ஓகே, ஆரம்பிப்போமா! 98

அடுத்து ஒரு மணி நேரம் நான் எனது வேலையிலும், அவள் அவளது வேளையிலும் ஆழ்ந்துவிட்டோம். எனது வேலையை கிட்டத்தட்ட முடித்துவிட்டு மீண்டும் காலை நடந்தவற்றை அசை போட ஆரம்பித்தேன். அவளை ஒரு செக்ஸியான கோலத்தில் பார்த்தோம் என்பது நினைவில் இருந்தது, ஆனால் அதன் முக்கிய அம்சங்கள் நினைவில் வர மறுத்தன. என்ன கலரில் பிரா அணிந்திருந்தாள்? என்ன ஷால் போட்டிருந்தாள்? எப்படி அணிந்திருந்தாள்? அவள் பிரா அவளது மார்புகளை எவ்வளவு மறைத்திருந்தது? ஒவ்வொறு கேள்வியும் என் உடலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அதிகமாகிக்கொண்டிருந்தன. இந்த எண்ண-ஓட்டங்களில் இருந்தததால், இந்த பில்டிங் வாட்ச்மன் மாரி உள்ளே வந்ததை நான் கவனிக்கவில்லை, வாட்ச்மன் வந்தனாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் பார்ப்பதை உணர்ந்ததும் “சார், ஒரு நிமிஷம்” என என்னையும் வந்தன்னா இடத்திற்கு வருமாறு வேண்டினான். என்னவாக இருக்கும் என எண்ணியவாரே எழுந்து அவர்களை நோக்கி சென்றேன். “சார் நான் ஒரு அவசர வேலையாக ஊருக்கு போவணும், நீங்க மதியம் லஞ்சிக்கு இருப்பிங்களா? ஏதாவது வேணுமான்னு சொன்னிங்கனா, வாங்கிவசிட்டு கிளம்புவேன்” என்றான். எங்கள் ஆபிசில் சனிக்கிழமை சிலர் மட்டும் வேலை பார்த்தால் வெளியே இருந்து லஞ்ச் வங்கித்தருவது கம்பெனி வழக்கம். பொதுவாக ஆபீஸ் பாய்ஸ் இந்த வேலைய பாத்துக்குவாங்க, ஆனா இன்னைக்கு பாய்ஸ் யாரும் இல்லாததுனால வாட்ச்மனுக்கு இந்த வேலை. “நீ போய்ட்டா யார் ஆபீஸ பார்த்துக்கறது மாரி?” என் சந்தேகம். “வெளிய கேட் வாட்ச்மன் இருப்பன், சார். receptionல வேற வேலை இல்ல. சிக்கிரம் இன்னக்கு விட்டுக்கு போனா பொஞ்சாதி சந்தோசப்படும். நாளைக்கு என் மவனுக்கு மொட்ட போட குல தெய்வ கோயிலுக்கு போவனும் சார்.” எனக்கு மதியம் இருக்க எந்த பிளானும் கிடையாது, அதுவும் வந்த வேலைய முடிச்சாச்சு லஞ்ச்செல்லம் வேண்டாம் என நினைத்துக்கொண்டே இறக்கும் போது “எனக்கு ஒரு தயிர் சாதம் மட்டும் வாங்கி வச்சிட்டு போயிரு மாரி” என்ற வந்தனாவின் குரல் என் முடிவை மாற்றியது. “எனக்கும் ஒரு சாப்பாடு வாங்கி வச்சிட்டு போயிரு மாரி”. என ஒரு சீரியஸாக வேலை இருப்பவனை போல வாட்ச்மனிடம் கட்டளையிட்டேன். “சரி சார், வாங்கி கீழ லஞ்ச் ஹால்-ல ஹாட் பக்கல வச்சிட்டு போய்ரேன், வேற எதுவும் வேணும்னா வாசல்ல கேட் வாட்ச்மன் முத்து இருப்பான் சார் அவன்ட்ட கேளுங்க, சரி சார் வரேன், வரேன் மேடம்” என விடைபெற்றுசென்றான். அவன் சென்றபின் வந்தனா என்னை குறு குறுவேன பார்த்தவாரே, “சார் சின்ன வொர்க் உடனே கிளம்பிருவிங்கன்னு சொன்னிங்க?” வாட்ச்மன்ட்ட பேசுன அதே தொனியில “இல்ல வந்தன்னா, அது இன்னும் முடியல நேரம் ஆகும் போல” என கூலாக சொன்னேன். “டேய், என்கிட்டேவா, நீ வொர்க் முடிச்சு, வொர்க் ஷீட், லாக் பண்ணினதா நான் தான் அப்பவே work-serverல பாத்தேனே……..?” அறுக்க போகும் ஆடு போல் மாட்டிகொண்டு முழித்தேன். “இல்ல, நீ ரொம்ப hard-work பண்ணறியே, ஒரு நல்ல டீம் மேட்டா ஹெல்ப் பன்னலாமேதான்…” என வழிந்தேன். கொஞ்ச நேரம் என்னை முறைத்து விட்டு, “சரி, ஒரு நல்ல டீம் மேட்டா, இந்த moduleல சரி செய்ய ஹெல்ப் பண்ணு பார்ப்போம்?” “ரொம்ப