ஆனால் யாரிவள்..Part 2 63

” நீ அவ்ளோ அழகா இருக்க. உன்ன எந்த நேரமும் என் கூடவே வச்சுக்கணும் போலருக்கு.. !!”
” ம்ம். . ”
” நம்மளோட இந்த உறவு தப்பா சரியானு எனக்கு தெரியல.. ஆனா எனக்கு நீ வேணும்.. என் வாழ்க்கை முழுசுமா.. !!”
நான் சொல்ல அவள் கண்கள் மெல்லக் கலங்கியது. என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து பொத்திக் கொண்டு குரல் கமறச் சொன்னாள்..!
” எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.. ஆனா.. ஐ லவ் யூ.. ஸோ மச்.. !!”

பக்கத்தில் பார்த்து விட்டு என் கைக்கு மென்மையாக முத்தம் கொடுத்தாள் நிலாவினி. அந்த பார்க்கில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால்.. அதற்கு மேல் என்னால் அவளிடம் நெருக்கம் காட்ட முடியவில்லை. ஆனால்.. அவளைப் போலவே.. நானும் அவளின் மிருதுவான உள்ளங் கைகளுக்கு மென்மையாக முத்தங்கள் கொடுத்தேன்.. !!
” எனக்கு நீ வேணும் நிலா..” அவளை ஏக்கமாய் பார்த்தபடி சொன்னேன்.
” ம்ம் ” மெலிதாகப் புன்னகைத்தாள்.
” இப்பவே.. ” என்றேன்.
அவள் முகம் திகைப்புக்கு மாறியது.
” வாட் டூ யூ மீன்.. ?”
” நீ எனக்கு வேணும்… ”
” யூ.. மீன்.. ??”
” ப்ளீஸ்.. !!”
” இப்ப.. எப்படி… ?”
” எங்காவது.. தனிமையான இடத்துக்கு போலாமே.. ? ப்ளீஸ்.. !!”
அவள் என்னை அதே பார்வை பார்த்தாள். ஒட்டியிருந்த அவளது செவ்விதழ்கள் பிரிந்து.. மெல்ல நடுங்கின. அவள் கைகளில் திடீரென மெலிதான ஒரு நடுக்கம் வந்திருந்தது. எனக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.!
” ப்ளீஸ் நிலா.. ! உன்னை இப்படியே உன வீட்டுக்கு அனுப்பிட்டா.. இந்த நைட் நான் ஏக்கத்துலயே செத்துருவேன்.. !”அவள் விரல்களைப் பிண்ணியபடி சொன்னேன்.
” என்னை என்ன பண்ண சொல்றிங்க.. ?” அவள் குரலிலும் அந்த ஏக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது.
” எங்கயாவது தனியா.. யாரும் வந்து தொந்தரவு பண்ணாத எடமா போலாம்.. ப்ளீஸ்..”
” எனக்கு பயமா இருக்கு.”
” என்ன பயம்.. ?”
” தெரியல..! மனசு பதறுது.. ஒடமபெல்லாம் நடுங்குது.. !!”
” என்னை கட்டிப் புடிச்சுக்கோ.. இறுக்கமா.. ?”
மெல்லச் சிரித்தாள்.
” இந்த பயம்கூட அதனாலதான்னு நெனைக்கறேன்..”
” ப்ளீஸ் நிலா.. எனக்கு நீ வேணும்மா.. ”
அவள் மறுக்கவில்லை. ஆனால் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

” போலாமா ?”
” ம்ம்.. !!” தலையை ஆட்டினாள்.
” தேங்க்ஸ்மா.. ”
நான் அவள் கையைப் பிடித்தபடி எழுந்தேன். அவளும் எழுந்தாள். என்னிடமிருந்த கைகளை விடுவித்து துப்பட்டாவை சரி செய்தாள்.
” எங்க போறோம்.. ?” மிகவும் மெல்லிய குர்லில் கேட்டாள்.
” எங்காவது தனிமையான ஒரு இடம்.. ”
” அப்படி ஒண்ணு இருக்கா.. ?”
” தெரியல…! தேடிட்டே போகணும்.. !!”
”அது ரிஸ்க் இல்லையா. ?”
” ரிஸ்க்தான்.. பட்.. வேற என்ன பண்றது.. ?”
” நான் ஒண்ணு சொன்னா கோபப் படாம கேப்பிங்களா.. ?”
” ம்ம்.. சொல்லு.. ?”
” வெளிய எங்கயும் வேண்டாம்.. !”
” ம்ம்.. ?”
” எங்க வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி.. அவுட் சைடுல ஒரு காடு இருக்கு. நைட் டைம்ல மேக்ஸிமம் அங்க யாரும் வர மாட்டாங்க. ! நம்ம வீட்டுக்கு பக்கம்ன்றதால அது கொஞ்சம் சேப்டியாவும் இருக்கும். ஆனா.. நைட் ஆகணும்.. !!”
அவளது சம்மதம் என் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் சொல்லும் இடமும் நேரமும்தான் எனக்கு சிக்கலாகத் தோன்றியது. நான் யோசனையாக அவளைப் பார்த்தேன். ! அவள் என்னைப் பார்த்தாள். !
” புடிக்கலியா.. ?”
” ச்ச.. அப்படி இல்ல.. ! டைமிங்தான்.. யோசனையா இருக்கு.. !”
” ம்ம்.. !!”
மெல்ல நடந்தோம்.
”இப்படி பண்ணா என்ன நிலா.. ?”
” எப்படி. . ?”
” இன்னும் டைம் இருக்கு. ஏதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல போய்.. ஒரு ரெண்டு மணி நேரம் ரூம் போட்டு.. அப்பறம் போலாமா. ?”
நான் சொல்லி முடிக்க.. உடனே சொன்னாள்.
” இல்ல வேணாம்.. !! நான் மாட்டேன் .!!”

” ஏன் நிலா.. ?”
” படு கேவலமா இருக்கு..”
” ஸாரி நிலா.. ”
” பரவால.! அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. ! நான் மாட்டேனு சொல்லல. ஆனா.. அதுக்காக.. இப்படி சீப்பா நடந்துக்க எனக்கு விருப்பம் இல்ல.. !”
” ம்ம்..! ஸாரி.. ! ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. !!”
” இன்னும் கூட ஒரு பெட்டரான வழி இருக்கு ”
” என்ன.. ?”