நண்பனின் காதலி – 9 54

ஏன்னா அவன் என்ன கெட்டவனா உன்னையே மாதிரி ரொம்ப நல்லவன்டா இப்ப கூட போனா என்னைய ஏத்துக்குவான் என்றாள் .ஒ தெரியுதுல நான் கெட்டவன்னு அப்புறம் என்ன மயிருக்குடி கூட இருக்க போ போயி அந்த டேவிட்க்கே ரெண்டாவது பொண்டாட்டியா போ யார் வேணாம்னு சொன்னா யார் உன்னைய பிடிச்சு வச்சு கிட்டு இருக்கா போடி போயி தொலைடி நாயே என்றான்
கோபத்தோடு .போறேன்டா போறேன் உன் குழந்தைய பெத்துட்டு அதுக்கு அப்புறம் போறேன் என்றாள் .பெரிய குழந்தை மயிரு முதல அது என்னால வந்த குழந்தையான்னு இன்னும் தெரியல அப்புறம் டேவிட் தான் ரொம்ப நல்லவன் ஆச்சே
அது யாரோட குழந்தையா இருந்தாலும் எத்துக்குவான் அப்படியே உன்னையும் கல்யாணம் பண்ணி அந்த குழந்தைக்கும் இன்சியல் கொடுப்பான் போ போயி நில்லு அவனும் உன்னைய தான் எதிர் பார்த்து காத்து கிட்டு இருக்கான் என்றான் விக்கி .அதை கேட்டு சுவாதி விக்கி என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு அத புரிஞ்சுக்கோ என்றாள் .

என்னது நீ பொறுமையா இருக்கியா நான் தாண்டி பொறுமையா இருக்கேன் நீ பண்றதுக்கு எல்லாம் உன்னால நான் தினம் தினம் இம்ச அனுபிவிக்கிறேன் நீ என் கூட இருக்கிறது எனக்கு பயங்கர எரிச்சலா இருக்கு உன்னைய எல்லாம் நான் இல்ல யாருமே வச்சு இருக்க மாட்டாங்கே
உன்னால தான் உங்க அப்பா அம்மா கூட பிரிஞ்சு இருப்பாங்க என்று விக்கி பேசி கொண்டே போக போதும் நிறுத்து டாஆஆஆஆஆ என்று கத்தினாள் சுவாதி .பேசி கொண்டு இருந்த விக்கி அமைதி ஆனான் .உனக்கு நான் இங்க இருக்க கூடாது அவளவுதானே என்றாள் கண்ணில் நீர் வடிய கோபத்தோடு .விக்கிக்கு அதை பார்த்து ஒன்றும் சொல்ல முடியவில்லை .அது வந்து இல்ல அப்படி இல்ல என்று திணற
கவலை படாத இன்னும் ஒரே வாரத்துல இல்ல இன்னும் 4 நாள்ல நான் உன் வீட்ட விட்டு போறேன் .நீ சந்தோசமா இரு போதுமா என்றாள் சுவாதி .அது வரைக்கும் எனக்கும் உனக்கும் ஒரு பேச்சும் கிடையாது சரியா என்றாள் .அவள் அவ்வாறு சொல்லி விட்டு கோபமாக அவனை முறைத்து பார்த்து விட்டு அவள் ரூமிற்கு போனாள் .
சே ஏண்டா இப்படி பேசுன விக்கி என்றது மனம் ,தெரியல கொஞ்ச நாளாவே எனக்குள்ள டேவிட் வந்ததுனால இருக்க டென்சன் இவ வேற அதுக்கு ஏத்த மாதிரி டேவிட் தான் பிடிக்கும்ன்னு சொன்னாளா அதான் அப்படி அவள கண்டபடி திட்டிட்டேன் என்றான் .போடா இப்ப அவ கோபிச்சுகிட்டு போ போறேன்கிரா என்ன பண்ண போற என்றது மனம் .
போனா போகட்டும் எனக்கு ஒன்னும் கவலை இல்ல என்றான் .இருந்தாலும் நீ ரொம்ப ஹார்சா பேசிட்ட என்றது மனம் .அப்படியா என்றான் .என்ன நோப்புடியா ஒரு புள்ள தாட்சி பொண்ண கொஞ்சம் கூட இப்படி இரக்கம் இல்லாமையா திட்டுவாங்க அதுனால அவளுக்கு ஏதும்
ஏதும் சொல்லாத அவளுக்கு ஒன்னும் ஆகாது என்றான் தன் மனதிடிம் நினைத்து கொண்டு பேசி கொண்டு இருக்கும் போது சுவாதி ரூமில் ஐயோ அம்மாஆ வலிக்குதே என்று அவள் அலறும் சத்தம் கேட்டு விக்கி அவள் ரூம் கதவை தட்டினான் .என்ன ஆச்சு என் கத்துற என்றான் .அவள் ஒன்னும் சொல்லமால் ஐயோ முடியலையே என்று கத்தி கொண்டு மட்டும் இருந்தாள் .விக்கி ரெண்டு மூனு தடவை கதவை தட்டி விட்டு ஓங்கி ஒரு மிதி மிதித்து திறந்தான் .
உள்ளே சுவாதி வயிற்ரை பிடித்து அழுது கொண்டு இருந்தாள் .என்ன ஆச்சு என்ன பண்ணுது என்றான் விக்கி .ஒன்னும் இல்ல நீ உன் வேலைய பாத்துட்டு போடா மயிரு என்றாள் சுவாதி .
ஐயோ முடியலையே அம்மா என்று வயிற்ரை பிடித்து கொண்டு அழுதாள் .யே என்னடி பண்ணுது சொல்லி தொல என்றான் .தயவு செஞ்சு போ நான் வேணும்னா என் சாவுக்கு காரணம் நீ இல்லன்னு லெட்டர் கூட எழுதி தரேன் ஆனா இப்ப நீ இங்க என் ரூம்ல இருக்காத ப்ளிஸ் என்று கத்தினாள் .
ஓகே நான் போறேன் போறேன் என்று சொல்லி மெல்ல கதவு வரை போனவன் அவள் அம்மா ஐயோ என்று கத்தி கொண்டே இருப்பதை பார்த்து அவனால் பொறுக்க முடியமால் திரும்பி வந்தான் .உன்னைய தான் ரூம விட்டு போ சொன்னேளே அப்புறம் ஏன் வர ஐயோ முடியலையே என்று முனகி கொண்டு இருந்தாள் .