நேரமா என்ன பண்ணன்னு தெரியாம மாட்டிக்கிட்டு, இப்ப ஒருத்தேன் மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சாலும், அத வெளிய காட்டாம situationஅ நல்ல use பண்றதானே?” என கேட்க்க வந்து கேட்க்காமல், “வித் pleasure” என்று மட்டும் முடித்துக்கொண்டு அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன். “அப்ப சரி, கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துர்றேன், வந்து ஆரம்பிப்போம்” என்று கூறியவாரே, எழுந்து என் முன்னால் கேபினை விட்டு வெளியே வந்தாள், அவள் வெளியே செல்லும் போது அவள் ஷால், என் மீது லேசாக வருடிச்சென்றது

அப்பொழுதுதான், இதுதான் அவள் அந்த போட்டோவில் போட்டிருந்த ஷால் என்பது உரைத்தது. தேர் போல் அசந்து அவள் நடப்பதையே ரெஸ்ட் ரூம் போகும் வரை ரசித்துக்கொண்டிருந்தேன். பின் அப்படி என்னதான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள் என அவள் கணிணியை பார்க்கல்லாம், என கணிணியை screen-saver இல் இருந்து விளக்கிய எனக்கு அடுத்த அதிர்ச்சி. அவள் கணிணி desktopல் அவள் முகத்தையே background picture ஆக வைத்திருந்தாள். அதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை, அது எந்த போட்டோ என்பதில்தான் அதிர்ச்சியே. அந்த சிரிப்பும், முக பாவனையும், சிகை அலங்காரமும் எங்கோ பார்த்த மாதிரியே எனக்கு தோன்றியது. சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின்பே உரைத்தது. இதுவும் நான் காலையில் பார்த்த படம் தான், ஆனால் முகத்தை மட்டும் தனியே பிரித்து வைத்துள்ளாள். அவள் வந்தவுடன் இது உண்மைதானா என்று கண்டுபிடுத்துவிடவேண்டுமென காத்திருந்தேன். அவள் மீண்டும் வரும் வரை காத்திருப்போம்.சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம்லிருந்து வெளியே வந்தவள் முகத்தில், இன்னும் பொலிவு கூடியிருந்தது. கூந்தலை விரித்து விட்டிருந்தாள் , அளவான கூந்தல் அவள் தோள்களை படர்ந்திருந்தது. கழுத்தை படர்ந்திருந்த ஷாலை, இப்போது கழுத்திலிருந்து பின்புறமாக அணிந்துருந்தாள். அவள் நடந்து வரும் பொழுது அது பின்னோக்கி பறந்து கொண்டே வந்தது. வந்து என்னருகே இருந்த சேரில் அமர்ந்தாள், desktopல் இருந்த அவள் புகைப்படத்தைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சிறிய அதிர்ச்சி, கண்கள் சற்றே அகன்றது, நாசியும் விரிந்து சுவாசம் பலமானது, இதழ்கள் புன்னகையில் விரிவதா நாணத்தில் குருகுவதா என புரியாமல் திணறிக்கொண்டிருந்தன. அவள் சுதாரிக்கும்முன்னரே, நான், “போட்டோ நல்லாருக்கு, யார் எடுத்தா” என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டேன். ஒரு சில வினாடிகள் கழித்து தான், ஒரு முடிவுக்கு வந்தவள் போல, “நான்தான், எடுத்தேன்…” என இழுத்தாள். நானோ, “அப்படி தெரியலியே face மட்டும் க்ளோஸ்-upல இருக்கு இத எப்படி கண்ணாடியில் எடுக்க முடியும், எடுத்தா உன் கேமராவும் சேர்ந்து தானே வரும்”. நான் விடபோவதில்லை என உணர்ந்தவள், “கண்ணாடில எடுத்தேன், அப்புறமா face மட்டும் க்ளோஸ்-upல கட் பண்ணிகிட்டேன்.” உண்மை வெளியே வந்துவிட்டது. நான் சற்றே ஆச்சிரியப்பட்டவன் போல, “அப்பிடியா, nice ஒரிஜினல் போட்டோ இருக்கா, எனக்கு இன்னும் நம்ப முடியல”.