என் புள்ளை அந்த செல்வாவுக்கு எந்தவிதத்துல கொறைஞ்சுப் போயிட்டான்..? என் புள்ளை அந்த செல்வாவை விட கொஞ்சம் நிறத்துல மட்டுதான்… என்னைவிட நெறம் கம்மியா இருந்த என் புருஷனை என் தலையில வலுக்கட்டாயமா கட்டிவெச்சாங்க… ஆரம்பத்துல நான் இதை மனசுல வெச்சிக்கிட்டு, மொரண்டிக்கிட்டுத்தான் இருந்தேன்… அப்புறம் என் புருஷன் குணத்தைப் பாக்க பாக்க என் மனசு மாறிடலயா? ஆயிரம் ஆசை என் மனசுல ஒரு காலத்துல இருந்ததென்னவோ உண்மைதான்… இப்ப என் புருஷன் மூஞ்சி கொஞ்சம் சுருங்கினாலும், என் மனசு நொந்து போய் துடிக்கலையா?
என் புள்ளை ஏதோ கோபத்துல, மூர்க்கனாட்டாம், என்னமோ தப்பா, சுகன்யாவைப் பத்தி அன்னைக்கு பேசிட்டான். யாருமே, காரணமில்லாம ஒரு பொண்ணை தப்பா பேசக்கூடாது. அதை நான் ஒத்துக்கறேன்.
சம்பத்து தப்பு பண்ணான்னு தெரிஞ்சதும், என் மனசு தாங்காம, நானே பளார்ன்னு அவன் கன்னத்துல ஒரு அறை வுட்டேன். என் புள்ளை என்னை எதுத்துப் பேசாம நான் கொடுத்த அடியை வாங்கிக்கிட்டு சும்மாதானே இருக்கான். இப்ப சுகன்யாவை தப்பா பேசிட்டமேன்னு மனசுக்குள்ளவே என் புள்ளை மாய்ஞ்சு மாய்ஞ்சு போறான்.
மூணு மாசமா என் புருஷங்கிட்ட நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன்… எங்க மாமா சிவதாணுவை போய் ஒண்ணுக்கு ரெண்டு தரமா, பாத்து பேசுங்க; சுகன்யாவை நம்ம சம்பத்துக்கு கேளுங்கன்னு; இந்த மனுஷன் என் பேச்சைக் கேட்டாரா? ம்ம்ம்… அப்படி கேட்டு இருந்தா இன்னைக்கு நான் ஏன் இப்படி பைத்தியக்காரி மாதிரி மனசுக்குள்ளவே எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு புழுங்கணும்?
Pothum story vera story podunga
Kathai endi sonuga ya
Vera kathai sonnga pls