எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி End 90

“ச்ச.. இவ்வளவு முக்கியமான விஷயத்தை எப்படி நான் மிஸ் பண்ணினேன்..??” தன்னைத்தானே நொந்துகொண்ட அசோக்கால்,

“ஐ.க்யு லெவல் கம்மியா இருந்தா இதெல்லாம் சகஜம்தான் அசோக்.. விடு..!!” மீராவின் கிண்டலை புரிந்துகொள்ள முடியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையும் ஏக்கமுமாக பார்த்தார்கள்..!! மீராவுடைய விருப்பத்துடனோ, விருப்பம் இல்லாமலோ அவளுடைய புடவைத்தலைப்பு கீழே நழுவியது.. அதை தடுத்து நிறுத்தி மேலே போர்த்திக் கொள்கிற எண்ணம்கூட இல்லாதவளாய் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்..!! மஞ்சள்நிற ரவிக்கைக்குள் மாங்கனிகள் ரெண்டு விம்மிக்கொண்டிருந்தன.. முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அசோக்கின் விழிகள், இப்போது சற்றே கீழிறங்கி அந்த மாங்கனிகளை மேய்ந்தன..!!

மனைவியின் மார்பழகை சிலவினாடிகள் வெறித்துப் பார்த்த அசோக்.. இப்போது கைகள் இரண்டையும் உயர்த்தி.. அவளுடைய கன்னங்களை பற்றிக்கொண்டான்..!! அவன் அவ்வாறு பற்றிக்கொண்டதும்.. மீரா தனது இமைகளை மெல்ல மூடிக்கொண்டாள்.. தித்தித்திடுகிற ஒரு முத்தச்சுவைக்கு உடனடியாய் தயாரானாள்.. எந்த நொடியும் கணவனின் இதழ்கள், தனது இதழ்களை வந்து கவ்வலாம் என்று ஆசையாக காத்திருந்தாள்..!!

“ஆனா.. நான் ஸ்க்ரிப்டை முடிக்கணுமே..??”

அசோக் முத்தமிடாமல் அவ்வாறு கவலையாக சொன்னதும்.. மீரா எரிச்சலாகிப்போய் படக்கென இமைகள் திறந்தாள்..!! அந்த எரிச்சலுடனே..

“எல்லாம் காலைல எழுதிக்கலாம்டா..!!” என்றாள்.

“காலைல நான் நல்லா தூங்குவனே..??”

“கவலையே படாத.. உன் டிக்கிலயே நாலு மிதி மிதிச்சு.. நான் உன்னை எழுப்பி விடுறேன்..!!”

“ப்ச்.. அந்தாளு ஆறு மணிக்குலாம் வந்துடுவான் மீரா..!!”

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!!”

காலநேரம் தெரியாமல் கடுப்படிக்கும் கணவனை.. மீரா உர்ரென்று முறைத்தாள்..!! ‘இனியும் வெக்கப்பட்டால் வேலைக்காவாது’ என்பதை உணர்ந்தவள்.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்தாள்..!! பாய்ந்து சென்று.. இவளே அவனது உதடுகளை கவ்விக்கொண்டாள்..!!

“மீராஆஆஹ்க்க்….!!!!!”

ஆரம்பத்தில் பதறிய அசோக், அப்புறம் அப்படியே அடங்கிப் போனான்..!! தனது பிடரி மயிரினைப் அழுத்தமாக பற்றியிழுத்து.. தனது இதழ்களை ஆவேசமாக கவ்வியுறிஞ்சுகிற மீராவுக்கு.. அவனால் என்ன எதிர்ப்பு காட்டிவிட முடியும்..?? கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிப்போய்.. அவளுடைய இடுப்பினை பிடிமானமாக பற்றிக்கொண்டான்..!! வாய்வழியே அவனுக்கு அமுதூட்டி.. தனது நாக்கினை அவனுடையதில் தடவவிட்டு.. நீண்டநேர எச்சில் வர்த்தகம் செய்து முடித்து.. மெல்ல மெல்ல மீரா தனது உதடுகளை பிரித்தெடுத்தபோது.. அசோக் விழிகள் செருக நின்றிருந்தான்.. சுர்ரென்று ஏறிய முத்தபோதையில் கிர்ரென்று கிறங்கிப் போயிருந்தான்..!! அந்த கிறக்கத்துடனே..

“லா..லாஸ்ட் ஸீன்.. இ..இன்னும் மிச்சம் இருக்கு மீரா..” என்று திணறலாக சொன்னான்.

