நண்பனின் காதலி – 9 54

ஐயோ போதும்ங்க என்றாள் சிமி .ஏங்க ரொம்ப அறுத்துட்டானோ என கேட்டாள் சிமி .அய்யோ இல்லைங்க கண்ணுல கண்ணிற் வர வச்சுட்டிங்க என்றாள் சிமி .ம்ம் சும்மா சொல்றிங்க கொஞ்சம் ரம்பம் போட்டுட்டேன்னு எனக்கே தெரியுது என்றாள் சுவாதி ஐயோ அப்படி இல்லைங்க உண்மைலே நீங்க சொன்னது எல்லாம் நல்லா இருந்துச்சு என்றாள் .
சரி சொல்லுங்க அப்புறம் கல்யாணம் வேலை எல்லாம் எப்படி போகுது என்றாள் சுவாதி .நாளைக்கு தான் கல்யாணம் மறந்துட்டிங்களா என கேட்டாள் சிமி .ஆமாங்க மறந்துட்டேன் என்றாள் சுவாதி .
உங்கள சொல்லி குத்தம் இல்ல நான் தான் அன்னைக்கு பெரிய இவ மாதிரி பேசிட்டு அதுக்கு அப்புறம் உங்களுக்கு போன் கூட பண்ணல அதான் நீங்க இப்ப மறந்துட்டிங்க ஐ அம் வெறி சாரிங்க கல்யாண வேலை ரொம்ப இன்னும் பத்திரிக்கையே கொடுத்து முடிக்கல அதான் அது மட்டும் இல்லாம ராக்கி ஓட அம்மா பக்கத்திலே என்னைய வச்சுக்கிட்டு விட மாட்டிங்கிறாங்க அதாங்க உங்க கிட்ட பேசவும் முடியல வந்து பாக்கவும் முடியல அதுக்காக எல்லாம் கோபிச்சு கிட்டு வராம இருந்திராதிங்க ப்ளிஸ் என்றாள் சிமி .
ஐயோ அப்படி எல்லாம் இல்ல எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு கர்ப்பமா இருக்கிறதால என்றாள் சுவாதி .எங்க நீங்க எதுக்கும் கவலை படாதிங்க ராக்கி குடும்பமே டாக்டர் குடும்பம் தான் .அவன் அக்கா அம்மா மாமா ஏன் இப்ப அவன் தங்கச்சி கூட டாக்டருக்கு படிக்கிறா இது மட்டும் தான் மெண்டல் பேசண்டா இருக்கு என்று சிமி கிண்டல் அடிக்கவும் ராக்கி அதை கேட்டு பின்னால் இருந்து அவளை செல்லமாக கிள்ளினான் அதனால் சிமி ஆவ் என்று கத்தினாள் .
என்ன ஆச்சுங்க என்றாள் சுவாதி .ஒன்னும் இல்லைங்க நீங்க அதனால கவலை படாம வாங்க அது மட்டும் இல்லாம மேரேஜ் கோவால இல்ல சர்ச் கிடைக்கல அதுனால மும்பைல தான் நான் வாட்ஸ் ஆப்ல எந்த சர்ச்ன்னு அட்ரஸ் அனுப்புறேன் நீங்க நாளைக்கு காலைல எல்லாம் கிளம்பி வந்துடுங்க என்றாள் .அப்புறம் உங்க வீட்டுக்கு ஒரு பையன் ட்ரெஸ் கொண்டு வருவான் மேறேஜ்க்கு நான் எடுத்தது அத போட்டு வாங்க என்றாள் சிமி .
எதுக்குங்க ட்ரெஸ் எல்லாம் என்றாள் சுவாதி .ப்ளிஸ் எனக்காக போட்டுகிட்டு மறக்காம வாங்க என்றாள் சிமி .சரிங்க என்று சுவாதி போனை வைக்கவும் அஞ்சலி கார் ஒட்டி கொண்டு வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது .ம்ம் நான் அது யாரு என்னன்னு எல்லாம் கேக்க போறது இல்ல ஆனா அந்த ஹாவுஸ் வோயிப் அது என்ன உண்மைலே உன் ஆசையா என கேட்டாள் அஞ்சலி .
சே அது நான் என்னைக்கோ ஏப் எம்ல ஒரு பொண்ணு என் கிட்ட சொன்னத அப்படியே போன்ல பேசுனவ கிட்ட சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .எங்க ஏன் கண்ண பாத்து சொல்லு என்றாள் அஞ்சலி .சுவாதி ஒன்றும் சொல்லமால் சோ என்று ஒரு சலிப்போடு தலை குனிந்தாள் .ஏன் சொல்லுடி உன்னால சொல்ல முடியாது எனக்கு தெரியும் ஏன்னா நீ அந்த போன்ல சொன்னது எல்லாம் உண்மைலே உன் ஆச அத என் கிட்டே நிறைய தடவ சொல்லிருக்க அப்புறம் ஏன் பொய்ன்னு நடிக்கிற என அஞ்சலி கேட்டாள் .
ஓகே ஓகே ஆமா எனக்கு உண்மைலே ஒரு குடும்பமா ஹாவுஸ் வோயிப்பா மட்டும் இருக்கணும்னு சின்ன பிள்ளைல இருந்து ஆச ஏன்னா நான் குடும்பம் இல்லாதாவ ஒரு அநாதை அதான் எப்பயுமே இப்படி எல்லாம் ஒரு குடும்பம் வேணும் பிள்ளைக வேணும் ஒரு புருஷன் அது அன்பானா புருசனா இல்லாட்டியும் பரவல எல்லாருக்கும் இருக்கிற மாதிரி என்னைய திட்டுற ஏன் அடிக்கிற புருசனா கூட இருந்தா போதும் அப்புறம் ஒரு சின்ன வீடு அது போதும் கார் வேணாம் ஒரு பாஜாஜ் பைக் போதும் எந்த வசதியும் வேணாம் எனக்குன்னு ஒரு அழகான குடும்பம் வேணும்னு நினைச்சு பாத்து பல நாள் ஏங்கி இருக்கேன் .

ஆனா நாம நினைக்கிறது எல்லாம் உடனே நடக்கிறதுக்கு இது என்ன சினிமாவா இல்ல வாழ்க்கை . வாழ்க்கைலே எப்பயுமே நாம நினைக்கிறதுக்கு மாறா தான் நடக்கும் அத ஏத்துக்கணும் அதான் வாழ்க்கை .
அட்லிஸ்ட் சொல்லி பாத்தோ நினைச்சு பாத்தொவாச்சும் நிம்மதி ஆயிக்கிறேன் அது மட்டும் தான் முடியும் என்றாள் சுவாதி .யே இது ஏன் நடக்காது இப்ப கூட நீ நினைச்சா நடக்கும் போயி அவன் கிட்ட உன் லவ்வ சொன்னா நீ நினைச்ச மாதிரி ஒரு ஹாவுஸ் வோயிப்பா இருக்காலம் ஏன் இப்படி பண்ற என கேட்டாள் அஞ்சலி .
என்னா அவனுக்கு என்னைய பிடிக்கல என்றாள் சுவாதி .எத வச்சு சொல்ற என்றாள் அஞ்சலி .ஒரு ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி அவன் கிட்ட ஓரளவில் மறைமுகமா என் பீலிங்க்ஸ் வெளிபடுத்தினேன் .அதுல இருந்து அவன் என் மூஞ்சிய கூட பாக்காம இந்த 1 மாசமும் அவையிட் பண்றான் .நைட் நான் தூங்குனதுக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வரான் .காலைல நான் ஹால்ல இல்லாம இருந்தா தான் ஆபிஸ் போறான் .