பிரம்மா இந்திரஜித் முன்பு பிரசன்னமாகி
“இந்திரஜித் உன் கண்களை திற ”
இந்திரஜித் கண்களை திறந்து மகிழ்ச்சியாக
” இந்த சிருஷ்டியை படைத்த பிரம்ம தேவருக்கு என் பணிவான வணக்கங்கள் ”
“உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் ”
“பிரம்ம தேவரே எனக்கு சாகா வரம் வேண்டும் ”
“இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் கண்டிப்பாக இறப்பு என்பது நிச்சயம்.ஏன் நான் வணங்கும் விஷ்ணுவுக்கு கூட இறப்பு என்பது நிச்சயம் .நீ பிறப்பு இறப்பு அற்ற நிலைக்கு முக்தி நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த பரமனின் திருவடிகளில் சேரும் போது தான் கிடைக்கும்.ஆனால் அதற்கு நீ உன் கர்மாக்களை கழித்தால் தான் அந்த நிலையை அடைய முடியும் .”
எனக்கு புரியவில்லை பிரம்ம தேவரே கொஞ்சம் புரியும் படி கூறுங்கள்.
நீ செய்யும் பாவமோ அல்லது புண்ணியமோ இரண்டிற்கும் உண்டான பலன்கள் உண்டு .புண்ணியம் செய்தால் அதற்கான நல்ல பலன்களை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுத்து அதற்கு உண்டான சுகத்தை அனுபவிக்க வேண்டும்.பாவம் செய்தால் அதற்கு உண்டான கருமத்தை கழிக்க மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டும்.புண்ணியமோ ,பாவமோ இரண்டும் அற்ற நிலையில் கணக்கு சமமாகும் பொழுது உனக்கு முக்தி சித்திக்கும் .
புரிகிறது பிரம்ம தேவரே,எனக்கு எப்பொழுது முக்தி சித்திக்கும் ?
நீ இந்த பிறவியில் ஸ்தீரி லோலனாக இருந்து உள்ளாய் .பல பெண்களின் வாழ்வை நாசம் செய்து உள்ளாய் .உன்னால் பல உயிர்கள் பறிக்கபட்டுள்ளன.அதனால் அதற்கான கர்மாவை நீ தான் ,ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள பிறப்பு வரை எடுத்து அழிக்க வேண்டும் .அதாவது ஓரறிவு உள்ள புழு முதல் படிப்படியாக உயர்நிலை பெற்று ஆறறிவு உள்ள மனிதனாக ஆகும் வரை பல பிறப்புகள் எடுக்க வேண்டும்.
அப்போ நான் இதுவரை ஆயிரம் வருடங்களாக செய்து வந்த தவத்தின் பலன் எதுவும் கிடையாதா ?
பிரம்மா சிரித்து கொண்டே ,அவன் உடலில் இருந்த சக்தியை பிரிக்க அவனுடைய உயிரற்ற உடல் கீழே விழுந்தது.
அப்பொழுது அவன் ஆத்மாவை பார்த்த பிரம்ம தேவர் ” இதுவரை உன் ஆயிரம் வருடங்களாக தவம் செய்வதற்கான சக்தி அந்த ஈசன் உனக்கு இட்ட பிச்சை .அவரருள் இல்லை என்றால் உன்னால் இந்த தவமே செய்து இருக்க முடியாது .மீண்டும் அவன் உடலில் சக்தியை புகுத்த மீண்டும் அவன் பழைய உருவை அடைந்தான்.
மன்னித்து கொள்ளுங்கள் பிரம்ம தேவரே ,நான் சத்தியத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டேன்.எனக்கு எப்பொழுது முக்தி கிடைக்கும் ? என்று மட்டும் சொல்வீர்களா ?
கருணை கடலான ஈசன் , உன் பாவங்கள் ஏறக்குறைய முடிவடையும் தருணம் மனித பிறவி கொடுக்க அருளி உள்ளார் .அந்த பிறவியில் உனக்கு முக்தி கிடைக்கும் .
என்ன போயும் போயும் மானிட பிறவியா ?
முட்டாளே , நீ தேவனாக இருந்தாலும் கூட இறைவனை அடைய முடியாது.இறைவனை அடைய வேண்டும் என்றால் மனிதனாக பிறப்பெடுத்தால் மட்டுமே முடியும்.சில உயர்ந்த ஆத்மாக்களுக்கு அந்த இறைவனே நேரில் வந்து ஆட்கொண்டு தன்னிடம் சேர்த்து கொள்வான்.அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது .மேலும் அப்படி நீ மானிடனாய் பிறக்கும் பொழுது விட்டகுறை தொட்டகுறையாய் மேலும் சில பாவங்களை செய்ய நேரிடும் .அதில் உன் வாழ்நாள் பெரும்பகுதி கழியும்.அந்த நேரத்தில் நீ செய்த தவத்தின் பயனாக மூன்று மலரை போன்ற பெண்கள் உன் வாழ்க்கையில் வந்து சுகங்களை அள்ளி வழங்கி நல்வழிபடுத்துவர்.அந்த வாழ்வின் இறுதியில் நீ வேண்டி விரும்பி கேட்ட முக்தியும் கிடைக்கும்.
ரொம்ப நன்றி பிரம்ம தேவரே !
“ததாஸ்து” என்று கூறி பிரம்ம தேவர் மறைந்தார். இந்திரஜித்தின் உயிரற்ற உடல் கீழே விழ,உடனே இந்திரஜித் தனது முதல் பிறப்பான புழுவாக பிறப்பு எடுத்தான்.
இப்படி பல பிறப்புகள் எடுத்து இறுதியில் தன் கடைசி பிறப்பானா ஷெட்டி என்ற மனித பெயரோடு பிறந்து உள்ளான்.
நிகழ் காலத்தில் ,
தனிமைக்காக காத்து கொண்டு இருந்த ஷெட்டி அறையின் உள்ளே நுழைந்தவுடன் ஸ்ருதியை கட்டி அணைக்க ,
