காலை 5.30 மணி ,வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை முடித்து கொண்டு சென்னை Central rail நிலையத்தை வந்து அடைந்தது.
இறங்கிய பயணிகளில் பல பேர் களைப்பாகவும் ,இரயில் ஏறுவதற்கு சென்ற பயணிகள் சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.
இறங்கிய அந்த கூட்டத்தில் இரு பேரழகிகள் அழகு ஒரு கணம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அது வேறு யாரும் அல்ல,இந்த கதையின் நாயகி அனிதா மற்றும் ரெயிலில் அறிமுகம் ஆன புது தோழி மது.
ரயிலில் ஏறிய அனிதாவின் நிலையை கண்டு தானாக உதவ மது முன் வந்து இருந்தாள்.
அனிதா ஒரு டாக்டர் என்பதும்,அவளை ஒரு ரவுடி தாலி கட்டி பலவந்தபடுத்தி கற்பழித்ததாகவும் ,அவனிடம் இருந்து தப்பி ஓடி வருவதாகவும் கூறினாள்.
மது ஒரு கோட்டிஸ்வர குடும்பத்தில் பிறந்து செல்வ செழிப்புடன் வளர்ந்து தற்பொழுது அவள் காதலித்த அசோக் என்பவனை மணமுடித்து இருந்தாள்.மதுவின் குடும்பத்திற்கு அவள் ஒரே வாரிசு.
அசோக் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன்.இதனால் அவள் அப்பா சம்மதத்திற்கு எதிராக திருமணம் செய்ய வேண்டியதாகி விட்டது.
மது மற்றும் அசோக் IT துறையில் பணிபுரிபவர்கள் .இருவருக்கும் நல்ல சம்பளம்.ஆனால் மதுவுக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் அவர் அப்பா என்றால் மிகவும் பிரியம்.குழந்தை பிறந்தால் அப்பா தங்களை ஏற்று கொள்வார் என்று நம்பிக்கையுடன் காத்து இருந்தாள்.
ஆனால் விதி கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.
மதுவின் தந்தை வெங்கட்ராகவன் பல சொத்துகளுக்கு அதிபதி.அவர் செய்யும் பல தொழில்களில் ஹாஸ்பிடல் துறையும் ஒன்று.அவர் MADHU MEDICAL FOUNDATION என்ற பல்நோக்கு மருத்துவமனையை அம்பத்தூரில் நடத்தி வருகிறார்.
இதனால் அங்கு இருந்த HR மூலமாக பேசி அனிதாவிற்கு வேலை ஏற்பாடு செய்வது சுலபமாக இருந்தது.
மேலும் மதுவின் சித்தப்பா அனாதை ஆசிரமம் ஒன்று திருமுல்லைவாயில் அருகே நடத்தி வந்தார்.
வேலை செய்யவிருக்கும் இடமும் ஆசிரமமும் அருகே இருப்பதால் அனிதாவை அங்கு தங்க வைக்க இருவரும் அங்கே சென்றனர்.
இப்பொழுது அனிதாவுக்கு வேலையும் தங்குவதற்கு இடமும் அறிமுகம் இல்லாத இடத்தில் கிடைப்பதால் சற்று நிம்மதியாக இருந்தாள்.
ஆனால் அனிதாவுக்கு உதவி செய்த மதுவுக்கு ஷெட்டி மூலமாக ஆபத்து வரபோகிறது என இருவரும் அறியவில்லை.
ஷெட்டி தன்னுடைய வீட்டில் வேலையாட்களிடம் மோசமாக கத்தி கொண்டு இருந்தான் .
டேய் நீங்க அனைவரும் என்ன செய்வீங்க என்று எனக்கு தெரியாது,எனக்கு அனிதா வேணும்.போய் எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடித்து வாருங்கள் என்று குரைத்தான்.
ஊர் முழுக்க அவன் ஆட்கள் தேடிய பிறகு கடைசியில் அவள் இரயில் நிலையம் வந்து West coast rail 1 ac class compartment இல் ஏறியதை பார்த்ததாக அங்கு இரயில்வே ஊழியர் மூலமாக தகவல் கிடைத்தது.
ஒருநாள் காத்திருப்புக்கு பின் அந்த ட்ரெயின் TTR ஐ பிடித்து ஷெட்டியின் முன்பு நிறுத்தினார்கள்
ஷெட்டி அவனை நோக்கி இந்த பெண் நேற்று இந்த ரெயிலில் வந்து ஏறினாளா?
அவள் PHOTO வை பார்த்த அவன்,ஆமாம் SIR நேற்று அவசரமாக வந்து ஏறினார்கள்.அவளிடம் TICKET கூட இல்லை.அப்புறம் அங்கு இருந்த மது மற்றொரு என்ற பெண் தான் இவளுக்கு டிக்கெட் எடுத்தார் என கூறினான்.
