காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 67

“ப்ளீஸ்” அவரிடம் கெஞ்சினேன்.

“எனக்கு யோசிக்க டைம் வேணும் வித்யா, வெளியே எப்படி இருந்தாலும் இந்த வீட்டுக்குளே நீ வேறு நான் வேறு. நீ இப்போவே இந்த ரூமை விட்டு போயிடு. சங்கர் கிட்ட இதை பத்தி எல்லாம் பேசிட்டு இருக்காதே” இழுத்து போத்தி கொண்டு படுத்துவிட்டார்.

அறை விழும், கோவத்தில் கன்னாபின்னாவென்று திட்டுவார் இல்லை டைவர்ஸ் பண்ணிவிடுவேன் என்று சொல்லுவார் என்று நினைத்து இருந்த எனக்கு அவர் இப்போது சொல்லியது ஏனோ ஒரே சமயத்தில் பயத்தையும் அமைதியும் கொடுத்தது. சங்கரை ஏன் இழுத்தார் ஒருவேளை அவனுக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு ஏற்கனவே தெரியுமா?. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை நானும் அவரும் தனி தனியாக இருப்பது வெளியில் யாருக்கும் குறிப்பாக சங்கருக்கு தெரிய வேண்டாம் என்பதை தான் இப்படி சொல்லுகிறாரோ? மனதில் எழும்பிய கேள்விக்கு நானே விடையும் எழுதி கொண்டேன்.

எவ்வளவு ஆச்சரியத்தை என்னால் தாங்கி கொண்டு இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. முதலில் எதேச்சையாக வித்யாவை பற்றி தெரிந்தது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி என்றாலும் அதைவிட பெரிய அதிர்ச்சி அவளாகவே வந்து எல்லாத்தையும் ஒத்துக்கொண்டது. ஒருவேளை எனக்கு ஏற்கனவே அந்த உண்மை ஏற்கனவே தெரியாமல் இருந்தால் அவளை அடித்து கொன்று கூட இருப்பேன், ஒருவேளை கடவுள் என்னை கொலையாளி ஆக்க விரும்பாமல் தான் எனக்கு இதை முன்பே தெரியும் படி செய்தாரோ என்னவோ. ஏற்கனவே தெரியும் என்பதால் வித்யா உன்மையை என்னிடம் சொன்ன போது எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக தெரியவில்லை. திட்டாமல் இருந்ததில் அவள் ஆச்சர்யப்பட்டதை அவள் முகமே காட்டிக்கொடுத்தது.

அர்ச்சனாவை எப்படி கவிழ்ப்பது, சங்கர் வித்யாவை என்ன செய்வது போன்ற என்ன எண்ணங்கள் என்னை குழம்ப வைத்தது. சர்மா சொன்னது போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்காமல் பொறுமையாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும், யோசிக்க நேரம் வேண்டும். டாக்டர் ஒரு வாரமாவது ரெஸ்ட் எடுக்க சொல்லி இருந்ததால் அதை பயன்படுத்தி எல்லாவற்றிற்கும் யோசித்து பக்காவாக பிளான் போட்டு அதை செயல் படுத்த வேண்டும்.

அடுத்த நாள் காலையிலே சங்கர் அர்ச்சனா ஹனிமூன் முடித்துவிட்டு ஏர்போர்டில் இருந்து நேராக என்னை வந்து பார்த்தனர். சங்கர் என்னை நலம் விசாரித்து கொண்டு இருந்ததை எல்லாம் சட்டை செய்யாமல் லூஸ் ஹேராக விட்டிருந்த அர்ச்சனாவின் முடி அவள் முலைகள் மீது விழுவதை ரசித்துக்கொண்டே கடமைக்கு சங்கரை பார்த்து சிரித்தேன். அவர்கள் இருவரும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட வித்யா என்னிடம் ஏதோ பேச முயற்சித்து கோவில் செல்வதாக சென்றுவிட்டாள். வித்யாவிடம் நான் எதுவும் பேசாமல் தவிர்த்ததால் அவளும் மீண்டும் ஆபிஸ் செல்ல ஆரம்பித்தாள்.

சங்கரை பழிவாங்க வேண்டும் என்றால் முதலில் அவனை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் வைக்க முடிவு செய்து சர்மாவை தொடர்பு கொள்ள அவன் ஒரு பெண் டெக்டக்ட்டிவ் நம்பரை கொடுத்தான். அவளின் ஆபீஸ் எனது வீட்டின் அருகே தான் இருந்ததால் ஓலா புக் செய்து அவளின் ஆஃபீஸிற்கு வந்தேன்.

“ஹலோ வெரோனிக்கா???”

“எஸ், நீங்க Mr. பாலன் தானே”