நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 2 43

ஆனால் கார்த்திக் நேராகவே சொன்னான்.”நீ என்ன சொன்னாலும் உமா…பணத்துக்காக நீ இப்படி.. ஒரு வேசியா மாறினத.. என்னால அனுமதிக்கவே முடியாது…”
”இதை நீ சொன்னதுக்காகவே.. உன்னை என் உயிருக்கு மேலா நேசிக்கறேன்.. கார்த்தி..!!” என்றாள் உமா.

கார்த்திக் ‘அச் ‘ சென்று தும்மினான். மூக்கை வலக்கையால் தேய்த்துக்கொண்டு சொன்னான் ”உனக்கு பணம் தேவைன்னா… பணம் மட்டுமில்ல… என்ன உதவி தேவையாருந்தாலும்.. என்னைக் கேளு… நான் பண்றேன். ஆனா… நீ இப்படி பண்றதை.. என்னால ஏத்துக்கவே முடியாது…!”
”சந்தோசம் கார்த்தி…! ரொம்ப சந்தோசம்..! ரொம்ப.. ரொம்ப சந்தோசம்..!!” என உணர்ச்சிப் பெருக்கில் குரலடைக்கச் சொன்னாள் உமா ”உன்மேல சத்தியம் கார்த்தி… இந்த கெட்ட காரியத்தை இனி நான் செய்ய மாட்டேன்..! அந்தக்கடவுளுக்கு பொதுவா சொல்றேன்.. இனிமேல் நான் சாகறவரை.. அந்தக்காரியத்தை பண்ணவே மாட்டேன்..!!”

போதையில் மிதந்த… அவர்களது பேச்சு இதே ரீதியில் நீண்ட நேரம் நடந்தது. மிகவும் பூரித்துப் போனாள் உமா.
‘இதோ..தான் ஆசைப்பட்ட காதலன். அவன் இன்னைரு பெண்ணுக்கு உரிமையுள்ளவன் என்றாலும்.. தனக்கும் உரிமையுள்ளவன்..! பாலை நிலமாக வறண்டு கிடந்த.. என் மனசுக்கு…ஜீவ நதியாக வந்த காதலன்.! என் துண்பத்தைத் தன் துண்பமாக உணர்ந்து.. எனக்கு .. தோள் கொடுக்க வந்த… உண்மையான… ஆண்மகன்..! இவன் போதும்.. இவன் ஒருவனே போதும்…!
இந்த உலகமே ஒன்றாய் திரண்டு.. என்னைத் துண்டு துண்டாக உடைத்து வீசினாலும்… இவனது ஒரு அணைப்பில்… ஒரு முத்தத்தில் மறுபடி… பழைய வடிவம் பெறுவேன்..!! ‘

”சந்தோசம் உமா…” இறுதியாகச் சொன்னான் கார்த்திக். ”நெஜமாவே எனக்கு ரொம்ப சந்தோசம்… நீ சொன்ன வாக்கை காப்பாத்துவேன்னு.. நான் நம்பறேன்..!”
”உலகமெல்லாம் கும்பிடற.. அத்தனை தெய்வங்கள் மேலயும் ஆணையிட்டுச் சொல்றேன் கார்த்தி… என் வாக்கை நான் காப்பாத்துவேன்..” என்றாள் உமா.
”நானும்தான் உமா… உனக்கு குடுத்த வாக்கை நானும் காப்பாத்துவேன். ஆனா உமா.. என்னால.. என் குடும்பத்த பகச்சுக்க முடியாது. என் வொய்ப்.. என்மேல ரொம்ப.. உயிரா இருக்கா.. அவ எத்தனை நல்லவ.. தெரியுமா..? நீ அவளோட பழகிப் பாக்கனும்.. அவமேல.. உனக்கே அத்தனை பாசம் வரும்…”
”உன் வொய்ப்… கடவுளுக்கு பொதுவா..நல்லவளாத்தான் இருக்கனும் கார்த்தி.. உன்னோட குடும்ப வாழ்க்கைக்கு நான் எந்த பங்கமும் வரமாதிரி நடந்துக்க மாட்டேன்..” என உளமாரச் சொன்னாள். ”உன் குடும்ப வாழ்க்கை என்னால பாதிக்கப்பட்டா.. அத செரி பண்ண. . என் உயிரை விடவும் தயங்க மாட்டேன் கார்த்தி..” கண்கள் நீர்த்திரையிட்டன.!!
”உமா… நீ ரொம்ப நல்லவ..! ரொம்ப. ..ரொம்ப.. நல்லவ…!!”