காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 1 153

வித்யா ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்து கொண்டு வர என தீவிரமாக “எதையோ பத்தி யோசிச்சிட்டே வர” அவளிடம் கேட்டேன்.

“அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க, நாம reception ஆரம்பிக்க எடுத்துக்கொள்ள போய்விட முடியுமா அப்படின்னு தான் யோசிச்சிட்டே வந்தேன்”

“இதுக்காகவா எதையோ பறிகொடுத்த மாதிரி யோசிச்சிட்டே வந்தே. கால் மணி நேரம் முன்னாடியே போய் எல்லாம் அதைப் பத்தி நீ ஒன்னும் கவலைப்படாதே”

மெலிதாக சிரித்தாள்.

“மாசத்துல எப்படியும் மூணு நாலு தடவ இந்தக் கோயில் அந்தக் கோயில் அப்படின்னு போயிடுறே. இதுல வீட்டுல வேற பூஜை பண்ணனுமா”

மீண்டும் மெலிதாக சிரித்தாள். வேறு ஒன்றும் பேசாமல் சில்க் போர்ட் தாண்டி ஓசூர் செல்லக்கூடிய மேம்பாலத்தில் வண்டியை விரைவாக ஓட்டினேன்.

“என்னங்க காலைல நாலரை மணி முகூர்த்தம் நீங்க பாட்டுக்கு வழக்கம்போல தூக்க மாத்திரை போட்டுட்டு தூங்கிடாதீங்க.”

“ஏன் நீ என்னை எழுப்பி விட மாட்டியா என்ன?”

“நீங்க மட்டும்தான் ஹோட்டலில் போய் தூங்க போறீங்க. நான் ராத்திரி முழுக்க மண்டபத்தில் தான் இருக்கப் போறேன். நிறைய சொந்தகாரங்க எல்லாம் இருப்பாங்க அப்படியே விட்டுவிட்டு போக முடியாது”

“சரி உன் இஷ்டம்.”

ஒரு வழியாக தேடிப்பிடித்து கல்யாண மண்டபத்தை அடைந்தோம். வெளியே சங்கர் weds அர்ச்சனா என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.