எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி End 90

“என்னது..???” அசோக் வெலவெலத்து போனான்.

“பின்ன என்ன..?? உன்னோட டர்ட்டி ஆசையலாம்.. இந்த மாதிரி படமா எடுத்து தீத்துக்கலாம்னு பாக்குறியா.. பிச்சுப்புடுவேன் பிச்சு..!!!”

“ஐயையே.. இதுல என் ஆசைலாம் எதுவும் இல்ல மீரா.. எல்லாம் ப்ரொட்யூசரோட விருப்பம்..!!”

“அந்தாளுக்கும் செருப்பு பிஞ்சுடும்னு சொல்லி வையி..!! என் ஸ்டோரியை படமா எடுத்து காசு சம்பாதிக்கப் போறீங்க.. எந்த டேமெஜும் பண்ணாம உள்ளதை உள்ளபடி எடுக்கணும் சொல்லிப்புட்டேன்..!!”

“என்ன மீரா..??” அசோக் உடனடியாய் குழைய,

“என்ன.. நொன்ன மீரா..??” மீரா எரிச்சலாக சொன்னாள்.

அப்போதுதான்.. ‘ஆஆஆவ்வ்வ்..’ என்று பக்கத்து அறையில் இருந்து சங்கீதா எழுப்பிய சத்தம்.. இந்த அறைக்குள் சன்னமாக ஒலித்தது..!! அந்த சத்தத்தில் இருவரும் கவனம் கலைந்து போனார்கள்..!! அந்த சத்தத்தின் அர்த்தத்தை மீரா உடனடியாய் புரிந்துகொண்டாள்.. அசோக்குக்குத்தான் அதன் அர்த்தமும் புரியவில்லை.. அதை எழுப்பியவள் தன் தங்கைதான் என்பதும் புரியவில்லை..!!

“என்னமோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததுல..??” என்றவாறு ஜன்னல் கதவை திறந்து வெளியே எட்டி எட்டி பார்த்தான்.

“ப்ச்.. ஒன்னும் இல்லடா.. விடு..!!” மீரா அதட்டியதும்தான் தேடுவதை கைவிட்டு திரும்பினான். அவன் திரும்பவும்,

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்….!!” திடீரென நீளமாக பெருமூச்சு விட்டாள் மீரா.

“என்னாச்சு… ஏன் பெருமூச்சு..??” அசோக் புரியாமல் கேட்டான்.

“என்னதான் இருந்தாலும்.. சங்கி குடுத்து வச்சவதான்..!!” மீரா குறும்பாக சொன்னாள்.

“ஹாஹா..!! சங்கி மட்டுமா.. கிஷோரும் குடுத்து வச்சவன்தான்..!! என் தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு கெடைக்க.. அவன் நெஜமாவே ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!” அசோக் அப்பாவியாக சொல்ல, மீரா கடுப்பானாள்.

“அடச்சீ.. தத்திலயும் தத்தி, உன்னை மாதிரி தட்டுக்கெட்ட தத்திய நான் பாத்ததே இல்ல..!!”

“ஒய்.. எதுக்கு இப்போ திட்டுற..?? நான் ஒன்னும் தத்திலாம் இல்ல..!!”

“ம்க்கும்..!! லட்டு மாதிரி நான் இங்க ஒருத்தி உக்காந்திருக்கேன்.. நீ நைட் லேம்போட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குற.. உன்னை தத்தின்னு சொல்லாம வேற என்ன சொல்றது..??”

மீரா அவ்வாறு சொன்னதும், அசோக் இப்போது சற்றே நிதானித்தான்.. அவனுடைய முகத்தில் பட்டென ஒரு காதல் உணர்வு.. மீராவின் முகத்தை ஏறிட்டு, ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

“ஹ்ம்ம்.. என்ன பண்ண சொல்ற..?? எனக்கு மட்டும் ஆசை இல்லையா..?? அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா..?? நீதான் வீட்டுக்கு தூரம்னு ஓரமா போய் உக்காந்துக்கிட்ட..!! நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!!”

“என்ன சொன்ன.. என்ன சொன்ன..??”

“அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள..”

“அது இல்ல.. லாஸ்டா என்ன சொன்ன..??”

“நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்னு சொன்னேன்..!!”

“இன்னொரு தடவை சொல்லு..!!”

“நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!! எதுக்கு திரும்ப திரும்ப அதையே சொல்ல சொல்ற..??”

“நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..??”

“என்ன அர்த்தம்..??”

“ம்ம்..??? மூணு நாள் முடிஞ்சு போச்சுடா முண்டம்னு அர்த்தம்..!!”

அவ்வளவுதான்.. பல்பு போட்ட மாதிரி அசோக்கின் முகம் பட்டென பிரகாசமானது.. ‘வாவ்’ என்று வாயை திறந்தான்.. படக்கென சேரில் இருந்து எழுந்தான்..!! உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தவனாக,

“மீராஆஆ..!!” என்று உற்சாகமாக கத்தினான்.

“ம்ம்..!!” மீராவுக்கோ உடனடியாய் ஒரு வெட்கம். அவளும் மெத்தையில் இருந்து எழுந்துகொண்டாள்.

“அப்படினா.. இன்னைக்கு உண்டா..??”

“ஆ..ஆமாம்..!!”

“இன்னைக்குத்தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டா…??”

“யெஸ்..!! நான் ரெடியாகி உக்காந்திருக்குறதை பாத்தாலே உனக்கு புரியலையா..??”

7 Comments

  1. Good story boss ???????

    ??????????????

  2. Romba nalla kathai?? I loved it,
    Entha mathiri stories la enno naraiya podunga please? super ah eruku??..

  3. It’s a wonderful very nice to your story. I need more love story from you. Thanks

  4. Its not a sex story. Its beautiful awesome love story which melted me so much. I can’t believe that this story ended. I appreciate your work and please continue this story or new love story.

  5. கதை அருமை.

  6. super feeling ?

Comments are closed.