“நீ வாடி செல்லம்.. நான் உனக்கு லாஸ்ட் ஸீன் காட்டுறேன்..!!”

குறும்பாக சொன்ன மீரா.. அப்படியே அசோக்கின் மீது சாய்ந்தாள்..!! பேலன்ஸ் இழந்த அசோக் பொத்தென்று மெத்தை மீது வீழ்ந்தான்.. அவன் கூடவே சரிந்த மீரா அவன் மீதே வீழ்ந்தாள்..!! வீழ்ந்த வேகத்தில் அவளது மார்புக்கலசங்கள் ரெண்டும்.. அசோக்கின் நெஞ்சில் சென்று நச்சென்று மோதின.. மெத்தென்று இருந்தது அவனுக்கு..!! சுருக்கென்று ஒரு அதிர்வலை அவனது நாடிநரம்பெல்லாம் பாய்ந்து.. படக்கென அவனுடைய ஆண்மையை விழித்தெழ செய்தது..!! அவ்வாறு எழுந்த ஆண்மையை அவன்மீது படர்ந்திருந்த மீராவின் பெண்மை அழுத்தி அடக்கியது..!!

அசோக் அணிந்திருந்த சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் விடுபட்டுப் போயிருக்க.. அதன் வழியே அவனது இடதுபுற மார்புக்காம்பு பழுப்பு நிறத்தில் பளிச்சென வெளித்தெரிந்தது.. மீராவுடைய கவனமும் அந்தக் காம்பிலேதான் நிலைத்திருந்தது.. தனது உதட்டாலே அந்த மார்புக்காம்பினை குறிபார்த்தாள்..!!

“ஹேய்.. நம்ம படத்துக்கு டைட்டில் டிஸைட் பண்ணியாச்சு தெரியுமா..??” அசோக் இன்னும் ஸ்க்ரிப்ட் நினைவாகவே இருந்தான்.

“என்ன டைட்டில்..?? ஆயிரம் உதைவாங்கிய அசோக்கு சிந்தாமணியா..??” மீராவிடமும் கேலி குறையவில்லை.

“ச்சேச்சே.. அ..அப்டிலாமா பேர் வைப்பாங்க..?? இது ஆக்சுவலா நானே..” அசோக் திணறலாக சொல்ல,

“ப்ச்.. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இருக்கியா..??” அவனுடைய தொடையை தனது தொடையால் அழுத்தி நசுக்கிக்கொண்டே மீரா சொன்னாள்.

“இதை மட்டும் சொல்லிக்கி..”

அசோக் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. மீரா தான் குறிவைத்ததை தனது உதடுகளால் கவ்வியிருந்தாள்.. அவனது மார்புக்காம்பினை அவ்வுதடுகளால் அழுத்தமாக மூடி, சர்ரென உறிஞ்சினாள்..!! அவ்வளவுதான்.. அசோக் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான்.. சப்தமே எழுப்பாமல் மீராவுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தான்..!! அவனது இடது கை.. மீராவின் இடுப்பை விட்டு கீழிறங்கி.. அவளது பின்புறத்தை தடவியது..!! அவனது இன்னொரு கை.. மீராவின் இடுப்புக்கு மேலே சென்று.. அவளது ஒருபக்க மார்பினை பற்றிக் கொண்டது..!! இதயத்தால் ஒன்றிணைந்த இருவரும்.. இப்போது தங்களது உடல்களையும் ஒன்றிணைக்கிற உத்வேகத்தில்.. அதற்கான செயல்முறையில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர்..!!

மரமேஜையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அசோக்கின் லேப்டாப்.. இன்னும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக்கொண்டிருந்தது..!! திரையில் காட்சியளித்த அவன் எழுதிக்கொண்டிருந்த ஸ்க்ரிப்டின் உச்சியில்.. பச்சை நிறத்தில் அந்த டைட்டில் அட்டகாசமாய் பளிச்சிட்டது..!!

“அன்புள்ள ராட்சசி..!!”

7 Comments

  1. Good story boss ???????

    ??????????????

  2. Romba nalla kathai?? I loved it,
    Entha mathiri stories la enno naraiya podunga please? super ah eruku??..

  3. It’s a wonderful very nice to your story. I need more love story from you. Thanks

  4. Its not a sex story. Its beautiful awesome love story which melted me so much. I can’t believe that this story ended. I appreciate your work and please continue this story or new love story.

  5. கதை அருமை.

  6. super feeling ?

Comments are closed.