த்ரீ ரோசஸ் 5 138

என் பிரென்டு கோபால் வாரத்துக்கு ஒரு முறை கும்பகோணம் போய் போய் வருவான்.. அவன்கிட்ட உன் காலேஜ் வேலை பற்றி சொன்னேன்.. அவனே உன்னை வெள்ளிக்கிழமை அங்க டிராப் பண்ணிட்டு அப்படியே திங்கள் கிழமை வரும் போது அவன் காரிலேயே பிக் அப் பண்ணிட்டு வந்துட்றேன்னு சொல்லிட்டான்..

அதனால இனிமே உனக்கு பஸ்ல டயர்டா போற வேலை இல்ல.. கோபால் கூட காரிலேயே போய் காரிலேயே திரும்பி வந்திடலாம்.. உனக்கு அலுப்பு தெரியாது.. என்ன சொல்ற.. என்று நான் திரும்பாமலேயே கவனமாக வண்டியை ஓட்டியபடி சொல்ல…

அப்பாடா.. இப்ப தாங்க நிம்மதியா இருக்கு.. ரொம்ப தேங்க்ஸ்ங்க.. என்று அவள் என்னிடம் சொல்ல..

நான் வண்டியை கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தேன்..

என்னங்க.. நம்ம வீட்டுக்கு போறதுக்கு முன்னால.. அப்படியே சிவகுமார் சார் வீட்டுக்கு போயிட்டு போலாங்க.. என்றாள்..

எதுக்கு சரஸ்வதி சிவகுமார் வீட்டுக்கு.. என்று நான் கேட்க..

ஒரு பென் டிரைவ் அவர்கிட்ட கொடுக்கணும்.. அதும் இல்லாம.. இந்த நடுல வர்ற ஞாயிற்று கிழமை நான் காலேஜ் லீவா இருந்தாலும் கும்பகோணத்துல வேஸ்ட்டா தங்க வேண்டியதா இருக்கு.. அதனால என்னோட டயம் டேபிள் மாத்தி கொடுக்க மறுபடியும் ஒரு ரிக்கமெண்டேஷன் லெட்டர் தர்றேன்னு சொன்னாரு அதனால முதல்ல அவரை பார்த்துத்து அப்புறம் வீட்டுக்கு போலாங்க.. என்று அவள் சொல்லவும்..

நான் வண்டியை சிவகுமார் வீட்டு பக்கம் திருப்பினேன்..

வாசலில் கூர்க்கா… எங்களை பார்த்ததும்.. சலாம் சாப்.. என்ன இந்த பக்கம் என்றான் அந்த நேப்பால்காரன்

சிவகுமா£ர் சாரை பார்ககணும் என்று சொல்ல..

சாப்.. சிவகுமார் சாப் வெளியே போய் இருக்கார்.. வர்ற இரண்டு மணி நேரம் ஆகும்.. என்றான்..

ஐயோ.. 2 மணி நேரம் ஆகுமா.. என கவலைப்பட்டாள் சரஸ்வதி..

சரி பரவாயில்ல.. ஒன்னு பண்ணுங்க.. இந்த பென் டிரைவை சிவகுமார் சார்கிட்ட குடுத்திடுங்க.. நான் மதியானத்துக்கு மேலே வந்து பார்க்குறேன்னு சொல்லுங்க என்று சரஸ்வதி அந்த கூர்க்கவிடம் பெண் டிரைவை கொடுத்து விட்டு மீண்டும் என் பைக்கில் வந்து ஏறிக் கொண்டாள்..

நான் பைக்கை மீண்டும் எங்கள் வீட்டின் திசை நோக்கி செலுத்தினேன்..

வீடு வந்து சேர்ந்தோம்..

வாசலிலேயே என் மகன் நின்று கொண்டிருந்தான்..

அம்மா.. என்று ஓடி வந்து சரஸ்வதியை இறுக்கமாக கட்டி அணைத்து அவள் கன்னம் இரண்டிலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தான்..

சரஸ்வதியும் மகனை இந்த 4 நாட்கள் பிரிந்த ஏக்கத்தில் அவனை இறுக்கி கட்டி அணைத்து இச் இச் என்று அவன் கன்னத்திலும் நெற்றியிலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள்..

அம்மா மகன் இருவரும் இதுவரை இப்படி இத்தனை நாட்கள் பிரிந்தது இல்லை..

என் மகன் ரொம்ப ஏங்கி போய் இருந்தான்..

அப்படியே சரஸ்வதியும் என் மகனும் கட்டி அணைத்தபடி வீட்டிற்குள் சென்றார்கள்..

நான் சரஸ்வதி கொண்டு வந்திருந்த பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்..

என்னங்க.. எனக்கு செம டயர்டா இருக்கு.. நான் கொஞ்சம் படுத்து தூங்குறேன்.. சரியா 2 மணி நேரத்துக்கு பிறகு எழுப்பி விடுங்க.. சிவகுமார் சார் வீட்டுக்கு போகணும்.. என்றாள்..

சரி நீ நம்ம பையன் ரூமிலேயே போய் படுத்துக்க.. எனக்கு வெளியே வேலை இருக்கு.. நான் போய்ட்டு சரியா இரண்டு மணி நேரத்துல வந்துடுறேன்.. என்று சொல்லிவிட்டு நான் வெளியே சென்றேன்..

என் வேலைகளையும் எல்லாம் முடித்து வீடு திரும்பிய போது.. சரஸ்வதி நன்றாக குளித்து பிரெஷ்ஷாக வேறு புடவையில் அருமையாக கவர்ச்சியாக ரெடியாகி இருந்தாள்..

போலாமாங்க என்று கேட்க.. எனக்கு இப்ப டயர்டா இருக்கு.. நீ ஆட்டோ பிடிச்சி சிவகுமார் வீட்டுக்கு போயிட்டு வந்துட்றியா என்று நான் கேட்க..

சரிங்க என்று என்று ஒரு மறுபேச்சும் பேசாமல் அவள் சென்றாள்..

1 Comment

Comments are closed.