங்கேடா போனே! போறவன் போனையாவது எடுத்துட்டு போயிருக்கலாமுல்லே.” என்றாள்.
வார்த்தையில் சுரத்தில்லாமல், “மறந்துட்டேன் அண்ணி,” என்றேன்.
“யாருகிட்டேயாவது போனை வாங்கி ஒரு தகவல் சொல்லியிருக்கலாம்லே. நான் வயித்துலே நெருப்பைக் கட்டிக்கிட்டு காத்திருக்கேன்,” என்றாள்.
நான், “ஸாரி அண்ணி,” என்றேன்.
“சரி சரி கை காலை அலம்பிட்டு சாப்பிட வா,” என எனக்கு சாப்பாடை எடுத்து வைத்தாள்.
“எனக்கு தூக்கமா வருது. நான் தூங்கப் போறேன். என் செல்லம்…! கொஞ்சம் தட்டை கழுவி வச்சுட்டு எல்லாத்தையும் மூடி வச்சுடுடா,” என்று என் கன்னத்தில் முத்தமிட்டு, ‘குட் நைட்’ சொல்லிவிட்டு தன் ரூமுக்கு சென்றாள்.
திடீரென நினைவுக்கு வந்தவளாய் ரூமைவிட்டு வெளியே வந்து, “சிவா உன் ரூமை சிந்துவுக்கு கொடுத்திருக்கேன். ஒரு ரெண்டு நாள் ஹால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்ன?” என்றாள்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வந்ததும் அண்ணி சீறுவாள் என எண்ணிய எனக்கு அண்ணி இயல்பாய் இருப்பது தெரிந்ததும் கொஞ்சம் தெம்பு வந்தது. டீவியின் பக்கத்தில் என் போன் சார்ஜில் இருந்தது. அப்படியே ஷோஃபாவில் படுத்து கண்ணயர்ந்தேன்.
*****
காலையில் அண்ணியின் ஆவிபறக்கும் காஃபியின் மணத்தில் விழித்தேன். காஃபியுடன் அண்ணி…. அருகில் காஃபியை குடித்தபடி சிந்துஜா. அவளைப் பார்க்க தெம்பின்றி காஃபியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன்.
சிறிது நேரம் கழித்து உள்ளே வர அண்ணி சமையலறையில் வேலையாக இருந்தாள். வழக்கம் போல் அவளை சீண்டி விளையாட மனமின்றி பேப்பரை எடுத்துக் கொண்டு ஷோஃபாவில் அமர்ந்தேன். உள்ளே வேலையை முடித்துவிட்டு வந்த அண்ணி என்னருகில் அமர்ந்தாள்.
“ஏண்டா என்னமோ போல இருக்கே?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணி.”
“சிந்துஜா உன்னைப் பத்தி என் கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணினான்னா?”
நான் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தேன். என் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
“ச்ச்சீய்….என்னடா சின்னப் பிள்ள மாதிரி அழுதுகிட்டு…” என்று என்னை தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள். அண்ணியின் பஞ்சு மெத்தை போன்ற மார்பகங்களில் என் கன்னம் தஞ்சம் அடைந்தது. என் முதுகில் தட்டிக் கொடுத்த அவள், “நேத்து ராத்திரியே உன்னைப் பத்தி அவகிட்டே பேசுனேண்டா…அவ கண்ணுலே தண்ணி வந்துருச்சு தெரியுமா? இந்த மாதிரி ஒரு கொழுந்தன் கிடைக்க நீ புண்ணியம் பன்னியிருக்கணும்னு சொல்லி எங்கிட்டே ஸாரி கேட்டா தெரியுமா?” என்றாள்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியானால் நேத்து நடந்ததை அண்ணியிடம் எதுவும் கூறவில்லையா? எனக்கு மனதில் நிம்மதி பிறந்தது.
