இந்த வீட்டின் உரிமையாளர் 7 92

நவீன் அவன் பர்சை எடுத்து அதில் வைத்திருந்த இருவரும் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படத்தை எடுத்து நித்தியாவிடம் குடுக்க நித்தியா அதை ரெண்டு நிமிடம் பார்க்கும் போதே அவள் மனதில் பழைய இனிய நினைவுகள் தூறல் அவள் எண்ணத்தை நனைக்க இருந்தாலும் முழு நம்பிக்கை ஏற்படாமல் இல்ல தயவு போய்விடுங்கள் என்று உறுதியாக சொல்ல அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த வக்கீல் நித்தியா மேடம் ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கறீங்க அந்த சமயம் நான் நந்தி மாதிரி நடுவே வர வேண்டிய சூழல் என்று சொல்லி விட்டு நவீனிடம் என்ன சார் பேசிட்டீங்களா நீங்க நினைத்த மாதிரி உங்க பழைய மனைவி கிடைத்தாங்களா என்று கேட்க நித்தியாவுக்கு வக்கீல் பேசியதற்கு பிறகு தான் ஒரு வேளை அது என் நவீன் தானோ என்ற சந்தேகம் வலுவடைந்தது.

அதே சமயம் வக்கீல் எதையோ மறந்து வைத்து விட்டு வந்ததை போல பேசி சென்று எடுத்து வருகிறேன் என்று கிளம்பினார். மீண்டும் நித்தியாவும் நவீனும் தனிமையில். ஆனால் நித்தியா நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இல்லாமல் வக்கீல் சென்றதும் வாசல் கதவை தாழிட்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் நவீனை பார்த்து எதுக்கு நிக்கறீங்க உட்காருங்கோ என்றாள். நவீன் நித்தியாவின் முழு சம்மதமாக கருதி கொண்டு ரெண்டு பேரும் உட்கார்ந்தே பேசலாம் என்று நித்தியாவின் கையை பிடித்து அவன் பக்கத்தில் உட்கார வைத்தான். முதல் ஆணின் ஸ்பரிசம் எந்த பெண்ணிற்கும் அவள் இறக்கும் வரை தனியாக தான் தெரியும் நவீன் கை அவள் கை மேல் பட்டதும் உடல் சிலிர்த்து கொண்டு நவீன் அருகே ஆனால் உடல்கள் படாமல் உட்கார்ந்தாள். உட்கார்ந்த பிறகும் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை. நித்தியா தான் பேச்சை ஆரம்பித்தாள்.

என்ன கோலம் இது பிச்சைகாரன் போல தாடி மீசை எல்லாம் வழிக்காமல் இருக்கீங்க என்று கேட்க நவீன் நான் ஷேவ் செய்வதே உனக்காகத்தான் நீயே இத்தனை நாள் என்னை விட்டு பிரிந்து வாழ்கிறாய் என்ற நிலையில் இது பற்றி எல்லாம் யோசிக்க நேரம் இல்லை மனசும் இல்லை என்றான். நித்தியா அவன் சொன்னதை ஓரளவு நம்பத்தான் செய்தாள் ஆனால் அதை காட்டி கொள்ளாமல் இப்போவும் பொய் தானா உங்களுக்கு குடிப்பதற்கு நேரம் இருந்து இருக்காது அது தான் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

2 Comments

  1. Continue mannichidunga ram story

Comments are closed.