காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 1 151

பெண்ணுடைய அப்பா அம்மா இருவரும் ஓடி வந்து வாங்க வாங்க இன்று எங்கள் இருவரையும் வரவேற்றனர். உள்ளே ஒரு இடத்தில் சங்கர் உடைய அம்மா இருக்க வித்யா என்னை அவரிடம் கூட்டிப் போனாள்.

“அப்பா இல்லாத புள்ளன்னு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து சும்மா பொறுக்கிதனமா ஊர் சுத்திட்டு இருந்த என் பையன் சங்கருக்கு ஒரு நல்ல வேலையும் கொடுத்து இப்ப கல்யாணமும் பண்ணி வைக்கிறீங்க, நீங்க மகாராசனா இருக்கணும்.” மனதார சங்கரின் அம்மா எங்கள் இருவரையும் வாழ்த்தினாள்.

“நான் எதுவும் செய்யல தனியாவே எல்லாத்தையும் செஞ்சது இவள் தான். பொண்ணோட அப்பா அம்மாவை கூட நான் இப்பத்தான் பார்த்தேன்” என்று என் மனைவி வித்யாவை காட்டினேன். சங்கர் உடைய அம்மா வித்யாவை ஆரத்தழுவிக் கொண்டாள்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பி மேடையை நோக்கி செல்ல அங்கே வரிசையாக நாற்காலிகளில் போடப்பட்டு இருக்கேன் மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கேயும் சங்கர் weds அர்ச்சனா என்று எழுதியிருந்தது. மேடையில் சங்கர் மட்டுமே ஒரு சாம்பல் நிற கோட் சூட்டில் நின்று கொண்டிருந்தான் எங்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டேன் கையசைத்தான்.

வித்யா அங்கே நின்றிருந்த மணமகளின் அம்மாவைப் பார்த்து மாப்பிள்ளை மட்டும் தான் நின்னுட்டு இருக்காரு பொண்ணு எங்கே” என்று கேட்டாள்.

“பியூட்டி பார்லரிலிருந்து இப்பதான் வந்தா, டிரஸ் மத்திய உடனே அழைச்சிட்டு வர்றேன்” சொல்லிவிட்டு மணப்பெண் அறையை நோக்கி சென்றாள்.

“என்னங்க நீங்க அப்படியே போயி மொத வரிசைல உட்காருங்க நான் போயி பெண்ணை ரெடியாகி கூட்டிட்டு வரேன் சொல்லிவிட்டு வித்யாவும் மணமகள் அறையை நோக்கி சென்றாள்.

அவள் போய் 15 நிமிடம் ஆகியும் மணப்பெண் வெளியே வரவே இல்லை, ஆனால் அதற்குள்ளாக மண்டபமே நிரம்பியிருந்தது. கொஞ்ச நேரத்தில் மணப்பெண் அறைக்கதவு திறக்க பெண்ணுடைய அம்மா என் மனைவி என்று சுற்றிலும் பெண்கள் படை சூழ மணப்பெண் அர்ச்சனா மேடைக்கு கொண்டு வரப்பட்டாள்.