நண்பனின் காதலி – 9 54

ஒ சாரி என்றாள் சுவாதி .இருக்கட்டும் நாளைக்கு மேரேஜ் வருவிங்கள என்றாள் சிமி .இல்ல இவர் வேணாமுன்னு வரட்டும் எனக்கு இப்ப தான் கொஞ்சம் சரி ஆகிருக்கு அதனால நான் வரது அவசியமான்னு யோசிக்கிறேன் என்றாள் சுவாதி .என்ன நீங்க இப்படி சொல்றிங்க இருங்க நீங்க வரலாமான்னு உங்க டாக்டர் கிட்டே கேக்குறேன் என்று சொல்லி விட்டு சிமி டாக்டரிடம் அண்ணி சுவாதி இப்ப இருக்க நிலைமைல எங்க மேறேஜ்க்கு வரலாமா என கேட்டாள் .
தாரளாமா வரலாம் சர்ச் இங்க தான 2 கிலோ மீட்டர்ல இருக்கு அதுனால கார்லே வந்திடலாம் அப்புறம் சுவாதிக்கு 7 வது மாசம் தான அதனால வரலாம் அது மட்டும் இல்லாம 10 வது மாசமா இருந்தா கூட நான் உட்பட அங்க நாளைக்கு குறைஞ்சது ஒரு 50 டாக்டர் ஆச்சும் வருவாங்க அப்புறம் என்ன அங்கேயே பிரசவம் கூட பாத்துடாலம் என்று டாக்டர் சொல்லி சிரிக்க .
பாத்திங்களா இத தான் நானும் சொன்னேன் சோ நாளைக்கு நீங்க கண்டிப்பா வரிங்க என்றாள் சிமி .ஓகே வரோம் என்றாள் சுவாதி .சரி மதியம் தான் மேரேஜ் அதுனால அவசரபடாம வாங்க என்றாள் .சரிங்க என்றாள் .ஓகே டேய் எங்கிட்டும் அவங்க வராம நீ மட்டும் வந்த உதை தான் உனக்கு என்றாள் சிமி .சரி சரி என்றான் விக்கி .ஓகே மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் இந்த ரெண்டு மாசம் தான் ரொம்ப carefull ஆ இருக்கணும் சும்மா சின்ன பிள்ளைக மாதிரி சண்ட போட கூடாது இன்னும் ரெண்டு மாசத்துல உங்க கைல ஒரு பிள்ள இருக்கும் சோ பாத்து இருங்க என்றார் டாக்டர் .
ஓகே டாக்டர் நாங்களும் கிளம்புறோம் என்றாள் சுவாதி .சரிம்மா டேக் கேர் என்றார் .பின் சுவாதியை பிடிக்க விக்கி அவள் அருகே போக சுவாதி அவனை தடுத்து இருக்கட்டும் இப்ப நார்மலா இருக்கு நானே நடந்துக்கிறேன் என்றாள் சுவாதி .ம்ம் சரி என்றான் .பின் அவர்கள் சிமியிடமும் ராக்கியிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள் .
விக்கியும் சுவாதியும் ஒன்றும் தங்களுக்குள் பேசமால் காருக்குள் போனார்கள் .விக்கிக்கு அவளாக எதுவும் சொல்வாள் பேசுவாள் அவளை முத்தம் கொடுத்துதற்காகவும் அவளை ஆஸ்பத்திரிக்கு கையில் தூக்கி கொண்டு போனது அப்புறம் அவள் வயிற்ரை தொட்டது என்று இதலாம் பண்ணியதற்கு ஏதாவது லவ் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தான் .அதே நேரத்தில் இது போன்று பல முறை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பதையும் எண்ணி கொண்டான் .
ஆனால் வழக்கம் போல விக்கியாக தன் காதலை சொல்ல மனம் வரவில்லை அது மட்டும் இல்லமால் இன்று அவளை அதிகமாக திட்டியாதால் அவனுக்கு அவள் முகத்தை பார்க்கவே ஒரு வித தயக்கம் இருந்தது .அப்புறம் வீடு வந்தது இருவரும் அமைதியாகவே உள்ளே வந்தனர் .கதவை திறந்து உள்ளே போன உடன் சுவாதி வேகமாக ஒன்றும் சொல்லமால் அவள் ரூமுக்கு போக பார்த்தாள் .சுவாதி ஒரு நிமிஷம் என்றான் .
சுவாதி விக்கியை திரும்பி கூட பார்க்கமால் வேணாம் விக்கி என் கிட்ட எதுவும் பேசாத என்றாள் .

சுவாதி எதுவும் பேசாத என்று சொன்னது விக்கிக்கு அதிர்ச்சியாக இருந்தது .இல்ல சுவாதி நான் தெரியாம பேசிட்டேன் சோ என்னைய மன்னிச்சுடு சாரி என்றான் .