ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப! 103

மாலை..!
பள்ளி விட்டு வீடு போனபோது..
ராசு வீட்டிற்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்.
வேலைக்குப் போன பாட்டி இன்னும் வரவில்லை.
ஸ்கூல் பேகை ஓரமாக வைத்ததும்.. அவனருகே போய் மண்டியிட்டு உட்கார்ந்து அவன் தோளைப் பிடித்து.. எழுப்பினாள்.
அவளைப் பார்த்த அவனது விழிகள் சிவந்திருந்தன.
”வந்துட்டியா.?” என்றான்.
”ம்..! நீ எங்க போன.. ராத்திரி பூரா..?” என ஆவலுடன் கேட்டாள்.
அவன் புன்சிரிப்புக்காட்டிவிட்டு. . மறுபடி கண்களை மூடினான்.
”தூங்கவிடு..”
” சொல்லிட்டு தூங்குடா..”
” நீ போய்.. உன்னோட ஆளப்பாரு..” எனப் புரண்டு அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான்.
”பரதேசி. .” என அவன் தோளில் ஒரு அடிவைத்து விட்டு எழுந்தாள்.

78

ராசு மறுபடி துங்கி விட்டான். அவனுக்கு முதுகு காட்டி நின்று.. பள்ளிச் சீருடையைக் கழற்றி விட்டு… நைட்டியை எடுத்து போட்டுக்கொண்டு. .. வெளியே போய்.. வீடு. . வாசல் எல்லாம் கூட்டினாள்.
பாத்ரூம் போய் சோப்புப் போட்டு முகம் கழுவினாள். வீட்டிற்குள் போய் முகத்துக்கு பவடர் அடித்துக் கொண்டு.. வெளியே போய் கோமளாவைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குப் போனாள்.

இருவரும் மறைவான பகுதிக்குப் போய்விட்டு. . வரும் போது.. அவர்கள் இருக்கும் இடத்துக்கு ரவி வந்தான்.
கொஞ்சம் மறைவான பகுதியில் நின்றனர்.
கோமளா கொஞ்சம் தள்ளி நிற்க… ரவி.. பாக்யாவிடம் வந்தான்.
” கறி நல்லாருந்துச்சா..?” எனக் கேட்டான்.
”கறியா..?” புரியாமல் அவனைப் பார்த்தாள்.
”மொசக்கறி.. நீ திங்கல..?”
” ஏது..?”
சிரித்தான் ”உங்காத்தா செஞசு வெச்சிருக்கும்..போய் பாரு. .! உங்க ராசு மாமா சொல்லல..?”
” இல்ல. . என்ன. .?”
”நேத்து நைட்டு நாங்க மொச வேட்டைக்கு போனப்ப.. ராசு தனியா வந்து வட்டப்பாறைல உக்காந்துருந்தான்.. வகுறு செரியில்லேன்னு..! அப்பறம் அவனாத்தான் வேட்டைக்கு வந்தான்..”
கண்களில் வியப்பைக் காட்டினாள். ”ஓ.. எப்ப வந்தீங்க?”
” காலைலதான். .”
”நைட்டு பூரா தூங்கவே இல்லியா..?”
” ம்கூம். ! ஆனா பரவால்ல ராசு நல்லா வேட்டையாடறான். .” என ரவி சொல்ல..
கோமளா ”அவன். . இவன்னு பேசாத..! ராசு உன்னவிட.. நாலஞ்சு வருசம் பெரியவன. தெரிஞ்சிக்கோ.” என்றாள்.
”அப்ப நீங்கள்ளாம்.. அவனே.. இவனேனு பேசறீங்க .? ”
” நாங்களும்… நீயும் ஒன்னா.?” என கோமளா முறைக்க..
பாக்யா சிரித்தவாறு அவள் கையைப் பிடித்தாள்.
”ஏய் நடடி போலாம்..”

வீட்டுக்குப் போனபோது.. பாட்டி வந்திருந்தாள். ராசு எழுந்திருந்தான். திண்ணைமேல் உட்கார்ந்து. பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
பாட்டி இருப்பதால் அவனோடு நேற்றைய இரவு சம்பவம் குறித்துப் பேச முடியவில்லை. பாட்டிக்கு சமையலுக்கு.. உதவினாள்.
அவளது தம்பியைக் காணாததால் பாட்டியிடம் கேட்டாள்.
”தம்பி வல்லியா ஆத்தா. .?”
” அவனுக்கு காச்சல் வந்து படுத்துட்டான்னு காலைல.. உங்க மாமானுக்கு போன் பண்ணி சொல்லிருக்கான்.!”
” ஆத்துல போய் நல்லா ஆடிருப்பான்..! காச்சல் வந்துருக்கும்..” என்றாள் பாக்யா.
” அடங்குவானா… அவன். .!”

சமையல் வேலை முடிந்தது. அனைவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்ட பின்….அவள் ஹோம் ஒர்க் எழுதத் துவங்க… ராசு எழுந்து வெளியே போனான்.

பாக்யா ஹோம் ஒர்க் எழுதி விட்டு… எழுந்து போனாள்.
ராசுவும். . கோமளாவும்.. கோவில் மேடைமேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
கோமளாவின் தோள்.. ராசுவின் தோளோடு..இணைந்திருந்தது.