“அப்புறம் சிந்து வந்தது இங்கே அவளுக்கு ஒரு வீடு வாங்கி செட்டிலாகிறதுக்குதான். அதுவரைக்கும் ஒரு வாடகை வீட்டுலே இருக்கலாம்னு இருக்கா. அவ வீட்டுக்காரரும் இங்கே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடப்போறாராம். மேடவாக்கம் ஏரியா அவங்களுக்கு வசதியா இருக்கும்னு சொன்னா. இன்னைக்கு நீ அவளோட போய்ட்டு வா,” என்றாள்.
“அண்ணி…நான் போகலே அண்ணி….” என்று இழுத்தேன்.
“அவளுக்குன்னு இந்த ஊருலே யாருடா இருக்கா? நாமதாண்டா உதவி பண்ணனும்,” என்றாள்.
“இல்ல. அண்ணி நான் அவங்ககூட வர்றதை விரும்ப மாட்டாங்க.”
“அவகிட்டே நான் பேசிட்டேன். நீ அவளுக்கு துணையா போயிட்டு வா.”
******
வண்டியில் அவள் ஏறி அமர்ந்த போது என்னைவிட்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்தாள். நானும் வண்டியை மிகவும் கவனமாக ஓட்டிச்சென்றேன். மதியம் வரை பல இடங்களுக்கு அழைந்தும் வசதியான வீடு அமையவில்லை. அவளும் என்னிடம் அதிகம் பேசவில்லை. நானும் அவள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சுருக்கமான பதிலை அளித்தேன். இருவரும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்று எதிரெதிரே அமர்ந்தோம். என் கால் அவள் கால் மீது எதிர்பாராதவிதமாக பட்டு விட நான் பதறி ஸாரி கேட்டேன். நான் பதறியதை ரசித்தாளோ என்னவோ அவள் மெலிதாக புன்னகைத்து, ‘இட்ஸ் ஒக்கே,’ என்றாள்.
மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது என்னை சற்று நெருங்கி அமர்ந்தாள். ஒரு ஆள் குறுக்கே வர நான் சடன் ப்ரேக் போட அவள் என் மீது சரிந்தாள். அவள் முலைகள் என் முதுகில் அழுந்தியது. எதுவோ வித்தியாசமாகப் பட அவள் என் முதுகை கையால் தடவிப் பார்த்தாள்.
“என்ன இது. எதுவோ கட்டியா இருக்கே,” என்றாள்.
“அது ஒன்னுமில்லே மேடம்,எதுக்கும் சேஃப்டியா இருக்கட்டுமேன்னு ஒரு அட்டையை முதுகுலே சொருகிட்டு வந்தேன்,” என நான் கூற, களுக் என சிரித்து, “யூ ஆர் நாட்டி,” என்றாள். அதன் பின் என்னிடம் மிக இயல்பாக பேசத் தொடங்கினாள். கடைசியில் நல்லதாக ஒரு தனி வீடு அமைந்தது. அதை பேசி முடித்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தோம். வரும் வழியில் எனக்கு தேங்க்ஸ் என்றாள். நானும் புன்னகைத்து அதை ஏற்றுக் கொண்டேன்.
அண்ணன் மாலை நீண்ட நேரம் ஆகியும் வராததால் அண்ணி என்னை அவளை ஸ்டேஷனுக்கு சென்று விட்டுவிட்டு வர சொன்னாள். ட்ரெய்ன் கிளம்பும் சமயம் அவளிடம், “ஸாரி மேடம்,” என்றேன். அவள் “எதுக்கு,” என்றாள்.
“நான் நேத்து உங்ககிட்டே அப்படி நடந்துக்கிட்டுருக்கக் கூடாது,” என்றேன்.
அவள் முகம் இருண்டது. அவள் ஒன்றுமே சொல்லவில்லை. ட்ரெய்ன் கிளம்பும் வரை அவள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நேற்றைய நிகழ்வு அவளை ரொம்பவும் பாதித்திருக்கும் போல. ட்ரெய்ன் கிளம்ப நான் மனதில் பாரத்துடன் திரும்பினேன்.

2 Comments

  1. Sema feeling

  2. ஆதார் நன்ஷிர்க்

    எதார்த்தமான காமம் சொட்டும் கதை, அருமை. கட் அண்டு பேஸ்ட் செய்த போது 7ஆம் பாகத்தில் முன்னரே பதித்த கதை மீள் பதிவாகியுள்ளது.

Comments are closed.