காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 1 151

ஆறரை மணிக்கெல்லாம் ஷங்கரும் அர்ச்சனாவும் வீட்டிற்கு வந்தனர். இங்கே இருந்து நேரடியாக மாலத்தீவிற்கு ஹனிமூன் போவதால் இருவரும் பெரிய trolley bag ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தனர். நான் அர்ச்சனா உடைய பாகை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு என்று தயார் செய்து வைத்திருந்த guest பெட்ரூமில் வைத்தேன் ஷங்கரும் அவனுடைய வகை தூக்கி வந்து ரூமில் வைத்தான்.

அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டவுடன் என் மனைவி அவள் செய்து வைத்திருந்த அல்வாவை எடுத்து வந்து ஷங்கரிடம் நீட்டி “அர்ச்சனாவுக்கு ஊட்டி விடு” என்று சொன்னாள்.

அப்போதுதான் அர்ச்சனாவை பார்த்தேன் பச்சை கலர் சுடிதாரில் அருமையாக இருந்தாள். முன்பைப் போல அதிக மேக்கப் இல்லாமல் லேசான மேக்கப் மட்டும் தான் போட்டு இருந்தாள். கண்களுக்கு கீழே தூக்கமின்மையால் கருவளையம் லேசாக இருந்தது. சங்கர் நேற்று இரவு எல்லாம் அர்ச்சனாவை தூங்கவிடாமல் போட்டு புரட்டி எடுத்து விட்டான் என்ற எண்ணம் எனக்கு அதீத கிளர்ச்சியைத் தந்தது.

அர்ச்சனா அல்வாவை விழுங்க அடுத்து ஷங்கருக்கு அவள் எடுத்து ஊட்டி விட்டாள். பிறகு வித்யாவை பார்த்து “அக்கா, மாமாவுக்கு நீங்க ஊட்டி விடுங்கள்” என்று சொன்னாள்.

உடனே என் மனைவி “புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதிரி உறவு முறை வைத்து கூப்பிட முடியும் என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“நான் தான் இனி உங்கள அக்கா மாமானு கூப்பிடு போறேன். சங்கர் வேணும்னா சார் மேடம் கூப்பிட்டு கொள்ளட்டும்” என்று சொல்லி அவளும் சிரித்தாள்.

என் மனைவி எனக்கு அந்த ஆப்பிள் அல்வாவை ஊட்ட நான் சாப்பிட்ட உடன் “மாமா நீங்களும் அக்காவுக்கு ஊட்டி விடுங்கள்” என்று என்னிடம் அல்வா எடுத்துக் கையில் கொடுத்தாள். அவள் கையிலிருந்த அல்வாவை எடுத்து வித்தியாவிற்கு நானும் ஊட்டி விட்டேன்.

என் மனைவி ஷங்கரிடம் “கல்யாண போட்டோ எல்லாம் எப்போ வரும்” என்று கேட்டாள்.

“அது வரதுக்கு எப்படியும் இரண்டு வாரம் ஆகி விடும். அர்ச்சனா தான் அவங்க கிட்ட பேசி கொஞ்சம் ஃபோட்டோஸ் மட்டும் வாங்கி இருக்கா”

“நாங்க பார்க்கலாமா” என்று என் மனைவி கேட்டாள்.

“இங்க பாருங்க அக்கா” என்று அர்ச்சனா தனது பேகில் இருந்த ஐபேடில் போட்டோக்களை ஒவ்வொன்றாக எடுத்து காட்டிக் கொண்டிருந்தாள்.

என் மனைவி அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு போட்டோக்களையும் பார்த்துக் கொண்டிருக்க நான் சும்மா நின்று கொண்டிருந்தேன்.