கிரிஜா சோனாலி 3 27

தனக்கு ஏற்பட்டிருந்த கதிக்கு, அவள் காரணமின்றி ஸ்ரீதரையே கடிந்து கொண்டிருந்தாள். அவன் ஒரு வழியாகத் திரும்பி வந்து விட்டிருந்தான். அலுவலகத்துக்கு வந்தவன், நேராக அவளது மேஜையை நோக்கி வந்து,”ஹலோ!” என்று புன்னகைத்தபோது கிரிஜாவுக்கு உள்ளுக்குள் மத்தாப்பு கொளுத்தியது போலிருந்தது. “என்னோட ஃபைல்ஸ் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி!”

அவளது கையை அவன் குலுக்கியபோது நீண்டநேரம் அழுத்திப்பிடித்ததோடு, அவளது கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தான். அவன் அடுத்து அவளிடம் நீட்டியது ஒரு சிறிய நகைப்பெட்டி. அதை அவனே திறந்து காட்டியபோது, ஒரே ஒரு கல் வைத்திருந்த மிகமிக மெல்லிய தங்கச்சங்கிலி இருந்தது.

“தே..தேங்க் யூ!” அவள் திணறினாள்.

“இன்னும் நிறைய பரிசு கொடுக்கணுமுன்னு ஆசையிருக்கு,” என்று கண் சிமிட்டினான் ஸ்ரீதர். “ஆனா, அதையெல்லாம் ஆஃபீஸ்லே கொடுக்க முடியாதே!”

அந்த வாரம் முழுவதும் ஸ்ரீதர் அவளைப் பார்க்கும்போதெல்லாம் கைகுலுக்கிக் கொண்டேயிருந்தான். ஓரிரெண்டு முறை அவளோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை எங்காவது வரச்சொல்லி அழைப்பானென்று கிரிஜா ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் ஸ்ரீதரிடமிருந்து ஃபோன் வராதா என்று ஏங்கினாள். ஆனால், இவற்றில் எதுவுமே நடக்காமல் போகவே அவள் ஏமாற்றமடைந்து கொண்டிருந்தாள். அவன் இனி அவளை அழைக்கப்போவதில்லை. அவனது வேலை முடிந்து விட்டது. இனி ஏன் அழைக்கப்போகிறான்?

ஒரு வாரப்பத்திரிகையில் ஒரு மாடலின் பிறந்தநாள் விழா ஆல்பத்தில் அவளோடு ஸ்ரீதர் இருந்த புகைப்படத்தைப் போட்டிருந்தார்கள். அவள் கடந்த ஆண்டு திருமணமாகி, வரதட்சிணைக்கொடுமை, மாமானார் இம்சை என்று பத்திரிகைகள் அல்லோலகல்லோலப்படுத்தி, ஆறு மாதங்களிலேயே தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண் என்று கிரிஜா அறிந்திருந்தாள். ஒரு வேளை ஸ்ரீதரும், அந்த மாடலும் திருமணம் செய்து கொண்டு……? சே!

பத்திரிகையை எறிந்து விட்டு கிரிஜா சோனாலியைப் பார்க்கக் கிளம்பியிருந்தாள். அப்போது தான் சோனாலி பார்ட்டிக்குத் தயாராகிக் கிளம்பிக்கொண்டிருந்தவள் கிரிஜாவையும் உடன் வருமாறு அழைத்தாள். அது எப்படிப்பட்ட பார்ட்டியாக இருக்கும் என்று சோனாலி உடைத்தே சொல்லியிருந்தாள். ஒரு வேளை, ஸ்ரீதருக்காகக் காத்திருந்து ஏமாந்திருந்த கிரிஜாவுக்கு,’நீ இல்லாட்டி என்ன, இந்த ஊரிலே வேறே ஆம்பிளைங்களா இல்லை?’ என்று ஒரு அசட்டுத்துணிச்சல் ஏற்பட்டிருந்தது தான் காரணமோ? ஒன்றுமில்லாவிட்டாலும் அன்றைய பொழுது இனிமையாகவாவது கழியுமே என்று யோசித்தவளுக்கு, கண்டிப்பாகத் தன்னை எவனாவது ஒருவன் ஓத்தே தீருவான் என்பது புரிந்திருக்கவில்லை.

ஆனால், எவனுக்கும் தன் உடலைக் கொடுக்க அவள் விரும்பியிருக்கவில்லை. பார்ட்டிக்குப் போவது, வெறும் புன்னகை, அதிகபட்சம் கைகுலுக்கல்களோடு அங்கே நடப்பதைக் கண்காணிப்பது, பிறகு வீடு திரும்பி உறங்கி விடுவது – இவை தான் அவளது ஆரம்பத் திட்டமாக இருந்தது. ஆனால், இப்போதோ அவள் சந்திரசேகரின் பிடியில்….!