கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

நதி கடலைத் தேடிக்கொண்டேயிருக்கிறது. ஓடும் ஓட்டத்தில் தன்னை சுத்தம் செய்துகொள்ளுகிறது. அலுக்காமல் தேடி தேடி முடிவில் கடலை அடைந்தே தீருகிறது.

நதிக்கு கடலில் சென்று சேரவேண்டும்; அதுவே அதன் இலக்கு. அதுவே அதன் இலட்சியம். அதுவே அதன் முடிவான முடிவு.

நான் நதி… நான் வற்றாத ஜீவ நதி.

அந்த நள்ளிரவில், இருட்டறையில், சம்பத்தின் உள்ளம், பறக்கும் திசை எதுவென அறியாமல், ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. உயர உயர பறக்க நினைக்கும், ஊர்குருவியின் நிலையை அவன் மனம் ஒத்திருந்தது.

இந்த நேரத்தில் சுகன்யாவின் மீது தன் மனதிலிருந்து பொங்கிவரும் ஆசை, காதல் சரியானதா? தவறானதா? தன் ஆசையை அவளிடம் சொல்லுவதா? வேண்டாமா?

துல்லியமாக ஒரு முடிவெடுக்கமுடியாமல், விழிப்புமில்லாமல், தூக்கமுமில்லாத நிலையில் கட்டிலில் கிடந்தான், சம்பத்.
நேற்றைய இரவின் நினைவுகள் ஒரு பறவையைப் போல் சிறகை விரித்தன. தலை முடியை ஷாம்புவால் அவசரமில்லாமல் சுத்தம் செய்து ஷவரை திருகினான், சம்பத்.

சிறு தூறலாய், பூத்துளிகளாய், உடலுக்கு இதமாக சுடுநீர் தலையில் கொட்டி உடலெங்கும் வழிந்தது.

வீட்டில் யாருமில்லை. தனியனாக இருக்கிறேன். என்ன செய்கிறாய் என்று கேட்கும் என் தாய் வீட்டில் இல்லை. சுதந்திரம். தனிமை நீ விரும்பும் சுதந்திரத்தைத் தருகிறது. சுதந்திரம் தரும் சுகமே தனிதான்.

மனம் இலேசாகும் போது வாய் முணுமுணுக்கத்தானே செய்யும். சம்பத் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சம்பத் இப்போது தன் வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

என்மேல் விழுந்த மழைத்துளியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை மயக்கிய மெல்லிசையே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன்!

மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்!
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்!

ஒலியைத் திறந்தால் இசை இருக்கும்!
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்!

வானம் திறந்தால் மழை இருக்கும்!
என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்!

இரவைத் திறந்தால் பகல் இருக்கும்!
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்!

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?

அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ?

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?

பார்வை இரண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமை ஆகிடுமோ?