நண்பனின் காதலி – 9 54

ஹ நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் அது யாரு முத்தாச்சி உன் பிரண்டா நேத்து நீ ஊசி போட்டப்ப கூட அம்மான்னு கத்தாம இப்படி தான் கத்துனா என்றான் .யே முத்தாச்சின்னா மலையாளத்துல பாட்டின்னு அர்த்தம் என்றாள் .ஒ நீ மலையாளில அத நான் மறந்தே போயிட்டேன் என்றான் .ஆமா நீ என்னையவே மறந்துட்ட இந்த 2 மாசமா என்று மனதிற்குள் நினைத்தாள் .பின் இசை முழங்க பெண்கள் எல்லாம் சிமியின் உடையை பின்னல் பிடித்து கொண்டு வர முன்னே சிறுமிகள் பூக்கொத்துகள் பிடித்து கொண்டே நடக்க சிமி அவள் அப்பாவின் கையை பிடித்து கொண்டு சிரித்தாவரே வந்தாள் .வரும் போது அவள் தோழிகளை எல்லாம் பார்த்து சைலண்டாக சிரித்து கொண்டே ஹாய் சொன்னால் .ஸ்வாதியையும் பார்த்து சிரித்தாள் .சுவாதி பதிலுக்கு சிரித்தாள் .
மேடையில் ராக்கி சிரித்தாவரு நின்று கொண்டு இருந்தான் .பின் சிமி அவனுக்கு எதிரே போயி நின்றாள் .இருவரும் ஒருவரை ஒருவர் காதலோடும் நேசத்தோடும் பார்த்து கொண்டனர் ,நடுவில் பாதர் நின்று ஏதோ ஏதோ வாசித்து விட்டு உனக்கு சிமிய உன் பொண்டாட்டியா ஏத்துக்க சம்மதமா என கேட்க அவன் சம்மதம் என்றான் .இதே போல் அவளிடமும் கேட்க அவள் சம்மதம் என்றாள் சிரித்து கொண்டே .நான் உங்கள் இருவரையும் அந்த இறைவன் சாட்சியாக உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அறிவிக்கிறேன் ok you may kiss the bride என்று பாதர் சொன்ன பின் ராக்கி சிமியின் கன்னங்களில் இரு பக்கமும் முத்தமிட்டான்

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்கி மற்றும் சுவாதியின் மனங்களில் ராக்கியும் சிமியும் இருந்த இடத்தில தங்களை வைத்து நினைத்து பார்த்து ஏங்கினார் .விக்கிக்கு ராக்கி இடத்தில அவன் நின்று கொண்டு இருக்க எதிரே சுவாதி நிற்க பாதர் ok you may kiss the bride என்று சொன்ன உடன் அவன் சுவாதியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கமால் ஸ்ட்ரைட் ஆக உதட்டில் கொடுப்பது போல நினைத்து பார்த்து மெல்ல சிரித்தான் ,பின் அவனுக்கு திரும்பி சுவாதியை பார்க்க வேண்டும் போல இருந்தது ஆனால் முடியவில்லை .அதே தான் சுவாதியும் சரியாக இந்நேரம் மேடையை பார்க்கமால் இவனை பார்த்தால் இவன் புரிஞ்சுக்கிருவான் அது வேண்டாம் என்று கைகளை பிசைந்து அடக்கி கொண்டாள் .அவளுக்கு கண்ணிற் வருவது போல இருந்தது அதையும் அடக்கி கொண்டாள் .
பின் திருமணம் முடிந்தது .கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் வெளியே சென்றார்கள் ,சுவாதி எந்திரிக்க பார்த்தாள் ,இரு எல்லாரும் போன பிறகு போவோம் இல்லாட்டி இடிச்சு விட்டுருவானுக என்றான் .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஐயோ விக்கி எனக்கு உன்னையே கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் ஆச இல்லடா ஆனா உன் கூடவெ இப்ப இருக்க மாதிரி ஒரு ரூம் மெட்டா கடைசி வரைக்கும் இருக்கணும் போல இருக்கு .ஆனா என்னால முடியல அட்லிஸ்ட் ஒரு 3 மாசமாச்சும் இருக்காலம்ன்னு பாத்தா
சண்ட போட்டு இப்பவே போக வைக்கிரியெடா ப்ளிஸ் என்னைய இருக்க வைடா என்று அவன் அந்த பக்கம் திரும்பி எல்லாரும் போகிறர்களா என பார்த்து கொண்டு இருக்கும் போது சுவாதி மனதில் நினைத்தாள் .
ஓகே ஓரளவு கூட்டம் போயிடுச்சு சோ லெட்ஸ் மூவ் …..