எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி End 90

மல்லிகை மலர்கள் தூவிய மஞ்சத்தில்.. மதமதப்புடன் வீற்றிருந்த மீரா பார்வைக்கு வந்தாள்..!! மஞ்சள் நிறத்தில் புடவையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.. கழுத்திலும், காதிலும், கைகளிலும் பொன் நகைகள்..!! கூந்தல் நீளமாக பின்னப்பட்டு.. இறுதியில் குஞ்சம் சேர்க்கப்பட்டிருந்தது..!! மெத்தையில் உதிரியாய் சிதறிக்கிடந்த மல்லிகை.. அவளது கூந்தலில் கொத்துக் கொத்தாய்.. சரம் சரமாய்..!! பக்கவாட்டில் இருந்த மின்விசிறி காற்றெழுப்ப.. அந்தக்காற்றுக்கு அவளுடைய புடவை மேற்கிளம்பி.. ஒற்றைப்பக்க மார்பினையும், வளைவுகுழைவான இடுப்பினையும்.. வஞ்சனையில்லாமல் வெளிக்காட்டியது.. புடவையை இறக்கி தொப்புள் தெரிய கட்டியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது..!! அழகுற வீற்றிருந்தவள்.. அவ்வப்போது பக்கவாட்டில் திரும்பி எரிச்சலாக பார்த்தாள்..!!

அவளுடைய பார்வை சென்ற இடத்தில்.. ஒரு பிரம்பு நாற்காலியில் அசோக் அமர்ந்திருந்தான்.. அவன் முன்பாக இருந்த மரமேஜையில் அவனுடைய லேப்டாப் விரித்து வைக்கப்பட்டிருந்தது.. இரவு விளக்கு குனிந்து ஒளி கிளப்பிக் கொண்டிருந்தது..!! அசோக் தனது இமைகளை மூடியிருந்தான்.. தலையை 45 டிக்ரி கோணத்திற்கு டேப்பராக திருப்பியிருந்தான்.. ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன் போல காணப்பட்டான்..!! உதட்டை அசைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.. உடலை அவ்வப்போது வெடுக்வெடுக்கென சிலிர்த்துக் கொண்டான்..!! வெட்கத்தில் சிவந்தும் பூரித்தும் போன முகத்துடன்.. தனக்கு முன்பிருந்த இரவு விளக்கை இரு கையாளும் அணைத்துக்கொண்டு.. உதடுகள் குவித்து அந்த விளக்கின் தலையில் முத்தமும் வைத்தான்..!!

அவ்வளவு நேரமும் அவனையே கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்த மீரா.. இப்போது பொறுமை இழந்து போனாள்..!! தனது தலையில் சூடியிருந்த மல்லிகைச்சரத்தில்.. கொஞ்சமாய் ஒரு கொத்தை பிய்த்து.. அசோக்கை நோக்கி சரக்கென விட்டெறிந்தாள்..!! அந்த மல்லிகை கொத்தும்.. அவனது முகத்தை சென்று ‘சத்’தென்று அறைந்தது..!! அசோக் உடனே உறக்கத்தில் இருந்து விழித்தவன் போல.. படக்கென தனது இமைகள் திறந்தான்.. பக்கவாட்டில் திரும்பி மீராவை முறைத்தான்..!!

“ஏய்..!!”

“என்னடா பண்ணிட்டு இருக்குற.. லூஸு..!!” மீரா எரிச்சலாக கேட்டாள்.

“ஸீன் யோசிச்சுட்டு இருக்கேன்டி.. டிஸ்டர்ப் பண்ணாத..!!”

“ஸ்க்ரிப்ட் எல்லாம் பக்காவா ரெடின்னு சொன்ன.. இன்னும் என்ன ஸீன் யோசிக்கிற நீ..??”

“ஹஹ.. இது ஃபைனல் ஸீன்..!! லாஸ்ட்டா.. அப்டியே ரொமாண்டிக்கா.. ஒரே கிளுகிளுப்பா.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஸீன்..!! அதைத்தான் அப்டியே இன்வால்வ் ஆகி யோசிச்சுட்டு இருக்கேன்..!!” அசோக் இளிப்புடன் சொன்னான்.

“ஓஹோ..??” மீராவின் முறைப்பு மேலும் கடுமையானது.

“ஆக்சுவலா.. நாம ஆலப்பே வந்ததுக்கு காரணமே அதுதான் மீரா..!! இதே மாதிரி ஒரு நைட் எஃபக்ட்ல.. இதே மாதிரி ஒரு போட்-ஹவுஸ்லதான்.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நான் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணிருக்கேன்..!! ஆலப்பேலதான் அந்த ஸீன் ஷூட் பண்ணப்போறோம்.. நாம இங்க லொகேஷன் பாக்க வந்ததே அதுக்குத்தான்..!!”

“ஒய்.. என்ன.. லொகேஷன் பாக்க வந்தோம்னு எங்களையும் உங்க கூட சேர்த்துக்குற..?? நாங்கல்லாம் இங்க லொகேஷன் பாக்க வரல..!!”

“சரி விடு.. தெரியாம சொல்லிட்டேன்..!!”

“ச்சை.. சரியான கஞ்சப் பிசினாரிங்கடா ரெண்டு பேரும்..!!”

“யாரை சொல்ற..??”

“உன்னையும் கிஷோரையும்தான்..!!”

“ஏன்..??”

“பின்ன என்ன..?? ஹனிமூனுக்கு செலவாகும்னு.. ப்ரொட்யூசர் காசுல.. லொகேஷன் பாக்கப் போறோம்ன்ற பேர்ல.. ஹனிமூன் காசை மிச்சம் பண்ணிட்டிங்கல்ல ரெண்டு பேரும்..??”

“ஹாஹா.. இதைத்தான் தமிழ்ல ‘புத்தியுள்ளவன் பலவான்’ன்னு சொல்வாங்க மீரா..!!”

“ம்ம்..?? இதைத்தான் தெலுங்குல தெங்கனா கொடுக்கான்னு சொல்வாங்க..!!”

“தெங்கனாவா..?? தெலுங்கானா தெரியும்.. அதென்னா தெங்கனா..??”

7 Comments

  1. Good story boss ???????

    ??????????????

  2. Romba nalla kathai?? I loved it,
    Entha mathiri stories la enno naraiya podunga please? super ah eruku??..

  3. It’s a wonderful very nice to your story. I need more love story from you. Thanks

  4. Its not a sex story. Its beautiful awesome love story which melted me so much. I can’t believe that this story ended. I appreciate your work and please continue this story or new love story.

  5. கதை அருமை.

  6. super feeling ?

Comments are closed.