”மேடமும்.. சாரும். . என்ன பண்றீங்க..?” என அவர்களை நெருங்கிப் போய்க் கேட்டாள்.

கோமளா ”ம்… பூப்பறிக்கறோம்” என்றாள்.
பாக்யா ‘ பக்’ கெனச் சிரித்தாள்.
கோமளாவும் சிரித்தாள்

”அதுக்கு ஏன்டி.. ரெண்டு பேரும் லூசுக மாதிரி சிரிக்கிறீங்க..?”எனக் கேட்டான் ராசு.
”அது ஒரு சூப்பர் வார்த்தை.. பூப்பறிக்கறது.. பூஜை பண்றது எல்லாம். .! இல்லடி..?”என்றாள் கோமளா.
”அடிப்பாவி..” பாக்யா ”ராசுக்கு தெரியாதுடி..”
கோமளா.” அது ஒரு காதல் வார்த்தை ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோமளாவின் அம்மா வந்து விட்டாள்.
அவளும் கோவில் மேடைமேல் உட்கார. .. அப்போதும் கோமளா ராசுவோடு ஒட்டிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தாள்

ராசுவுடன் நிறையப் பேசத்துடித்தாள் பாக்யா. ஆனால் இப்போது அது முடியாது.
‘சே சனியன்கள்..’ என மனதுக்குள் திட்டினாள்.

பாட்டி தூங்கிவிட்டாள். ராசு இன்னும் வரவில்லை. பொருமையிழந்த பாக்யா.. படுக்கையை விட்டு எழுந்து வெளியே போனாள்.
கோமளாவைக் காணவில்லை. அவளது அம்மாவும். . ராசுவும் ஏதோ ஒரு விசயத்தை.. மிகத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
பாக்யா பாத்ரூம் போய்விட்டு வந்து வாசலில் நின்றாள்.
லேசாகக் காற்று வீசிக்கொண்டிருக்க.. வானம் இருண்டிருந்தது.!

அவளைப் பார்த்த ராசு ”ஏன். ?” எனக் கேட்டான்.
வெறுமனே தலையசைத்தாள்.

கோவில் மேடையின் மறு பக்கம்.. படுக்கை விரித்து.. தூங்கத்தயாராகி… அவர்கள் பேசும் விசயதத்தை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா அவளைப் பார்த்துக் கேட்டார்.
” ஏன் புள்ள. .?”
”ஒன்னுல்ல.. தாத்தா. .”
” பாட்டியா தூங்கிட்டாளா..?”
” ம்…!”
” நீயும் போய் படு போ..”
அவள் அங்கேயே நிற்க..
ராசு ” உக்காரு வா..” எனக்கூப்பிட்டான்.
அப்போதும் அவள் அங்கேயே நிற்க… கோமளாவின் அம்மா எழுந்தாள்.
”சரி போய் படுக்கலாம்..”
” ம்..” அவனும் எழுந்தான்.

‘ அப்பாடா..’ என நினைத்தாள் பாக்யா.
அவளருகே வந்த ராசு ”ஏன் தூக்கம் வல்லியா..?” எனக் கேட்டான்.
அவன் தோளை இடித்து..”இவ்வளவு நேரமா அரட்டை. ?” எனக் கேட்டாள்.
”ம்..!” அவள் கன்னத்தில் தட்டிவிட்டு பாத்ரூம் போனான்.

பாக்யா வீட்டிற்குள் போனாள். திண்ணைமீது தூங்கிக்கொண்டிருந்த பாட்டி நன்றாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.
பாக்யா போய் பாயில் படுத்தாள்.
உள்ளே வந்த ராசு ”அதிசயமாருக்கு..” என்றான்.
அவனைப் பார்த்தாள் ”என்ன.?”
”எனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்க போலிருக்க.?”
” ம்..”
” அட.. ஏன்..?” அவனுககாக அவள் விரித்து விட்டிருந்த பாயில் …அவனும் படுத்தான்.
”நேத்து. . நைட்டு எங்க போன?”
” தெரியாத மாதிரி கேக்கற..?”
” நீ எதுக்கு போன..?”
” வேற என்ன பண்றது..? நீயும் என்னை வீட்டீக்குள்ள வரவேண்டாம்னு சொல்லிட்ட.. தூங்கவும் கூடாதுனு கன்டிசன் போட்டுட்ட..”
” நா.. ஒரு. .. இதுக்குத்தான் சொன்னேன். ..”
” நீ இதுக்கு சொன்னியோ.. இல்ல அதுக்கு சொன்னியோ.. ஆனா நா பண்ணது சேலஞ்ச்தான்..”
” ஆ.. பெரிய சேலஞ்சு..?”
” உன்னோட ஆளு வந்துருந்தான்..”
புரண்டு குப்புறப் படுத்தாள். ”அவன் சொல்லித்தான் எனக்கே தெரியும். .”
” எல்லா நியூஸும் வந்துருமே”
”காலைல உன்னக் காணம்னு.. கொஞ்சம் கவலப் பட்டேன்..”
” அப்படியா..?”
” என்ன லொப்படியா..? இந்த மேட்டர் மட்டும் கெழவிக்கு தெரிஞ்சிது… நான் தொலஞ்சேன்..”
”கவலப் படாத. . இது நம்ம ரெண்டு பேரத்தவற.. வேற யாருக்கும் தெரியாது..”
” நான் பயந்துட்டே இருந்தேன்”