மூன்று ரோஜாக்கள் 6 38

மது இந்த FUNCTION க்கு அனிதா,சித்தப்பா, மற்றும் தன் கூட வேலை செய்யும் கணபதியை அழைத்து இருந்தாள்.

அனிதா மதுவுக்கு உதவியாக கிச்சனில் சென்று சமையலை கவனிக்க,அங்கு VEG PALAV , பூரி சென்னா,மற்றும் பல வகைகள் READY ஆகி கொண்டு இருந்தது.

கணபதியோ ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்து கொண்டு இருந்தான்.

நன்கு கழுவி காய வைத்து இருந்த செயற்கை பூக்களை இரண்டு பூச்சாடிகளில் அழகாக அடுக்கி விட்டு ,சற்று தள்ளி நின்று ,எப்படி இருக்கிறது என்று மது ஆராய,

உணவு பதார்த்தங்களை மேஜையில் கொண்டு வந்து வைத்த அனிதாவை பார்த்து ” அனிதா இது நன்றாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு போ” என்று அழைத்தாள்.

எல்லாம் நன்றாக தான் இருக்கிறது , முக்கிய வேலையாக இருக்கும் அனிதாவை கூப்பிட்டு இடைஞ்சல் பண்ணாதே ! நீ போய் உன் வேலையை ஒழுங்காக முடி என்றான் கணபதி

முக்கிய வேலையா,அடடா என்று திரும்பி பார்க்க ,அங்கு கணபதி கும்பகர்ணன் வேட்டை நடத்தி கொண்டு இருக்க ,அவனை பார்த்து கேலியாக ” உனக்கு முக்கியமான ஒன்று என்றால் அது சாப்பாடாக தானே இருக்க முடியும் ” என்று சிரிக்க மீண்டும் அனிதா இங்கே வந்து அபிப்ராயம் சொல்லி விட்டு போ என்று அழைத்தாள்.

” பிரமாதமாக இருக்கு மது,JUST செயற்கை பூக்களை கொண்டே மாயம் செய்து விடுகிறாய்.இதெல்லாம் நிஜ பூக்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்,மேலும் நான் முகப்பேர் போகும் வழியில் விதவிதமான நிஜ பூக்கள் விற்பவர்களை பார்த்து இருக்கிறேன்”

“ஆமாம் ,அங்கே பக்கத்தில் தலப்பகட்டி தோசை கடை என்று ஒன்று உள்ளது.அங்கே VARIETY VARIETY ஆக தோசை கிடைக்கும்” என்று கணபதி கூற

“இவனுக்கு சாப்பாட்டை தவிர வேறு எதுவும் தெரியாது “என்று மது கூற இருவரும் சிரித்தார்கள்.

மது – கொஞ்சம் பார்த்துக்க அனிதா நான் குளித்து விட்டு வந்து விடுகிறேன்.

உள்ளே சென்று குளித்து விட்டு பட்டு புடவை அணிந்து கொண்டு தேவதை போல் வர,

கணபதி – மது உன் புருஷன் வந்தா ,உன்னை பார்த்து மயக்கம் போட்டு விழ போறான்.

மது – ச்சீ போடா

பின் நேரம் ஆவதை தெரிந்து மது அசோக்கிற்கு ஃபோன் போட,அவன் அழைப்பை ஏற்கவில்லை .

மது – சரி நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க ,

கணபதி தான் சாப்பிட்டு விட்டு பார்சலும் கட்டி கொண்டு புறப்பட ,

மது அனிதாவை பார்த்து ,”அனிதா இன்று இரவு மட்டும் என் குழந்தையை சேர்த்து பார்த்து கொள்,சித்தப்பா அனிதாவை பார்த்து பத்திரமாக கூட்டி போங்க நாளை காலை வந்து குழந்தையை எடுதுக்கிறன்” என்று கூற

சரியென்று புரிந்து கொண்ட அனிதா சிரிப்புடன் , “என்ன கணவனுடன் தனியாக TIME SPEND பண்ணனுமா ?”

மது வெட்கத்துடன் “ஆம் ”

BOOK பண்ணி இருந்த CAB இல் மதுவின் சித்தப்பாவுடன் ஆசிரமம் செல்ல APARTMENT வாசலை கடந்த பொழுது எதிரே ஒரு ஆடி கார் வேகமாக உள்ளே நுழைந்தது.

மது தன் கணவனின் வருகைக்காக காத்து இருந்த பொழுது அவளின் செல்ஃபோன் சிணுங்கியது.

மது – ஹலோ

மறுமுனையில் அசோக் – SORRY மது,இன்று என்னால் வரமுடியாது.

கோபமான மது – ஏன்?

அசோக் – இல்ல மது ,ஒரு IMPORTANT விசயம் , ஃப்ரெண்ட்ஸ் கூட பாண்டிச்சேரி வரை போக வேண்டி இருக்கு

மது – அசோக் விளையாடாத ,இன்று நமக்கு 3 rd anniversary

அசோக் – தெரியும் மது,அது தான் வருஷா வருஷம் வருதே,அடுத்த வருஷம் சிறப்பா கொண்டாடிக்கலாம்
என்று போனை வைத்து விட்டான்.

மது விரக்தியில் சோகமான அந்த நேரம் காலிங் பெல் அழைக்கும் ஓசை கேட்டு, தன் கணவன் தன்னிடம் விளையாடுகிறார் என்று ஒடிசென்று ஆவலாக கதவை திறக்க

ஒரு முரட்டு கரம் அவளை பின் தள்ளி உள்ளே வந்து தாளிட்டது.

அவனை பார்த்த மது அதிர்ச்சியாகி ,நீயா……….. என்று கூறினாள்.

அந்த முரட்டு கரத்திற்கு சொந்தக்காரன் யார் என்று படிக்கும் அனைத்து வாசகர்களுக்கு தெரியும்.

ஆம்பூர் பிரியாணி உளுந்துர் பேட்டையில் உள்ள நாய்க்கு தான் கிடைக்கணும் என்று விதி இருந்தால் என்ன பண்றது .

அசோக் “டேய் என்னை எதுக்குடா என் மனைவியிடம் பாண்டிச்சேரி போக போறேன் என்று பொய் சொல்ல சொன்னீங்க ”

அதற்கு ஷெட்டியின் அடியாள் ,” அதெல்லாம் எனக்கு தெரியாது உன்னை காலை வரை இங்கே வைத்து இருக்க உத்தரவு”

அசோக் ” டேய் இன்று எங்களுக்கு கல்யாண நாள் விட்டு விடுங்கடா”

” அப்படியே விட்டு விட்டாலும் போய் உடனே பொண்டாட்டியை சந்தோஷப்படுத்தி விடுவாரு பாரு,இங்கே உனக்கு வேண்டியது எல்லாம் எங்க முதலாளி செய்ஞ்சு கொடுக்க சொல்லி இருக்காரு,எதாவது எகத்தாளம் பண்ண உன் எலும்பையும் உடைக்க சொல்லி இருக்காரு”

அசோக் – ” சரி எதுக்கு தான் என்னை பிடிச்சு வைச்சு இருக்கீங்க ,அதையாவது சொல்லி தொலைங்க”

1 Comment

  1. Next part send me

Comments are closed.