காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 1 153

அதற்குள்ளாக என்னை பார்த்த வித்யா என்னை நோக்கி வந்தாள். அவள் இப்போது வாடாமல்லி கலரில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு மாறி இருந்தாள். கண்கள் எல்லாம் செக்கச்செவேலென சிவந்து இருந்தது.

“என்ன வித்யா கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு” அவளிடம் கேட்டேன்.

“அது ஒன்னுமில்லைங்க, நைட்டு பூரா தூக்கம் இல்ல இல்ல அது தான். சரி நீங்க முதல்ல போய் உட்காருங்க.” என்னை அங்கே இருந்த ஒரு காலி இருக்கையை காட்டி உட்காரச் செய்தாள்.

நான் போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ஐயர் பொண்ணை கூப்பிட்டு வாங்கோ என்று சொல்ல மணமகள் அர்ச்சனா மேடையை நோக்கி அழைத்து வரப்பட்டு சங்கரின் அருகே உட்கார வைக்கப்பட்டாள். அவள் நிறத்திற்கு அந்த சிகப்பு கலர் புடவை மிகவும் அருமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் ஐயர் மந்திரங்கள் சொல்லி கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல அர்ச்சனா ஷங்கரின் மனைவியானாள். பின்னர் பெரியவர்களிடம் எல்லாம் ஆசி பெற்று விட்டு மணமக்கள் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல எனது மனைவி மிக எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

“நான் மட்டும் உங்களுக்கு போன் பண்ணல அப்படின்னா நீங்க முகூர்த்தத்துக்கு வந்து இருக்க மாட்டீங்க போல”

“அசதியில் நல்லா தூங்கிட்டேன் போல நல்ல வேலை நீ போன் பண்ணிட்ட”

“சரி கிளம்பிட்டிங்களா அப்படின்னு கேட்கலாம்னு தான் உங்க போன் பண்ணினேன், பார்த்தா தூங்கிட்டு இருக்கீங்க”

“சரி நம்ம இப்ப வீட்டுக்கு போகலாம்? எதுவும் வேலை இருக்கா நமக்கு இங்கே.” என்று கேட்டேன்.

“இனி நமக்கு வேலை ஒன்னும் இல்ல வாங்க நாம சாப்பிட்டுவிட்டு எல்லார்கிட்டயும் சொல்லி விட்டு கிளம்பலாம்.”

இருவரும் டைனிங் ஹால் போய் இட்லி வடை பாயசம் என்று சாப்பிட்டுவிட்டு சங்கரின் அம்மா மற்றும் வித்யாவின் சொந்தக்காரர்கள் சிலரிடம் எல்லாம் சொல்லிவிட்டு 7 மணிக்கு ஓசூரில் இருந்து கிளம்பி எங்கள் வீட்டை 8.30 மணிக்கெல்லாம் அடைந்தோம்.

“சரிங்க எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு ராத்திரியெல்லாம் தூக்கமில்ல நான் தூங்குறேன். லஞ்ச் வேணும்னா ஏதாச்சும் ஆர்டர் பண்ணிக்கோங்க.” சொல்லி விட்டு பாத்ரூம் சென்று புடவை எல்லாம் களைந்துவிட்டு என் மனைவி நைட்டிக்கு மாறிவிட்டு பெட்டில் சென்று படுத்து விட்டாள்.